LatestNews
மஞ்சளுக்கு போதிய விலை இல்லை…

பொங்கல் பானையில் கட்டும் மஞ்சள் கிழங்கு ஆயிரம் ஏக்கரில் உற்பத்தி செய்த பிறகும் போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை:
சோழவந்தான்
மதுரை மாவட்டம் பாலமேடு அலங்காநல்லூர் மற்றும் எர்ரம்பட்டி கோவில்பட்டி மாணிக்கம்பட்டி கீழ சின்னம்பட்டி அழகாபுரி புதுப்பட்டி உள்பட சுமார் 15 க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கரில் மஞ்சள் கிழங்கு கடந்த ஆடி மாதம் நடவு செய்து தற்போது, பொங்கலுக்காக மதுரை ராமநாதபுரம் ஈரோடு திருநெல்வேலி உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்து வருவதாகவும் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால், கடந்த ஆண்டை விட விளைச்சல் குறைவாகவே உள்ளது மேலும், இந்தப் பகுதியில் மஞ்சள் விவசாயம் முழுக்க முழுக்க சாத்தையாறு
அணையை நம்பி உள்ளது .
கடந்த 8 ஆண்டுகளாக சாத்தியார் அணையில் போதிய நீர் வரத்து இல்லாததால் போர்வெல்
மூலம் தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது மஞ்சள் விவசாயம் எதிர்பார்த்த அளவு இல்லை.
மேலும் நோய் தாக்குதல் காரணமாகவும் விளைச்சல் குறைவாக உள்ளது .
மேலும் , 30 சென்ட் நிலத்தில் ரூபாய் 50 ஆயிரம் செலவு செய்து ரூபாய் 22 ஆயிரம் மட்டும் கிடைப்பதாக கூறுகிறார்கள் அடுத்த ஆண்டு மஞ்சள் விவசாயம் செய்யவே மிகவும் யோசனையாக உள்ளது அரசு உரிய நடவடிக்கை எடுத்து மஞ்சள் விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூபாய்7 ஆயிரத்துக்கு மட்டுமே செல்வதால் எங்களால் உரிய லாபம் எடுக்க முடியவில்லை பொங்கலுக்காக பானையில் கட்டும் சிறப்புவாய்ந்த மஞ்சள் கிழங்கை விளைவித்து தரும் எங்களைப்போன்ற விவசாயிகளுக்கு போதிய உதவி செய்து கை தூக்கி விட்டால் அடுத்து வரும் காலங்களில் மஞ்சள் விவசாயம் செய்ய தயாராகவே இருக்கிறோம் என்று இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.
LatestNews
கிராம மக்கள் முற்றுகை போராட்டம்..

ஆட்சியர் அலுவலக முன்பு முற்றுகை போராட்டம்:
மதுரை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட
கொம்பாரி கிராம ஊராட்சியில் உள்ள கீழக் கண்மாய் மற்றும் மேலக் கண்மாய்களுக்கு நிலையூர் – கம்பிகுடி கால்வாயிலிருந்து தொட்டியபட்டி பிரிவிலுள்ள நெடுமதுரை கடல் வழியாக மேற்சொன்ன கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க ஆவணம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தும் , தண்ணீர் திறந்து விடக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்த திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆசிக்கை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே அவரை மீண்டும் பணியிலமர்த்தக் கோரியும் கொம்பாரி
ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில்
கொம்பாரி ஊர் பொதுமக்கள் சுமார் 450 பேர் தங்களது குடும்ப அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக கூறி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுக்கை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.கி
LatestNews
திடீரென வீடு இடிந்து விழுந்தது…

மதுரை தெற்கு வாசல் மீனாட்சி டாக்கீஸ் அருகே வீடு ஒன்று திடீரென இடிந்தது.
தகவல் கிடைத்ததும், மதுரை தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.
LatestNews
ஜெயலலிதா கோயில் கும்பாபிஷேகம்..

ஜெ.கோயில் கும்பாபிசேகத்திற்கு கிராமம் கிராமாக அமைச்சர் உதயகுமார் அழைப்பு
திருமங்கலம் :
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில்ஜெ.பேரவை சார்பில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் அம்மா கோயில் என்ற பெயரில் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ.க்கு கோயில் கட்டப்படுகிறது. இதில் இருவருக்கும் 8 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், ஜன.30 ல் கும்பாபிசேகம் நடக்க உள்ளது.
இந்த கும்பாபிசேகத்திற்கு முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்காக திருமங்கலம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அமைச்சர் உதயகுமார் நேரில் சென்று கும்பாபிசேகத்தில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.