LatestNews
சிகிரெட் பழக்கம் மயங்கி விழுந்தவர் சாவு. ..
தொடர் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையானவர் மயங்கி விழுந்து பலி.
மதுரை ஜன 9 தொடர் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையானவர் மயங்கி விழுந்து பலியானார்.
தாசில்தார் நகர் அன்பு நகரை சேர்ந்தவர் ராஜன் 44 .சிகரெட்டை விடாமல் தொடர்ந்து புகைக்கும் பழக்கம் உள்ளவர். இதனால் இவருக்கு குணம் அடைவதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலவெளி வீதியில் நடந்து சென்றபோது நடைபாதையில் மயங்கி விழுந்து பலியானார் .இதுகுறித்து மனைவி சித்ரா கொடுத்த புகாரின்பேரில் திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
****************
மதுரை பைபாஸ் சாலையில் சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் மோதி மூதாட்டி பலி.
மதுரை ஜன 9பைபாஸ் சாலையில் சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் மோதி மூதாட்டி பலியானார்.
ஆரப்பாளையம் சண்முக ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்லம் 60 . இவர் பைபாஸ் ரோடு புது பாலம் அருகே நடந்து சென்ற போது சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
******************
மதுரையில் மூன்று கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது.
மதுரை ஜன 9 மதுரை அவனியாபுரம் மற்றும் எஸ் எஸ் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு போலீசார் கைது செய்தனர்.
மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் பள்ளி அருகே காலி இடத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விற்பனை செய்த மீனாட்சி நகரை சேர்ந்த விக்னேஸ்வரன் என்ற விக்கி 22 என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் .அதுபோல எஸ்.எஸ்.காலனிபோடிலயன் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் எஸ் எஸ் காலனி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பூக்காரத்தோப்பு பகுதியை சேர்ந்ததர்மர் 36 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஒரு கிலோ 450 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
********************
மதுரை அருகே
மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி.
மதுரை ஜன 9 மதுரை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி ஆனார்.
மதுரை அருகே சமயநல்லூர் செக்கடி தெருவை சேர்ந்தவர் அக்னிஸ்வரன் 32 .இவர் கூலி தொழிலாளியாவார். சம்பவத்தன்றுசமயநல்லூர் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி பலியானார்.இதுகுறித்து அவரது தந்தை மதிவாணன் கொடுத்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
****************
மதுரை ஒத்தக்கடை அருகே ஆட்டோ மோதி மூதாட்டி பலி.
மதுரை ஜன 9 ஒத்தக்கடை பகுதியில் ஆட்டோ மோதி மூதாட்டி பலி ஆனார்.
மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் பஞ்சவர்ணம் 72 .இவர் திருமோகூர் ரோட்டில் நடந்து சென்ற போது நா கனாகுலத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் 57 என்பவர் ஓட்டிச் சென்ற ஆட்டோ மோதி மூதாட்டி பஞ்சவர்ணம்சம்பவ இடத்திலேயே பலியானார் .இந்த விபத்து குறித்து ஒத்தக்கடை கிராம நிர்வாக அதிகாரி ஜான்சி கொடுத்த புகாரின் பேரில் ஒத்தக்கடைபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
***************
LatestNews
கிராம மக்கள் முற்றுகை போராட்டம்..

ஆட்சியர் அலுவலக முன்பு முற்றுகை போராட்டம்:
மதுரை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட
கொம்பாரி கிராம ஊராட்சியில் உள்ள கீழக் கண்மாய் மற்றும் மேலக் கண்மாய்களுக்கு நிலையூர் – கம்பிகுடி கால்வாயிலிருந்து தொட்டியபட்டி பிரிவிலுள்ள நெடுமதுரை கடல் வழியாக மேற்சொன்ன கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க ஆவணம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தும் , தண்ணீர் திறந்து விடக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்த திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆசிக்கை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே அவரை மீண்டும் பணியிலமர்த்தக் கோரியும் கொம்பாரி
ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில்
கொம்பாரி ஊர் பொதுமக்கள் சுமார் 450 பேர் தங்களது குடும்ப அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக கூறி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுக்கை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.கி
LatestNews
திடீரென வீடு இடிந்து விழுந்தது…

மதுரை தெற்கு வாசல் மீனாட்சி டாக்கீஸ் அருகே வீடு ஒன்று திடீரென இடிந்தது.
தகவல் கிடைத்ததும், மதுரை தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.
LatestNews
ஜெயலலிதா கோயில் கும்பாபிஷேகம்..

ஜெ.கோயில் கும்பாபிசேகத்திற்கு கிராமம் கிராமாக அமைச்சர் உதயகுமார் அழைப்பு
திருமங்கலம் :
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில்ஜெ.பேரவை சார்பில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் அம்மா கோயில் என்ற பெயரில் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ.க்கு கோயில் கட்டப்படுகிறது. இதில் இருவருக்கும் 8 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், ஜன.30 ல் கும்பாபிசேகம் நடக்க உள்ளது.
இந்த கும்பாபிசேகத்திற்கு முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்காக திருமங்கலம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அமைச்சர் உதயகுமார் நேரில் சென்று கும்பாபிசேகத்தில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.