LatestNews
மாணவர்கள் முன்னேறினால், பெருமைபடுபவர்கள ் ஆசிரியர்களே:

*தனது மாணவர்கள், தன்னிடம் படிக்கும் மாணவர்கள் கலெக்டராக, காவல் துறை அதிகாரியாக முன்னேறினால் பொறாமை படாமல் பெருமை படுபவர்கள் ஆசிரியர்கள் மட்டும் தான் என 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்க்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு*
மதுரை கோசாகுளம் சிஇஒஏ
பள்ளி வளாகத்தில் பாரதி யுவகேந்திரா மற்றும் சிஇஒஏ
மேல்நிலைப்பள்ளி சார்பில்
சிஇஒஏ
பள்ளி நிறுவனத் தலைவர் ராஜா கிளைமாக்சு தலைமையில் பாரதி யுவகேந்திரா நிறுவனர்
நெல்லை பாலு வரவேற்பில்,
தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று 12 ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி, தனியார் பள்ளி மாணவ – மாணவியர்க்கு தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாராட்டி பரிசுகள் வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் ,சிஇஒஏ
பள்ளி ச்செயலாளர் சாமி, மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், காவல் துறை உதவி ஆணையாளர் லில்லி கிரேஸ், பள்ளி முதல்வர் ஹேமா ஆட்ரே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து 12ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர்களை பாராட்டி அவர்களுக்கு முக கவசம், கப சுர குடிநீர், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளையும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
அரசு பள்ளியில் படித்து
500மதிப்பெண் பெற்ற திருப்பரங்குன்றம் அரசு பள்ளி மாணவி, குடு குடுப்பைகாரரின் மகள் தேவயானி,
மற்றும் தனியார் பள்ளியில்
594 மதிப்பெண் பெற்ற நிகிலேஸ்வரி,
586 மதிப்பெண் பெற்ற தர்னீஷ்,
578 மதிப்பெண் பெற்ற ஹரிபிரியா, ஆகிய மாணவ – மாணவியரை பாராட்டி பாராட்டு கேடயங்கள் மற்றும் ரொக்கப்பரிசுகளையும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
மேலும், நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு வழங்க 1000 பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை கல்வி துறை அதிகாரிகளிடம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,
தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது இந்த காலத்தில் மிக கடினம்,
தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க உற்று நோக்குதல் மிக அவசியம்.
ஒரு நிமிடம் கந்த ஷஷ்டி கவசத்தை கேட்டாலே, உற்று நோக்கினாலே கறுப்பர் கூட்டம் உள்ளே நுழைந்து விடுகிறது.
மதிப்பெண்கள் பெறுவது யாருடைய சிபாரிசும் தேவை இல்லை, கவனமாக படித்தாலே போதும்.
பாராட்டு விழாவை இந்த நேரத்தில் நடத்தக் கூடாது. இருந்தபோதிலும், மருந்துகள் மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சியாகவே இது உள்ளது.
வரும் 31ம் தேதி வரை 144 தடை சட்டம், பேரிடர் மேலான்மை சட்டம் நடைமுறையில் இருக்கிறது.
ஆனால் ,பேரிடர் மேலான்மை துறை அமைச்சராகிய நான், 144 தடை சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய காவல்துறை அதிகாரி லில்லி கிரேஸ் கல்வி அதிகாரி ஆகியோர் இருக்கும் மேடையில் தான் பாராட்டு விழா நடக்கிறது.
ஆனால் ,இது பாராட்டு விழா மட்டும் அல்ல கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டமும் கூட,
அதனால் தான் இந்த நிகழ்ச்சியில் மாணவ – மாணவிகளை பாராட்டுவதுடன் மாணவ-மாணவிகளுக்கு முக கவசம், கப சுர குடிநீர்,நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளையும் வழங்குகிறோம்.
நான் ஆசிரியர்களை மிகவும் வணங்குபவன், அவர்கள் மீது அதிக மரியாதை வைத்திருப்பவன்.
ஏனென்றால் ஒரு மனிதனின் அருகில் இருக்கும் அவனது நண்பன் ஒரு படி முன்னேறினால் கூட மனிதனுக்கு பொறாமை வரும்.
ஆனால் ,தனது மாணவர்கள், தன்னிடம் படிக்கும் மாணவர்கள் கலெக்டராக, காவல் துறை அதிகாரியாக முன்னேறினால் பொறாமை படாமல் பெருமை படுபவர்கள் ஆசிரியர்கள் மட்டும் தான் என 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்க்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
LatestNews
சகதியில் சிக்கி தவித்த மாடு மீட்பு…

வடுகபட்டியில்
சேறுசகதியில்சிக்கிதவித்த
பசுமாடு மீட்பு:
வாடிப்பட்டி,மார்ச்:4.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடுகபட்டி முத்தாலம்மன்கோவில்தெருவை
சேர்ந்தவர் பெரியகருப்பன் மகன் பவுன் பாண்டியன்(35)விவசாயி. இவர் பசுமாடு
வளர்த்துவருகிறார் அந்த மாடு தற்போது சினைபிடித்துள்ளது. இந்நிலையில்
நேற்று காலை 10மணிக்கு வடுகபட்டி அரிசிஆலை எதிரில் உள்ள
பெரியாறுபாசனகால்வாய் ஓடையில் மாட்டினை குளிப்பாட்டிக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சேரும்சகதியும்நிறைந்த புதைகுழிக்குள் மாடு
சிக்கிக்கொண்டது. உடனே அதை மீட்கமுயற்சித்தார் அவரால் முடியவில்லை. அந்த
புதைகுழியில் மாட்டின் கால்முழுவதும் உள்ளே இழுத்துக்கொண்டது இதனால், மாடு
எழமுடியாமல் அவதியடைந்தது.
இது சம்மந்தமாக தகவலறிந்த, வாடிப்பட்டி
தீயணைப்பு நிலைய அதிகாரி சதகத்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள்
1மணிநேரம் போராடி புதைகுழிக்குள் சிக்கியிருந்த சினைமாட்டினை மீட்டனர்.
LatestNews
போலீஸ் கொடி அணிவகுப்பு…

திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள அவனியாபுரம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொடி அணிவகுப்பு பேரணி :
மதுரை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி மேல்நிலைப் பள்ளியில் இருந்து கொடி அணிவகுப்பு புறப்பட்டு அவனியாபுரம் பேருந்து நிலையம் கணக்குப்பிள்ளை தெரு பெரியார் நகர் இம்மானுவேல் நகர் பிரசன்னா காலனி வழியாக அவனியாபுரம் சிஎஸ் நகரில் பேரணி முடிவு பெற்றது.
இதில் , மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் துணை கமாண்டன்ட் ஜிந்தா தலைமையில் 75 வீரர்களும் , திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர் சிவராஜ் பிள்ளை மற்றும் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பெத்துராஜ், சார்பு ஆய்வாளர் தண்டீஸ்வரர், தமிழ்ச்செல்வம் அடங்கிய போலீசார் கொடி அணிவகுப்பு பேரணியில் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய சிறப்பு காவல் படை வீரர்கள் அணி வகுப்பை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
LatestNews
வாக்கு மையங்கள் ஆய்வு…

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தேர்தல் வாக்கு மையங்கள் ஆய்வு:
சோழவந்தான்
வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் மற்றும் தென்கரை வருவாய் உட் கோட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள வாக்குச் சாவடி மையங்களை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். இதில், வாடிப்பட்டி தாசில்தார் பழனி குமார் தலைமை நில அளவையாளர் செந்தில் தேர்தல் துணை வட்டாட்சியர் இசக்கிமுத்து வருவாய் ஆய்வாளர்கள் அழகுகுமார் ராஜன் கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயப்பிரகாஷ் முத்துக்குமரன் மணிவேல் சூசைஞானசேகரன் முபரக் சுல்தான் பழனி வெங்கடேசன் கார்த்திக் செல்வமணி சுரேஷ் கார்த்திஸ்வரி முத்துராமலிங்கம் பாண்டி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர் .
மொத்த வாக்காளர்கள் 2180 87 இதில், ஆண்கள் வாக்காளர்கள் 107097 பெண் வாக்காளர்கள் 110 363 மற்றவர்கள் 10 மொத்த வாக்கு மையம் 126 உள்ளன இதில் 70 மையங்களை பார்வையிட்டனர் கட்டட தன்மை கழிப்பறை வசதி மின்வசதி காற்றோட்ட வசதி உட்பட அடிப்படை வசதிகள் எவ்வாறு உள்ளன என்று ஆய்வு செய்தனர்