LatestNews
லஞ்சம்: வருவாய் ஆய்வாளர் கைது
*2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஆர் ஐ கைது.*
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சமூக நல பாதுகாப்பு திட்ட அலுவலக ஆர் ஐ கையும் களவுமாக பிடிபட்டார். ராமநாதபுரம் மாவட்டத்தில் சமீபத்தில் இறந்து போன சோமு என்பவர் உழவர் பாதுகாப்பு அட்டை வைத்திருந்தார். அவருடைய இறப்பிற்கு தமிழக அரசால் வழங்கப்படும் 20 ஆயிரம் ரூபாயை பெற சமூக பாதுகாப்பு திட்ட அலுவலக வட்டாட்சியரிடம் விண்ணப்பித்து பெறவேண்டும். இதற்காக சோமுவின் மனைவி சேது மற்றும் சோமுவின் தம்பி மகன் தனசேகரன் ஆகியோர் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் உழவர் அட்டையின் நகலையும் இணைத்து சோமுவின் இறப்பிற்கு அரசு வழங்கும் 20 ஆயிரம் ரூபாய் உதவியை பெற விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பத்தை பெற்ற அலுவலக ஆர் ஐ ஈஸ்வரன் என்பவர் அந்த மனுவை வட்டாட்சியருக்கு அனுப்பி 20,000 ரூபாய் அரசு வழங்கும் நிதியை பெற தனக்கு 2000 ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டு பல நாட்களாக அவர்களை அலைய வைத்துள்ளார். இதுபற்றி தகவல் கிடைக்கப் பெற்றவுடன் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் உன்னி கிருஷ்ணன் தலைமையில் போலீசார் ஆர் ஐ ஈஸ்வரன் இறந்து போன சோமுவின் உறவினர் தனசேகர் என்னிடம் 2,000 ரூபாய் லஞ்சம் பெறும்போது கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் லஞ்ச ஒழிப்பு போலீசார் இதுபற்றி கூறும்போது ஏழை விவசாயி சோமுவின் இழப்பிற்கு அவர் விவசாயி என்ற அடிப்படையில் அரசு வழங்கும் 20000 ரூபாய் உதவி தொகையை பெற மனு செய்த சோமுவின் உறவினர்களிடம் லஞ்சம் தந்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்பதாகவும் உயர் அதிகாரிகளுக்கு மனுவை அனுப்பி வைப்பதாகவும் இல்லையெனில் உதவித்தொகை பெற இயலாது என்றும் கூறி அலைக்கழித்து உள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத தனசேகரன் லஞ்ச ஒழிப்பு காவல்துறை கண்காணிப்பாளரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து லஞ்சம் பெறும் போது ஈஸ்வரனை கையும் களவுமாக கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் சமீபத்தில்தான் டிஎன்பிஎஸ்சி மூலம் நேரடியாக நியமனம் பெற்றவர் என்றும் கூறப்படுகிறது. மிகவும் இளம் வயது உடைய நிலையில் rs.2000 லஞ்சத்திற்கு தன்னையே அழித்துக் கொண்டவர் ஆர் ஐ ஈஸ்வரன் என்றும் ஏழை விவசாயின் இறப்பிற்கு அரசு வழங்கும் இருபதாயிரம் உதவித்தொகையில் இரண்டாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு மிரட்டி வந்த நிலையில் இன்று லஞ்ச ஒழிப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
LatestNews
சகதியில் சிக்கி தவித்த மாடு மீட்பு…

வடுகபட்டியில்
சேறுசகதியில்சிக்கிதவித்த
பசுமாடு மீட்பு:
வாடிப்பட்டி,மார்ச்:4.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடுகபட்டி முத்தாலம்மன்கோவில்தெருவை
சேர்ந்தவர் பெரியகருப்பன் மகன் பவுன் பாண்டியன்(35)விவசாயி. இவர் பசுமாடு
வளர்த்துவருகிறார் அந்த மாடு தற்போது சினைபிடித்துள்ளது. இந்நிலையில்
நேற்று காலை 10மணிக்கு வடுகபட்டி அரிசிஆலை எதிரில் உள்ள
பெரியாறுபாசனகால்வாய் ஓடையில் மாட்டினை குளிப்பாட்டிக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சேரும்சகதியும்நிறைந்த புதைகுழிக்குள் மாடு
சிக்கிக்கொண்டது. உடனே அதை மீட்கமுயற்சித்தார் அவரால் முடியவில்லை. அந்த
புதைகுழியில் மாட்டின் கால்முழுவதும் உள்ளே இழுத்துக்கொண்டது இதனால், மாடு
எழமுடியாமல் அவதியடைந்தது.
இது சம்மந்தமாக தகவலறிந்த, வாடிப்பட்டி
தீயணைப்பு நிலைய அதிகாரி சதகத்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள்
1மணிநேரம் போராடி புதைகுழிக்குள் சிக்கியிருந்த சினைமாட்டினை மீட்டனர்.
LatestNews
போலீஸ் கொடி அணிவகுப்பு…

திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள அவனியாபுரம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொடி அணிவகுப்பு பேரணி :
மதுரை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி மேல்நிலைப் பள்ளியில் இருந்து கொடி அணிவகுப்பு புறப்பட்டு அவனியாபுரம் பேருந்து நிலையம் கணக்குப்பிள்ளை தெரு பெரியார் நகர் இம்மானுவேல் நகர் பிரசன்னா காலனி வழியாக அவனியாபுரம் சிஎஸ் நகரில் பேரணி முடிவு பெற்றது.
இதில் , மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் துணை கமாண்டன்ட் ஜிந்தா தலைமையில் 75 வீரர்களும் , திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர் சிவராஜ் பிள்ளை மற்றும் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பெத்துராஜ், சார்பு ஆய்வாளர் தண்டீஸ்வரர், தமிழ்ச்செல்வம் அடங்கிய போலீசார் கொடி அணிவகுப்பு பேரணியில் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய சிறப்பு காவல் படை வீரர்கள் அணி வகுப்பை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
LatestNews
வாக்கு மையங்கள் ஆய்வு…

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தேர்தல் வாக்கு மையங்கள் ஆய்வு:
சோழவந்தான்
வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் மற்றும் தென்கரை வருவாய் உட் கோட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள வாக்குச் சாவடி மையங்களை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். இதில், வாடிப்பட்டி தாசில்தார் பழனி குமார் தலைமை நில அளவையாளர் செந்தில் தேர்தல் துணை வட்டாட்சியர் இசக்கிமுத்து வருவாய் ஆய்வாளர்கள் அழகுகுமார் ராஜன் கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயப்பிரகாஷ் முத்துக்குமரன் மணிவேல் சூசைஞானசேகரன் முபரக் சுல்தான் பழனி வெங்கடேசன் கார்த்திக் செல்வமணி சுரேஷ் கார்த்திஸ்வரி முத்துராமலிங்கம் பாண்டி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர் .
மொத்த வாக்காளர்கள் 2180 87 இதில், ஆண்கள் வாக்காளர்கள் 107097 பெண் வாக்காளர்கள் 110 363 மற்றவர்கள் 10 மொத்த வாக்கு மையம் 126 உள்ளன இதில் 70 மையங்களை பார்வையிட்டனர் கட்டட தன்மை கழிப்பறை வசதி மின்வசதி காற்றோட்ட வசதி உட்பட அடிப்படை வசதிகள் எவ்வாறு உள்ளன என்று ஆய்வு செய்தனர்