LatestNews
அப்துல் கலாம் நினைவஞ்சலி

சோழவந்தான் பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 5ம் ஆண்டு நினைவஞ்சலி
சோழவந்தான்,ஜூலை
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 5ம் ஆண்டு நினைவு அஞ்சலி முன்னிட்டு சோழவந்தான் பகுதியில் பொதுமக்கள் அப்துல் கலாம் படத்தை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
முள்ளிபள்ளம் கிராமத்தில் இங்கு உள்ள கலையரங்கத்தில் முன்னாள் குடியரசுத் தலைவரும் ஏழைகளின் எழுச்சிநாயகருமான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் படத்திற்கு காடுபட்டி சப் இன்ஸ்பெக்டர் ராஜா முன்னிலையில் மன்னாடிமங்கலம் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அறிவியல் மன்ற தலைவர் சரவணன் மற்றும் மன்னாடிமங்கலம் கிளை நிர்வாகிகள் முள்ளிப்பள்ளம் பஞ்சாயத்து கிராம நிர்வாகிகள் மற்றும் முள்ளிப்பள்ளம் அப்துல் கலாம் அறிவியல் மன்ற கிளை நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் அப்துல் கலாம் படத்திற்கு மரியாதை செய்யப்பட்டது இவரது நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு கபசுரசூரணம் மரக்கன்றுகள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டது அனைவரும் அப்துல்கலாமின் பசுமைப்புரட்சி என்றும் தொடர மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மழை நீர் உயிர் நீர் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
LatestNews
விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி:
மதுரையில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி, விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட ஆட்சியர் அன்பழகன், காவல் ஆணையர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
LatestNews
மாடு முட்டி ஒருவர் பலி

உலகப் புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – மாடு முட்டியதில் ஒருவர் பலி:
மதுரை
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா காணும் பொங்கல் நாளான நேற்று சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது. தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பச்சை கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் 711 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. ஒரு சுற்றுக்கு 75 நபர் வீதம் மொத்தம் 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். மாடுபிடி வீரர்களும் காளை உரிமையாளர்களும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மிக்க வீட்டு உபயோகப் பொருட்களை பரிசாக பெற்று சென்றனர். மேலும் ,இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 48 பேர் காயமடைந்தனர். இவர்களில் , 14 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் , வாடிவாசல் வழியாக காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. இந்த காளைகள் அனைத்தும் வெளியே வந்து முடிவில் காளைகளை படிப்பதற்கு அமைக்கப்பட்ட இடத்தில் காளை உதவியாளர்கள் நின்று அந்த காளைகளை பிடித்துச் சென்றனர். இப்படி காளைகளை பிடிக்க முயன்றபோது காளை தாக்கியதில் ஒரு நபருக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந் நிலையில், இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விசாரணையில் அவர் அலங்காநல்லூர் அருகே உள்ள காந்தி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் நவமணி (24) கட்டிட தொழிலாளி என்பதும் இவர் காளைக்கு உதவியாளராக வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
LatestNews
பத்திரிக்கையாளர் தாக்கு.

கோவை : கோவையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளரை தி.மு.க.,வினர் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குறிச்சி பகுதியில் நேற்று திமுக சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக., எம்.பி., ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். பொங்கல் விழா என்பதால் அந்த இடத்திற்கு செய்தியாளர் சந்திரசேகர் என்பவர் செய்தி சேகரிக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த திமுக.,வினர் சந்திரசேகரை மிரட்டியதோடு புகைப்படம் எடுக்க கூடாது என்று கூறி அவரை தாக்கியுள்ளனர்.
-
LatestNews1 month ago
கோவை வள்ளல் சாந்தி கியர்ஸ் உரிமையாளர் இற ைவனடி சேர்ந்தார்.
-
LatestNews3 months ago
வீட்டுக்குள் புகுந்து உடும்பு பிடிபட்டத ு..
-
LatestNews3 months ago
மதுரை அருகே நந்தனார், வள்ளுவர் சிலை கண்ட ுபிடிப்பு…
-
LatestNews4 months ago
பாலியல் பகுதியாக மாறி வரும் வாடிப்பட்டி?
-
LatestNews3 months ago
தேவர் சிலை அலங்கரிப்பு..