LatestNews
சாதனை படைக்கும் கல் சிற்பி முருகன்
கல்லிலே கோவில் மணி, சோழர் கால தொங்கும் விளக்கு, தொங்கும் செயினில் உள்ளே சுழலும் கல் உருண்டை என சாதனை படைக்கும் திருப்பரங்குன்றம் கல் சிற்பி. முருகன்.
திருப்பரங்குன்றத்தில் உள்ள கலைவாணி சிறப் கலைகூடத்தில் பழம் பெருமை வாய்ந்த கற்சிற்பங்களை புதிய தொழில் நுட்பம் மூலம் உருவாக்கும் கைவினைஞர்கள்.
தமிழக அரசின் அங்கீகாரத்திற்கு காத்திருப்பு.
ஊக்குவிக்குமா? தமிழக அரசின் தமிழ் மற்றும் கலை பண்பாட்டு துறை?
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பகுதியை சேர்ந்தவர் ஐயாக்குட்டி முருகன் வயது 56 இவர் பாரம்பரிய மற்றும் பரம்பரை சிற்ப கலைஞர் .
இவரது கலைவாணி சிற்ப கலைக்கூடம் திருப்பரங்குன்றம் புறவழி சாலையில் அமைந்துள்ளது.
இங்கு 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
முருகனின் அயராத உழைப்பால் பழம்பெருமை பேசும் வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் தொங்கும் ஒரே கல்லில் ஆன சரவிளக்கு. இது போல் மற்றொரு தொங்கும் சரளத்தில் கீழே கல் உருண்டை சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது .மேலும் ஒரே கல்லில் மணி ஒன்று செய்யப்பட்டு அதன் உள் நாக்கும் பொருத்தப்பட்டுள்ளது.
மிகவும் கடினமான வேலையை தனது புதிய தொழிநுட்பத்தின் மூலம் உருவாக்கி உள்ளார்.
இதுகுறித்து முருகன் கூறுகையில் தமிழக கலை மற்றும் பண்பாட்டில் சோழர் கால நாகரிகம் மிகவும் பெருமை வாய்ந்தது.
அவர்கள் கட்டிய கற்கோபுரங்கள் உலகளாவிய பெருமை பெற்றுள்ளது. தஞ்சை பெரிய கோபுரம். ஜெயங்கொண்டம் ராஜராஜ சோழபுரம் ஆகியவற்றில் அமைந்துள்ள கற்சிலைகள் மிகவும் துல்லியமாக தொழில்நுட்பத்துடன் நமது பாரம்பரியத்தின் கலை வெளி உலகிற்கு தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது .
ஸ்ரீரங்கத்தில் உள்ள கோபுரங்கள் மற்றும் கோயில் சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக உள்ளன.
இதனை முன்மாதிரியாக வைத்து 3அடி உள்ள கல்லில் தொங்கும் சரவிளக்கு (செயின் விளக்கு) எங்களது கடின முயற்சியில் 4 அடி உயரமுள்ள விளக்கு தயாரித்துள்ளோம். இதனை படைப்பதற்கு மிகவும் சிரமாக இருந்தது. பல்வேறு கட்ட முயற்சிக்கு பின் பல கற்கள் உடைந்து பின்னர் உருவாக்கினோம்.
இதேபோல் தொங்கும் சரள குடுவையின் உள்ளே சூழலும் கற் உருண்டை இருக்குமாறு தயாரித்துள்ளோம்.
இதேபோல் ஒன்னே கால் அடி ( 15 "இன்ஞ் ) உயரமும், 1 அடி விட்ட முள்ள மணி ஒன்றும் உருவாக்கியுள்ளோம். இதனுள் மணியின் நாக்கு பகுதி பொருத்துவது மிகவும் கடினமான பணியாகும் அதனை முயற்சி செய்து வெற்றிகரமாக இதனை உருவாக்கியுள்ளோம்.
இதனால் எங்களுக்கு ஏகப்பட்ட பொருட் செலவு ஏற்பட்டது.
இதெல்லாம் உருவாகியது நமது தமிழர்களின் கலை மற்றும் பண்பாட்டு வெளி உலகிற்கு தெரியும் வகையில் இதனை உருவாக்கியுள்ளோம்.
தமிழக அரசு எங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து உதவி புரியவேண்டும் கற்கள் கிடைப்பதில் நிறைய சிரமங்கள் உள்ளன குவாரியில் இருந்து கற்கள் கிரஷர் ஜல்லிக்கு மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
இதனால் எங்களுக்கு கற்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு கற்கள் கிடைப்பதில் உரிய நடவடிக்கை செய்து தருமாறும். நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மேலும் பல பழைய சிற்பங்களை புதிய தொழில்நுட்பத்துடன் உருவாக்க எங்களுக்கு வாய்ப்பு அளிக்குமாறும்.உருவாக்கிய கற் சிற்பங்களை அரசின் பூம்புகார் நிறுவனம் மற்றும் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை மூலம் விற்பனை செய்ய எங்களுக்கு உதவி செய்தால் அழிந்துகொண்டிருக்கும் இந்த கலை மேலும் வளர்ந்து பெருமை சேர்க்கும் திருப்பரங்குன்றம் கலைவாணி சிற்பக் கலைக்கூடம் .
LatestNews
போலீஸ் கொடி அணிவகுப்பு…

திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள அவனியாபுரம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொடி அணிவகுப்பு பேரணி :
மதுரை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி மேல்நிலைப் பள்ளியில் இருந்து கொடி அணிவகுப்பு புறப்பட்டு அவனியாபுரம் பேருந்து நிலையம் கணக்குப்பிள்ளை தெரு பெரியார் நகர் இம்மானுவேல் நகர் பிரசன்னா காலனி வழியாக அவனியாபுரம் சிஎஸ் நகரில் பேரணி முடிவு பெற்றது.
இதில் , மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் துணை கமாண்டன்ட் ஜிந்தா தலைமையில் 75 வீரர்களும் , திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர் சிவராஜ் பிள்ளை மற்றும் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பெத்துராஜ், சார்பு ஆய்வாளர் தண்டீஸ்வரர், தமிழ்ச்செல்வம் அடங்கிய போலீசார் கொடி அணிவகுப்பு பேரணியில் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய சிறப்பு காவல் படை வீரர்கள் அணி வகுப்பை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
LatestNews
வாக்கு மையங்கள் ஆய்வு…

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தேர்தல் வாக்கு மையங்கள் ஆய்வு:
சோழவந்தான்
வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் மற்றும் தென்கரை வருவாய் உட் கோட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள வாக்குச் சாவடி மையங்களை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். இதில், வாடிப்பட்டி தாசில்தார் பழனி குமார் தலைமை நில அளவையாளர் செந்தில் தேர்தல் துணை வட்டாட்சியர் இசக்கிமுத்து வருவாய் ஆய்வாளர்கள் அழகுகுமார் ராஜன் கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயப்பிரகாஷ் முத்துக்குமரன் மணிவேல் சூசைஞானசேகரன் முபரக் சுல்தான் பழனி வெங்கடேசன் கார்த்திக் செல்வமணி சுரேஷ் கார்த்திஸ்வரி முத்துராமலிங்கம் பாண்டி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர் .
மொத்த வாக்காளர்கள் 2180 87 இதில், ஆண்கள் வாக்காளர்கள் 107097 பெண் வாக்காளர்கள் 110 363 மற்றவர்கள் 10 மொத்த வாக்கு மையம் 126 உள்ளன இதில் 70 மையங்களை பார்வையிட்டனர் கட்டட தன்மை கழிப்பறை வசதி மின்வசதி காற்றோட்ட வசதி உட்பட அடிப்படை வசதிகள் எவ்வாறு உள்ளன என்று ஆய்வு செய்தனர்
LatestNews
களைகட்டிய மாசி பொங்கல் விழா..

சிவகாசி பகுதிகளில் களை கட்டிய மாசி தெருக்கட்டுப் பொங்கல் விழா…..
சிவகாசி :
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாசி மாத தெருக்கட்டுப் பொங்கல் விழா களைகட்டியுள்ளது. சிவகாசி பகுதி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் தெருக்கட்டுப் பொங்கல் என்று கூறப்படும், முத்தாலம்மன் திருவிழா அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு தெருவிலும் நான்கு வீதிகள் சந்திக்கும் இடத்தில், மண் மற்றும் மஞ்சள், சந்தனத்தால் ஆன முத்தாலம்மன் உருவம் வடிவமைக்கப்பட்டு ஐந்து நாட்கள், 7 நாட்கள் தொடர்ச்சியாக பூஜைகள் நடத்தப்படும். இதற்காக தெருக்கள் முழுவதும் வேப்பிலை தோரணம் கட்டப்பட்டு, காப்பு கட்டி விரதம் இருந்து வருவார்கள். பெண்கள் நேர்த்திகடன் விரதம் இருந்து முளைப்பாரி வளர்த்து வருவார்கள். விழாவி்ன் நிறைவு நாளன்று தங்களது பகுதிகளிலிருந்து, சிவகாசி நகரில் நான்கு ரதவீதிகளில் முளைப்பாரி, பால்குடங்கள் ஏந்தி கருப்பசாமி கோவில், மாரியம்மன் கோவில், பத்திரகாளியம்மன் கோவில்களுக்கு ஊர்வலமாக சென்றுவந்து தங்களது பகுதியில் உள்ள முத்தாலம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள். பின்னர் பூரண அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தெருக்களில் உள்ள மக்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்வார்கள். சிறப்பு பூஜைகள் முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும். தெருக்கட்டுப் பொங்கல் ஆரம்பித்த நாள் முதல் தினமும் சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். ஒவ்வொரு தெருவில் இருக்கும் பலதரப்பட்ட மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, இந்த தெருக்கட்டுப் பொங்கல் விழா நடத்தப்படுவதாக கூறுகின்றனர். சிவகாசி நகர் பகுதியில் மட்டும் நடந்துவந்த தெருக்கட்டுப் பொங்கல், தற்போது சிவகாசியை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.