LatestNews
போலீஸார் குடும்பத்துக்கு நிதியுதவி:

திருநகர் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்துவரும்
N.நாகேந்திரன் என்பவர் பக்கவாதம் ஏற்பட்டு கடந்த 11 மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்து வந்தவருக்கு நெஞ்சுவலியும் ஏற்பட்டு தற்போது மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் இருதய அறுவைசிகிச்சை செய்து தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டுவந்தார். கடந்த 11 மாதம் தொடர் சிகிச்சை முடித்து இரண்டு மாதங்களுக்கு முன்பு மீண்டும் பணிக்கு அறிக்கை செய்தவருக்கு மறுபடியும் உடல்நிலை சரியில்லாமல் வேலம்மாள் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவருக்கு மூளையில் இரத்தம் உறைந்து அடைப்பு ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அதனை அறுவை சிகிச்சை மூலமாக சரி செய்யப்பட்டது.அவருக்கு மருத்துவ காப்பீட்டு தொகை போக அதிகமாக மருத்துவ செலவு செய்து தொடர் சிகிச்சைக்கு அவரது குடும்பம் மிகுந்த சிரமத்தில் இருந்து வந்தது அதனை கேள்விப்பட்டு துயர்போக்க மதுரை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் அனைவரும் இணைந்து ரூ.2,25,500/- யை சிறப்பு சார்பு ஆய்வாளர் N.நாகேந்திரன் மனைவி. கோமதியிடம் மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா இன்று 04.08.2020-ம் தேதி காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து வழங்கி அவரது குடும்பத்தினருக்கு விரைவில் அவர் பூரண குணமடைந்து வீட்டிற்கு வருவார் என்றும் ஆறுதல் வார்த்தை கூறினார்.
LatestNews
மாடு முட்டி ஒருவர் பலி

உலகப் புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – மாடு முட்டியதில் ஒருவர் பலி:
மதுரை
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா காணும் பொங்கல் நாளான நேற்று சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது. தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பச்சை கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் 711 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. ஒரு சுற்றுக்கு 75 நபர் வீதம் மொத்தம் 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். மாடுபிடி வீரர்களும் காளை உரிமையாளர்களும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மிக்க வீட்டு உபயோகப் பொருட்களை பரிசாக பெற்று சென்றனர். மேலும் ,இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 48 பேர் காயமடைந்தனர். இவர்களில் , 14 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் , வாடிவாசல் வழியாக காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. இந்த காளைகள் அனைத்தும் வெளியே வந்து முடிவில் காளைகளை படிப்பதற்கு அமைக்கப்பட்ட இடத்தில் காளை உதவியாளர்கள் நின்று அந்த காளைகளை பிடித்துச் சென்றனர். இப்படி காளைகளை பிடிக்க முயன்றபோது காளை தாக்கியதில் ஒரு நபருக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந் நிலையில், இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விசாரணையில் அவர் அலங்காநல்லூர் அருகே உள்ள காந்தி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் நவமணி (24) கட்டிட தொழிலாளி என்பதும் இவர் காளைக்கு உதவியாளராக வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
LatestNews
பத்திரிக்கையாளர் தாக்கு.

கோவை : கோவையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளரை தி.மு.க.,வினர் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குறிச்சி பகுதியில் நேற்று திமுக சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக., எம்.பி., ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். பொங்கல் விழா என்பதால் அந்த இடத்திற்கு செய்தியாளர் சந்திரசேகர் என்பவர் செய்தி சேகரிக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த திமுக.,வினர் சந்திரசேகரை மிரட்டியதோடு புகைப்படம் எடுக்க கூடாது என்று கூறி அவரை தாக்கியுள்ளனர்.
LatestNews
தலையாரிக்கு அரிவாள் வெட்டு..
சிவகங்கை தாலுகா அலுவலகம் முன்பு கிராம தலையாரிக்கு அரிவாள் வெட்டு. மருத்துவமனையில் அனுமதி.
சிவகங்கை அருகே பெரிய கோட்டை வழுதனி கிராமத்தில் தலையாரியாக பணிபுரிந்து வருபவர் பாண்டியன். இவர் பணிபுரியும் எல்லைப்பகுதியில் மாட்டு வண்டியில் சட்டவிரோதமாக சிலர் மணல் அள்ளி கடத்தியுள்ளனர்.இது குறித்து தலையாரி பாண்டியன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த புது குலத்தை சேர்ந்த சிவா மற்றும் அவரது நண்பர்கள், சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் இருந்த தலையாரியை அழைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அரிவாளால் தலையாரியின் கையில் வெட்டி விட்டு தப்பி ஓடி யுள்ளனர். தலையாரியின் அலறலைக் கேட்ட தாலுகா அலுவலக ஊழியர்கள் உடனடியாக அவரை சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுளார்.சம்பவம் குறித்து தலையாரி பாண்டி அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த சிவகங்கை நகர காவல் நிலையத்தினர் தப்பி ஓடிய சிவா மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
LatestNews1 month ago
கோவை வள்ளல் சாந்தி கியர்ஸ் உரிமையாளர் இற ைவனடி சேர்ந்தார்.
-
LatestNews3 months ago
வீட்டுக்குள் புகுந்து உடும்பு பிடிபட்டத ு..
-
LatestNews3 months ago
மதுரை அருகே நந்தனார், வள்ளுவர் சிலை கண்ட ுபிடிப்பு…
-
LatestNews3 months ago
தேவர் சிலை அலங்கரிப்பு..
-
LatestNews4 months ago
பாலியல் பகுதியாக மாறி வரும் வாடிப்பட்டி?