LatestNews
ஒபிசி இட ஒதுக்கீட்டை சட்டமாக்கவேண்டும்: மதுரை எம்பி
மருத்துவபடிப்புகளில் ஓபிசி
இடஒதுக்கீட்டை
அமலாக்க உடனடியாக சட்டமியற்றுக!
மத்திய அமைச்சருக்கு கடிதம்.
-சு வெங்கடேசன் எம்.பி தகவல்
மதுரை. ஜூலை. 27.
நாடாளுமன்ற மக்களவையில் மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசின் நிலை என்ன என்று கேள்வியெழுப்பியிருந்தேன்.
இதற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் சௌபே ஜூலை 10-ஆம் தேதி அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அகில இந்திய இட ஒதுக்கீடு முறைமை 1986 ல் தினேஷ் குமார் & இதரர் (எ) மோதிலால் நேரு மருத்துவ கல்லூரி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் 2007 வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இட ஒதுக்கீடு இல்லாமல் தொடர்ந்தது. 2007 ஜனவரி 31 அன்று அபய் நாத் & இதரர் (எ) டெல்லி பல்கலைக் கழகம் & இதரர் வழக்கில் (ரிட் மனு எண் 138/2006) உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் 2007-08 கல்வியாண்டில் இருந்து எஸ்.சி பிரிவினர்க்கு 15% ம், எஸ்.டி பிரிவினருக்கு 7.5 % சதவீதமும் வழங்கப்பட்டது. மேலும் 2006 மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் (இட ஒதுக்கீடு & அனுமதி) சட்டத்தின் படி ஓ.பி.சி மாணவர்களுக்கு நாடு முழுமையும் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் 27% இட ஒதுக்கீடு மத்திய ஒதுக்கீட்டு இடங்களில் வழங்கப்பட்டது.
மத்திய கல்வி நிறுவனங்கள் அல்லாத அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில் ஓ.பி.சி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குகிற பிரச்சினை உச்ச நீதி மன்றத்தின் முன்பு ரிட் மனு 596/2015, சலோனி குமார் & இதரர் (எ) சுகாதார சேவை பொது இயக்குனரகம் வழக்காக நிலுவையில் உள்ளது.
இவ்வாறு அமைச்சர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ படிப்பு இடங்களில் ஒபிசி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வாய்ப்பில்லை என்பதே அமைச்சர் பதிலின் சாராம்சம் ஆகும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் தமிழக அரசும் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் திங்களன்று தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் மருத்துவ இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து உச்சநீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டுமென்ற இந்திய மருத்துவக் கவுன்சிலின் வாதத்தை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும், தற்போதைய நிலையை கருத்தில்கொண்டு மருத்துவப்படிப்பில் ஒபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டமியற்றலாம் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
மத்திய கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்போது மாநிலங்கள் மத்திய தொகுப்பிற்கு வழங்கும் இடங்களில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியாது என்பதை ஏற்க முடியாது எனவும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஒபிசி இட ஒதுக்கீடு வழங்க சட்டரீதியாகவோ, அரசியலமைப்பு ரீதியாகவோ எந்தத் தடையும் இல்லை தெளிவுபடுத்தியுள்ள உயர்நீதிமன்றம் இது தொடர்பாக மத்திய அரசு மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளது.
எனவே மத்திய அரசு தன்னுடைய பிடிவாத நிலையை தளர்த்தி மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்பிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்டமியற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
LatestNews
சகதியில் சிக்கி தவித்த மாடு மீட்பு…

வடுகபட்டியில்
சேறுசகதியில்சிக்கிதவித்த
பசுமாடு மீட்பு:
வாடிப்பட்டி,மார்ச்:4.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடுகபட்டி முத்தாலம்மன்கோவில்தெருவை
சேர்ந்தவர் பெரியகருப்பன் மகன் பவுன் பாண்டியன்(35)விவசாயி. இவர் பசுமாடு
வளர்த்துவருகிறார் அந்த மாடு தற்போது சினைபிடித்துள்ளது. இந்நிலையில்
நேற்று காலை 10மணிக்கு வடுகபட்டி அரிசிஆலை எதிரில் உள்ள
பெரியாறுபாசனகால்வாய் ஓடையில் மாட்டினை குளிப்பாட்டிக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சேரும்சகதியும்நிறைந்த புதைகுழிக்குள் மாடு
சிக்கிக்கொண்டது. உடனே அதை மீட்கமுயற்சித்தார் அவரால் முடியவில்லை. அந்த
புதைகுழியில் மாட்டின் கால்முழுவதும் உள்ளே இழுத்துக்கொண்டது இதனால், மாடு
எழமுடியாமல் அவதியடைந்தது.
இது சம்மந்தமாக தகவலறிந்த, வாடிப்பட்டி
தீயணைப்பு நிலைய அதிகாரி சதகத்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள்
1மணிநேரம் போராடி புதைகுழிக்குள் சிக்கியிருந்த சினைமாட்டினை மீட்டனர்.
LatestNews
போலீஸ் கொடி அணிவகுப்பு…

திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள அவனியாபுரம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொடி அணிவகுப்பு பேரணி :
மதுரை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி மேல்நிலைப் பள்ளியில் இருந்து கொடி அணிவகுப்பு புறப்பட்டு அவனியாபுரம் பேருந்து நிலையம் கணக்குப்பிள்ளை தெரு பெரியார் நகர் இம்மானுவேல் நகர் பிரசன்னா காலனி வழியாக அவனியாபுரம் சிஎஸ் நகரில் பேரணி முடிவு பெற்றது.
இதில் , மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் துணை கமாண்டன்ட் ஜிந்தா தலைமையில் 75 வீரர்களும் , திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர் சிவராஜ் பிள்ளை மற்றும் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பெத்துராஜ், சார்பு ஆய்வாளர் தண்டீஸ்வரர், தமிழ்ச்செல்வம் அடங்கிய போலீசார் கொடி அணிவகுப்பு பேரணியில் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய சிறப்பு காவல் படை வீரர்கள் அணி வகுப்பை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
LatestNews
வாக்கு மையங்கள் ஆய்வு…

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தேர்தல் வாக்கு மையங்கள் ஆய்வு:
சோழவந்தான்
வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் மற்றும் தென்கரை வருவாய் உட் கோட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள வாக்குச் சாவடி மையங்களை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். இதில், வாடிப்பட்டி தாசில்தார் பழனி குமார் தலைமை நில அளவையாளர் செந்தில் தேர்தல் துணை வட்டாட்சியர் இசக்கிமுத்து வருவாய் ஆய்வாளர்கள் அழகுகுமார் ராஜன் கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயப்பிரகாஷ் முத்துக்குமரன் மணிவேல் சூசைஞானசேகரன் முபரக் சுல்தான் பழனி வெங்கடேசன் கார்த்திக் செல்வமணி சுரேஷ் கார்த்திஸ்வரி முத்துராமலிங்கம் பாண்டி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர் .
மொத்த வாக்காளர்கள் 2180 87 இதில், ஆண்கள் வாக்காளர்கள் 107097 பெண் வாக்காளர்கள் 110 363 மற்றவர்கள் 10 மொத்த வாக்கு மையம் 126 உள்ளன இதில் 70 மையங்களை பார்வையிட்டனர் கட்டட தன்மை கழிப்பறை வசதி மின்வசதி காற்றோட்ட வசதி உட்பட அடிப்படை வசதிகள் எவ்வாறு உள்ளன என்று ஆய்வு செய்தனர்