LatestNews
விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்…

அம்மா அரசு கூட்டுறவு துறையில் தமிழக விவசாயிகளுக்கு ரூபாய் 59 ஆயிரம் கோடி வட்டி இல்லா கடன் உதவி அமைச்சர் செல்லூர் கே ராஜூ பெருமிதம்.
சோழவந்தான் ஜன:
தமிழகத்தில் 1.78 ஆயிரம் விவசாயிகளுக்கு கூட்டுறவு துறை வங்கி மூலம் ரூபாய் 59 ஆயிரம் கோடி வட்டியில்லா கடனுதவி அம்மா அரசு வழங்கியுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ பேசினார். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி திருப்பரங்குன்றம் யூனியன் கீழமாத்தூர் ஊராட்சியில் கூடுதலாக ரூபாய் 15 லட்சம் சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பூமிபூஜை அமைச்சர் செல்லூர் கே ராஜூ துவக்கி வைத்து பேசியதாவது கீழமாத்தூர் 20 கிராம மக்கள் உடல்நலம் பயன்பெறும் வகையில் 60 லட்சம் ரூபாய் நிதியில் ஆரம்ப சுகாதார நிலையம், இப்பகுதியில் அனைவருக்கும் குடிநீர் கிடைக்க ரூபாய் 45 லட்சம் நிதியில் திட்டப் பணி நடக்கிறது மேலும் 1.60 லட்சத்தில் குடிநீர் திட்ட பணி ரூபாய் 17.50லட்சம் நிதியில் விரிவாக்க கிரீன் கார்டன் பகுதியில் புதிய ரோடு அமைக்கப்பட்டுள்ளது இதுவரை 1.58 கோடியில் பாலம் சாலை பேவர் பிளாக் தெரு அமைத்தல் திட்ட பணி நிறைவு பெற்றுள்ளது. காலணி முதல் வைகை ஆற்றின் கரை வரை ரூபாய் 4.60 லட்சம் நிதியில் பேவர் பிளாக் பதிக்கும் பணி நிறைவு மேலமாத்தூர் இல் ரூபாய் 5 லட்சத்தில் குடிநீர் திட்ட பணி நிறைவு ரூபாய் 5 லட்சத்தில் நிழற்குட அமைக்கும் பணி 38 குடும்பங்களுக்கு ரூபாய் 1.50 லட்சம் திட்டத்தில் வீடுகள் பணி வழங்கப்பட்டது கீழமாத்தூர் ரூபாய் 52 ஆயிரத்து மின்விளக்குகள் கூடுதலாக இப்பகுதி கிராமங்கள் வளர்ச்சிக்காக ரூபாய் 6.18 கோடி பணிகள் நிறைவு பெற்றுள்ளன அம்மா ஆட்சியில் சிறு குறு கிராமங்கள் வரை வளர்ச்சித் திட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளன திமுக ஆட்சி காலத்தில் கிராம மக்களின் மேம்பாடு அடைய பணிகள் செய்யவில்லை திமுக தலைவர்கள் குடும்பங்கள்தான் கோடிக்கணக்கில் ஊழல் செய்து வளர்ந்து உள்ளனர், தமிழக மக்களுக்காக எதுவும் செய்யவில்லை ஆனால் அம்மாவின் அரசு கிராமங்களை தேடிச்சென்று
தாய்ப்பறவை இறைக்காக காத்திருக்கும் குஞ்சுகளை தேடி செல்வது போல் அதிமுக அம்மா அரசு தமிழக மக்களின் அடிப்படை வசதி கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது என்பது உண்மையாகும்,
இதுவரை நான் வகித்த கூட்டுறவுத்துறை மூலம் 1.78 ஆயிரம் தமிழக விவசாயிகளுக்கு ரூபாய் 59 ஆயிரம் கோடி வட்டியில்லா கடனுதவி வழங்கி உள்ளோம், கீழமாத்தூரில் கூடுதலாக 60 லட்சம் லிட்டர் குடிநீர் மேல்நிலை தொட்டி அமைந்து உள்ளது மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் ரூபாய் 15 லட்சம் நிதியில் பூமி பூஜை நடந்து உள்ளது
இது போல் எண்ணற்ற திட்டப்பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அம்மாஅரசு இன்னும் பல பணிகளை தமிழக மக்களுக்காக செய்கிறது எங்களது எஜமானர்களான நீங்கள் தொகுதி மக்கள் மறவாது மீண்டும் அம்மா ஆட்சி தொடர இரட்டை இலைக்கு ஆதரவு தர வேண்டுகிறேன் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார், இந்நிகழ்ச்சியில் கீழமாத்தூர் ஊராட்சி தலைவர் ராஜாத்தி துரைப்பாண்டி தலைமை வகித்தார் பரவை பேரூராட்சி முன்னாள் சேர்மன் பரவை ராஜா, வில்லாபுரம் ராஜா, ஊராட்சி தலைவர்கள் கந்தசாமி அபிராமி மணிகண்டன் கிளைச் செயலாளர் சாகுல் மைதீன் அஜ்மீர் தங்கராஜ் சண்முகநாதன் கருப்பணன் கூட்டுறவு துறை வங்கி தலைவர் முத்தையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
LatestNews
வாக்காளரின் விழிப்புணர்வு..

வாக்காளரின் விழிப்புணர்வு
மதுரை
திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பசுமலை அம்பேத்கர் காலணியை சேர்ந்தவர் லோகராஜ் இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களின் வீட்டு வாசல் கதவு முன்பு "எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல" என எழுதப்பட்ட வாசத்திலான பதாகையை தொங்கவிட்டுள்ளனர். இது குறித்து இவர் கூறுகையில் இந்த பதாகையை பார்க்கும் இப்பகுதியை சேர்ந்த பலரும் தாங்களும் இது போன்று வீட்டின் முன்பு எழுதி வைக்க வேண்டும் என கூறுவதுடன். அரசியல் கட்சியினர் பரிசு பொருள்களை வழங்குவதை தவிர்க்கவும் இந்த பதாகை வாய்ப்பாக உள்ளது. ல்வேறு அரசியல் கட்சியினர் அனைவருக்கும் வாக்களிக்கும் அவசியத்தை உணர்த்துவதுடன் எங்கள் வாக்கை நியாமாக செலுத்துவோம் என்பதை சக வாக்காளர்களுக்கு உணர்த்த இந்த பதாகையை வைத்துள்ளதாக கூறினர். பரிசு பொருள், வாக்குக்கு பணம் வாங்கும் வாக்காளர்களுக்கு மத்தியில் இந்த வாசகம் இப்பகுதியில் உள்ள மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
LatestNews
தேர்தல் பணிமனை திறப்பு…

|உசிலம்பட்டி தொகுதியில் பிஜேபி தேர்தல் பணிமனை திறந்து வைத்த மத்திய அமைச்சர் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்:
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் திமுக கூட்டணி உள்ளிட்ட
அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக சார்பில் பாண்டியம்மாள் மகேந்திரன் நீதிபதி ஆகியோர்களும்
திமுக கூட்டணியில் வல்லரசு ஆண்டித்தேவர் சந்தானம் ° கதிரவன் உள்ளிட்ட பலரும் போட்டியிட்டனர். 2021ல் அதிமுக வசம் இருந்த இந்த தொகுதி தற்போது அதிமுக கூட்டணி கட்சியான பிஜேபி வசம் தொகுதி கை மாறுவதற்கு அதிகப்படியான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது .
இதை உறுதி செய்யும் வகையில் பாரதிய ஜனதா கட்சியினர் கடந்த ஆறு மாத காலமாக உசிலம்பட்டி தொகுதியில் பல்வேறு மத்திய அரசின் நலத்திட்ட பணிகளை வழங்க தொடங்கினர்.
குறிப்பாக 58 கிராம கால்வாய் பிரச்சனை பாஜக தான் முதலில் கையில் எடுத்தது உசிலம்பட்டி தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைப்பதற்காக இதுவரையில் ஆளுங்கட்சியாக இருந்த எந்த எம்எல்ஏ வும் நிறைவேற்றாத பிரச்சனையை பாஜக சார்பில் வைத்த கோரிக்கைக்கு அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும் என்றுமனு அளித்தனர். இதுபோன்ற செயல்பாடுகள் உசிலம்பட்டி தொகுதி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும பொதுமக்களுக்கு தேவையான அடிப்படைத் தேவை நிறைவேற்றுவதற்கு உசிலம்பட்டி தொகுதியில் பாஜகவினர் மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தது அதேபோல் தொகுதியில் தேசிய கட்சி தான் போட்டியிட வேண்டும் என்று இப்பகுதியில் உள்ள பிரதான கோவில்களில் உள்ள கிராம முக்கியஸ்தர்கள் மூலம் பிஜேபி வேட்பாளர் உசிலம்பட்டியில் களம் இறக்குவதற்காக தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் உள்ள அனைத்து சமுதாயநிர்வாகிகளை சந்திப்பது ஆன்மீக ரீதியாக ஒப்புதல் பெற்றது போன்ற நிகழ்வுகளை தேர்தலுக்கு முன்பிருந்தே பாஜகவினர் செய்துவந்தனர். தற்போது இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பாளரை தேர்வு செய்து அந்த வேட்பாளரை முன்னிறுத்த கூடிய வகையில் தற்பொழுது பிரச்சாரத்தை துவங்கி தேர்தல் பணிமனை திறந்து பாரதிய ஜனதா கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நேற்று மாலை தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிடும் வகையில் உசிலம்பட்டி தொகுதியில் வேட்பாளராக செயல்பட்டுவரும் சாப்டூர் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட தொழிலதிபர் முத்துராமன் உசிலம்பட்டி தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி அதிகாரப்பூர்வ வேட்பாளராக களம் இறங்க உள்ளதாக கூறப்படுகிறது .
இவர் இந்த பகுதி முழுவதும் கடந்த சில மாதங்களாக கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்க கூடிய நிகழ்ச்சிகள் உசிலம்பட்டி தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் கல்யாணம் முதல் காதுகுத்து வரை எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கலந்து கொண்டு சட்டமன்ற தேர்தல் தொடர்பான பிரச்சாரப் பணிகளை முன்னெடுத்து செய்து வந்துள்ளனர் .மேலும் கடந்த முறை அதிமுக சார்பில் வெற்றி பெற்ற நீதிபதி என்பவர் உசிலம்பட்டி தொகுதிக்கு பெரிய அளவில் எந்தவிதமான மக்கள் நலத் திட்டங்களும் செயல்படுத்தவில்லை அதேபோல் இந்த பகுதி மக்களுடைய விவசாயத் தேவைகள் குடிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாதது சாலை வசதி உள்ளிட்ட பொது சுகாதார வசதிகள் போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றாமல் தொகுதி மக்களின் வெறுப்பை சம்பாதித்து உள்ளார்.
எனவே, மீண்டும் அதிமுக சார்பில் இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்காது என்பது உறுதியாக தெரிந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி முழுமூச்சாக இந்த தொகுதியில் செயல்பட்டு தேர்தல் வியூகம் வகுத்து வருவது காரணமாக பாரதிய ஜனதா கட்சி உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடுவதை உறுதிசெய்துள்ளது கட்சியின் சார்பில் மத்திய அமைச்சர்
வி கே சிங் பங்கேற்ற விழாவில் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்களில் அணிவகுத்துச் சென்று அங்குள்ள மூக்கையாத்தேவர் நினைவு மண்டபம் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருவுருவச்சிலை ஆகியவற்றிற்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர். தொடர்ந்து தமிழகத்தில் எந்த கட்சியும் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை முடிவு செய்யவில்லை தேர்தல் பணிமனைகளையும் திறந்து வைக்காத நிலையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில்முதன்
முதலாக உசிலம்பட்டியில் தேர்தல் பணிமனை திறந்து வைத்து பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை மத்திய அமைச்சர் கே.என். சிஙா தலைமையில் நடத்தப்பட்டது.
இந்த முறை உசிலம்பட்டி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வேட்பாளர் போட்டியிடுவது உறுதியாக தெரிய வந்துள்ளது .இந்த நிலையில் வேட்பாளராக முத்துராமன்
நிறுத்ததப்படுவார் என்பதும், இப்பகுதியில் உள்ள அரசியல் கட்சியினர் பொதுமக்கள் பரவலாக பேசி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ,
புறநகர் மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன் மாநில விவசாய அணி துணைத் தலைவர் முத்துராமன் , ராணுவப் பிரிவு மாநிலத் தலைவர் பாண்டியன் மருத்துவர் அணி மாநிலத் தலைவர் சிவ பாண்டியன் மாவட்டச் செயலாளர்கள் சொக்கன் மொக்கராசு இன்பராணி உள்ளிட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
LatestNews
ஏடிஎஸ்பி பதவியேற்பு

ஏடிஎஸ்பி பதவியேற்பு:
காரியாபட்டி
விருதுந கர் மாவட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பே
ற்றுள்ள மணிவண்ணனை தொண்டு நிறுவன பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்தனர்.