LatestNews
கல்வி கட்டணத்தை செலுத்த உதவுமாறு கலெக்டர் அலுவலகத்தில் மாணவி தஞ்சம்


*கொரானா ஊரடங்கு எதிரொலி பள்ளி கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் பத்தாம் வகுப்பு படிக்கும் மகளோடு தாயும் தந்தையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி கேட்டு தஞ்சம்*
மதுரை:
கொரானா வைரஸ் தொற்றின் எதிரொலியாக தொழிலதிபர்கள் தொடங்கி சாதாரண நடுத்தர குடும்பத்தினர், ஏழை எளிய மக்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மதுரை மேலூர் பகுதியை சேர்ந்த தம்பதிகள் பேச்சியம்மாள், சோலைப்பாண்டி. இவர்களுக்கு இரண்டு மகன்களும், சோனாலி பானர்ஜி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் சோலைப்பாண்டி தையல் தொழிலும், பேச்சியம்மாள் கூலி வேலையும் பார்த்து மூத்த மகள் நன்றாக இந்தியை கற்றுக்கொண்டதால், அவரை பிரபலமான தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் சேர்த்து 7 முதல் 10 வகுப்பு வரை படிக்க வைத்துள்ளார்.
சோனாலி பானர்ஜி படிப்பில் கெட்டிக்காரராக இருந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வில் 444 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்தார்.
இந்நிலையில் பதினொன்று வகுப்புக்கு லட்சக்கணக்கில் பள்ளிக்கட்டணம் கட்ட வேண்டிய நிலை இருப்பதாலும், தற்போது கொரானா ஊரடங்கால் தொழில் சரிவர இல்லையென்பதாலும் மகளுக்கு பள்ளிக்கட்டணம் செலுத்த முடியாமல் வறுமையில் வாடியுள்ளனர்.
நல்ல மதிப்பெண்களை பெற்று மிகச்சிறந்த மாணவியாக சோனாலி பானர்ஜி இருந்தபோதிலும், அடுத்த வகுப்பிற்கு செல்ல பணம் இல்லாமல் தவித்து வருகிறார். பெற்றோர் இத்தனை நாட்களாக கூலி வேலை செய்து அதில் கிடைத்த பணத்தை வைத்தே பள்ளிக்கட்டணம் செலுத்திய நிலையில், தற்போது வேலை இல்லாத நிலையில் ஒரு வேளை உணவுக்கும் கஷ்டப்பட்டு இருப்பதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தனியார் பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் செலுத்த முடியாத காரணத்தினால் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மகளை சேர்க்க மதுரை ஆட்சியர் வினயின் உதவியை நாடி மகள் சோனாலி பானர்ஜியின் மதிப்பெண் சான்றிதழோடு தந்தையும் தாயும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தாருந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
ஊரடங்கால் மகளின் கலேவி தடைப்பட்ட நிலையில் இறுதி முயற்சியாக ஆட்சியர் உதவி செய்ய கோரி கூலிகளான தாயும் தந்தையும் காத்திருந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
LatestNews
சகதியில் சிக்கி தவித்த மாடு மீட்பு…

வடுகபட்டியில்
சேறுசகதியில்சிக்கிதவித்த
பசுமாடு மீட்பு:
வாடிப்பட்டி,மார்ச்:4.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடுகபட்டி முத்தாலம்மன்கோவில்தெருவை
சேர்ந்தவர் பெரியகருப்பன் மகன் பவுன் பாண்டியன்(35)விவசாயி. இவர் பசுமாடு
வளர்த்துவருகிறார் அந்த மாடு தற்போது சினைபிடித்துள்ளது. இந்நிலையில்
நேற்று காலை 10மணிக்கு வடுகபட்டி அரிசிஆலை எதிரில் உள்ள
பெரியாறுபாசனகால்வாய் ஓடையில் மாட்டினை குளிப்பாட்டிக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சேரும்சகதியும்நிறைந்த புதைகுழிக்குள் மாடு
சிக்கிக்கொண்டது. உடனே அதை மீட்கமுயற்சித்தார் அவரால் முடியவில்லை. அந்த
புதைகுழியில் மாட்டின் கால்முழுவதும் உள்ளே இழுத்துக்கொண்டது இதனால், மாடு
எழமுடியாமல் அவதியடைந்தது.
இது சம்மந்தமாக தகவலறிந்த, வாடிப்பட்டி
தீயணைப்பு நிலைய அதிகாரி சதகத்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள்
1மணிநேரம் போராடி புதைகுழிக்குள் சிக்கியிருந்த சினைமாட்டினை மீட்டனர்.
LatestNews
போலீஸ் கொடி அணிவகுப்பு…

திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள அவனியாபுரம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொடி அணிவகுப்பு பேரணி :
மதுரை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி மேல்நிலைப் பள்ளியில் இருந்து கொடி அணிவகுப்பு புறப்பட்டு அவனியாபுரம் பேருந்து நிலையம் கணக்குப்பிள்ளை தெரு பெரியார் நகர் இம்மானுவேல் நகர் பிரசன்னா காலனி வழியாக அவனியாபுரம் சிஎஸ் நகரில் பேரணி முடிவு பெற்றது.
இதில் , மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் துணை கமாண்டன்ட் ஜிந்தா தலைமையில் 75 வீரர்களும் , திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர் சிவராஜ் பிள்ளை மற்றும் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பெத்துராஜ், சார்பு ஆய்வாளர் தண்டீஸ்வரர், தமிழ்ச்செல்வம் அடங்கிய போலீசார் கொடி அணிவகுப்பு பேரணியில் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய சிறப்பு காவல் படை வீரர்கள் அணி வகுப்பை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
LatestNews
வாக்கு மையங்கள் ஆய்வு…

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தேர்தல் வாக்கு மையங்கள் ஆய்வு:
சோழவந்தான்
வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் மற்றும் தென்கரை வருவாய் உட் கோட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள வாக்குச் சாவடி மையங்களை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். இதில், வாடிப்பட்டி தாசில்தார் பழனி குமார் தலைமை நில அளவையாளர் செந்தில் தேர்தல் துணை வட்டாட்சியர் இசக்கிமுத்து வருவாய் ஆய்வாளர்கள் அழகுகுமார் ராஜன் கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயப்பிரகாஷ் முத்துக்குமரன் மணிவேல் சூசைஞானசேகரன் முபரக் சுல்தான் பழனி வெங்கடேசன் கார்த்திக் செல்வமணி சுரேஷ் கார்த்திஸ்வரி முத்துராமலிங்கம் பாண்டி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர் .
மொத்த வாக்காளர்கள் 2180 87 இதில், ஆண்கள் வாக்காளர்கள் 107097 பெண் வாக்காளர்கள் 110 363 மற்றவர்கள் 10 மொத்த வாக்கு மையம் 126 உள்ளன இதில் 70 மையங்களை பார்வையிட்டனர் கட்டட தன்மை கழிப்பறை வசதி மின்வசதி காற்றோட்ட வசதி உட்பட அடிப்படை வசதிகள் எவ்வாறு உள்ளன என்று ஆய்வு செய்தனர்