LatestNews
மதுரையில் நோய் கட்டுக்குள்: அமைச்சர்


கொரானா மரணங்களை மறைக்க வேண்டிய அவசியமில்லை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
மதுரை :
சென்னையில் நாள்பட்ட பிற நோய்களால் நிகழ்ந்த 444 மரணங்கள் பின்னர் அவர்களுக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது. அதன்பின்பு அந்த மரணங்கள் கோவியட் மரணங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரணங்களை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என மதுரையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி:
கொரானா நோயாளிகள் முழு மன திருப்தியோடு கோவிட் கேர் சென்டர்களில் சிகிச்சை பெறுகின்றனர். மதுரையில் காய்ச்சல் கண்டறியும் குழுக்கள் மூலம் 1லட்சத்து 69ஆயிரத்து 468 பேருக்கு பரிசோதனை. அதில் 1லட்சத்திற்கும் மேற்பட்ட சாம்பிள்ஸ் பெறப்பட்டுள்ளது. மதுரை பொறுத்தவரை நோய் கட்டுக்குள் உள்ளது. எண்ணிக்கையை கண்டு பயப்பட வேண்டியதில்லை. காய்ச்சல் பரிசோதனை கொரானா பரிசோதனை எண்ணிக்கையை குறைக்கவில்லை.
பிளாஸ்மா வங்கி அமைக்க பல மாவட்டத்தில் கோரிக்கை உள்ள நிலையில், நம் மாவட்டத்தில் மட்டுமே அதிகமானோர் பிளாஸ்மா தானம் தர முன்வந்துள்ளனர். மதுரையில் மக்கள் ஒத்துழைப்பில் நோய்த்தொற்று கட்டுக்குள் இருக்கிறது. தேவைப்படும் நேரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதல் கொடுத்துள்ளது. அதன்படி 444 மரணங்கள் குறித்து மருத்துவக்குழு ஆய்வு செய்து நாள்பட்ட பிற நோய்களால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இறந்த நோயாளிகளுக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அவர்களுக்கு உறுதி செய்யப்பட்டு அதன்பின்பு அந்த மரணங்களை கோவியட் மரணங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணத்தை மறைக்க வேண்டிய அவசியம், கட்டாயம் எங்களுக்கு இல்லை. இதற்கு மருத்துவமனை, சுடுகாடு உள்ளிட்ட இடங்களில் ரிக்கார்டும் உள்ளது. மரணத்திற்கு ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்கும் போது மரணத்தை எவ்வாறு மறைக்க முடியும். மக்கள் மத்தியில் அச்சத்தை பதட்டத்தை பீதியை ஏற்படுத்த எதிர்கட்சிகள் முயற்சிக்கிறது என்றார்.
அரசாங்கம் எங்கள் வேலையை சரியாக செய்து கொண்டுள்ளோம். எதிர்க்கட்சிகள் அவர்கள் வேலையை செய்கிறார்கள். ஸ்டாலினின் அனைத்துக்கட்சி கூட்டம் குறித்து அமைச்சர் பதில் கூறினார். நடிகர்கள் தடை உத்தரவை மீறி சென்றதற்கு கோட்டாச்சியர் உரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார் .
LatestNews
விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி:
மதுரையில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி, விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட ஆட்சியர் அன்பழகன், காவல் ஆணையர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
LatestNews
மாடு முட்டி ஒருவர் பலி

உலகப் புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – மாடு முட்டியதில் ஒருவர் பலி:
மதுரை
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா காணும் பொங்கல் நாளான நேற்று சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது. தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பச்சை கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் 711 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. ஒரு சுற்றுக்கு 75 நபர் வீதம் மொத்தம் 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். மாடுபிடி வீரர்களும் காளை உரிமையாளர்களும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மிக்க வீட்டு உபயோகப் பொருட்களை பரிசாக பெற்று சென்றனர். மேலும் ,இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 48 பேர் காயமடைந்தனர். இவர்களில் , 14 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் , வாடிவாசல் வழியாக காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. இந்த காளைகள் அனைத்தும் வெளியே வந்து முடிவில் காளைகளை படிப்பதற்கு அமைக்கப்பட்ட இடத்தில் காளை உதவியாளர்கள் நின்று அந்த காளைகளை பிடித்துச் சென்றனர். இப்படி காளைகளை பிடிக்க முயன்றபோது காளை தாக்கியதில் ஒரு நபருக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந் நிலையில், இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விசாரணையில் அவர் அலங்காநல்லூர் அருகே உள்ள காந்தி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் நவமணி (24) கட்டிட தொழிலாளி என்பதும் இவர் காளைக்கு உதவியாளராக வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
LatestNews
பத்திரிக்கையாளர் தாக்கு.

கோவை : கோவையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளரை தி.மு.க.,வினர் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குறிச்சி பகுதியில் நேற்று திமுக சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக., எம்.பி., ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். பொங்கல் விழா என்பதால் அந்த இடத்திற்கு செய்தியாளர் சந்திரசேகர் என்பவர் செய்தி சேகரிக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த திமுக.,வினர் சந்திரசேகரை மிரட்டியதோடு புகைப்படம் எடுக்க கூடாது என்று கூறி அவரை தாக்கியுள்ளனர்.
-
LatestNews1 month ago
கோவை வள்ளல் சாந்தி கியர்ஸ் உரிமையாளர் இற ைவனடி சேர்ந்தார்.
-
LatestNews3 months ago
வீட்டுக்குள் புகுந்து உடும்பு பிடிபட்டத ு..
-
LatestNews3 months ago
மதுரை அருகே நந்தனார், வள்ளுவர் சிலை கண்ட ுபிடிப்பு…
-
LatestNews4 months ago
பாலியல் பகுதியாக மாறி வரும் வாடிப்பட்டி?
-
LatestNews3 months ago
தேவர் சிலை அலங்கரிப்பு..