LatestNews
சிறுவன் தூக்கிட்டு சாவு…
அடிக்கடி செல்போனில் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தூக்கு போட்டு தற்கொலை:
மதுரை.டிச.21.
அடிக்கடி செல்போனில் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பரங்குன்றம் ஜே ஜே நகர் துர்கா காலனி முதல் தெருவை சேர்ந்தவர் கணேசன் இவரது மகன் குருசாமி 17 .இவர் எந்த நேரமும் செல்போனில் பேசிக் கொண்டு இருப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார். இதை அவரது பெற்றறோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்து போன குருசாமி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அம்மா பாக்கியலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
***********************************
மதுரை பசும்பொன் நகரில்வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு:
மதுரை.டிச.21.
மதுரை பசும்பொன் நகரில்வீட்டின் கதவை உடைத்து பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை பசும்பொன் நகர் கவி பாரதி தெரு தெருவை சேர்ந்தவர் முத்துவேல் 54 இவர் சம்பவத்தன்று குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார் .பினனர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் பீரோவில் வைத்திருந்த ரூபாய் 10 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். இந்த திருட்டு தொடர்பாக முத்துவேல் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
******************************
மதுரை கோச்சடையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு:
மதுரை டிச 21
மதுரை கோச்சடை பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு போலீஸ் விசாரணை
கோச்சடை முத்து தேவர் தெருவை சேர்ந்தவர் ஜானகி 60 .இவர் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார் .அப்போது பைக்கில் வந்த நபர்கள் அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க செயினை பறித்து சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜானகி கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு ப் பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
*********************************
மதுரை நிதி நிறுவனத்தில் காசோலையை திருடி பணமோசடி ஊழியர்களிடம் போலீஸ் விசாரணை :
மதுரை டிச 21 .
மதுரையில் நிதி நிறுவனத்தில் காசோலையை திருடி பணம் மோசடி செய்ததாக ஊழியர்களிடம் போலீசார் விசாரணை.
மதுரை கீழ வைத்தியநாதபுரம்கொன்னவாயன் சாலையில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் கேசியராகசத்யராஜ் என்பவர் உள்ளார். சம்பவத்தன்று இந்த நிறுவனத்தின் காசோலை ஒன்று தொலைந்து விட்டதாகவும் அந்த காசோலையில் ரூபாய் 92 ஆயிரம் நிரப்பப்பட்டு அதை அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் மோசடிசெய்துவிட்டதாகவும் செய்துவிட்டதாகவும் சத்யராஜ் செல்லூர்போலீசில் புகார் செய்தார்
போலீசார் வழக்கு பதிவு செய்து புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
************************************
குறிப்பிட்ட எந்திரங்களை மட்டும் வாங்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்
மோட்டார் வாகன புகை பரிசோதனை பயங்களின் சங்கம் கோரிக்கை:
மதுரை டிச21
தமிழ்நாடு வாகன புகை பரிசோதனை மையங்களில் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் செயலாளர் ராஜசேகர் பொருளாளர் நந்தகோபால் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியதாவது வாகன புகை பரிசோதனை செய்வதற்கான இயந்திரங்கள் விற்பனைக்கு குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டும் தமிழக போக்குவரத்து துறை ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார் . மத்தியமோட்டார்வாகனவிதியின்படிஇருபத்தாறு நிறுவனங்கள் இயந்திரங்களை தயாரித்து விற்கின்றன .அவற்றில் மூன்றுக்கு மட்டும் ஆதரவாக தமிழகத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது இதனால் ஏற்கனவே விற்கப்பட்டு இயந்திரங்கள் கூடுதலாக விலை வைத்து விற்கப்படுகிறது .அரசு பரிந்துரைக்கும் எந்திரங்களில் நாங்கள் நீண்ட காலமாக பயன்படுத்தும் எந்திரங்கள்தொடர்பான விபரங்கள் எதுவும் இடம்பெறவில்லை.எங்களது உறுப்பினர்கள் புதிதாக மையங்களைத் திறப்பதற்கு மத்திய அரசின் அனுமதி பெற்ற தரமான எந்திரங்களை வாங்கி விண்ணப்பிக்கும்போது வாய்மொழி உத்தரவாக அந்த எந்திரங்களுக்கு. அனுமதியை
மறுக்கின்றனர் இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கவில்லை .இந்த உத்தரவுகுறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஆதரவாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.எனவேஇந்த உத்தரவை உடனடியாகரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம் .எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால்
நாங்கள் எங்கள் சங்கங்களின் சார்பாக பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்த உள்ளோம் என்று தெரிவித்தனர்.
LatestNews
கொங்குநாட்டு பூப்பறிக்கும் விழா

கோவை மாவட்டத்திலுள்ள அங்காளம்மன் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பூப்பறிக்கும் திருவிழா நடைபெற்றது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகிலுள்ள மெட்டுவாவி கிராமத்தில் ஒரு அங்காளம்மன் உள்ளது. அக்கோவிலில் காணும் பொங்கலையொட்டி 40 ஆண்டுகளுக்குப் பின் "கொங்குநாட்டு பூப்பறிக்கும்" திருவிழா எனும் கலாச்சார விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட பெண்கள் தங்களது வீடுகளிலிருந்து பொரி,சுண்டல் கடலை, பழங்கள் இனிப்புகள் ஆகியவற்றை கூடையில் போட்டு தலையில் வைத்து ஊர்வலமாக ஊர் எல்லையில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு சென்றனர்.
அதன்பின் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்து முடிந்த பின் கூடையில் கொண்டு வந்த இனிப்புகள்,பழங்கள் போன்றவற்றை பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர்.மேலும் இவ்விழாவில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் பாரம்பரியக் கலைகளுள் ஒன்றான வள்ளி கும்மி பாட்டு பாடி நடனம் ஆடினர்.
LatestNews
மதுரையில் கொரோனா தடுப்பூசி
உலகமே, நாடே எதிர்பார்த்த விசயம் தடுப்பு ஊசி இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது எனவும், பிரதமரின் நடவடிக்கை வெற்றி பெற்று உள்ளதாகவும் மதுரையில் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி பேட்டி:
மதுரை
மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனையில் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர், முதல்வர் மற்றும் துணை முதல்வர் தடுப்பு ஊசி வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தனர், இந்தியா முழுதும் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் பணியை பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார், மதுரையிலிருந்து கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்றனர், தமிழகம் முழுதும் 166 மையங்களில் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கப்படுகிறது, முதல் தடுப்பு ஊசி தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர் மருத்துவர் செந்திலுக்கு போடப்பட்டது, ஒரு நாளுக்கு ஒரு மையத்தில் 100 பேருக்கு தடுப்பு ஊசி போடப்படுகிறது, மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர்களுக்கு கோவிட் – 19 தடுப்பு ஊசி போடப்படுகிறது, முதல் கட்டமாக தமிழகம் முழுதும் 6 இலட்சம் முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி போடப்படுகிறது, இந்திய மருத்துவத்துறையின் வழிகாட்டுதல் படி கோவிட் – 19 தடுப்பு ஊசி போடப்படுகிறது, ஒரு தடுப்பு ஊசி பாட்டிலில் 5 மி.லி மருந்துகள் உள்ளன, ஒரு நபருக்கு 0.5 மி.லி தடுப்பு ஊசி மருந்துகள் செலுத்தப்படும், இந்திய மருத்துவத்துறையின் வழிகாட்டுதல் படி கோவிட் – 19 தடுப்பு ஊசி போடப்படுகிறது, ஒரு தடுப்பு ஊசி பாட்டிலில் 5 மி.லி மருந்துகள் உள்ளன, ஒரு நபருக்கு 0.5 மி.லி தடுப்பு ஊசி மருந்துகள் செலுத்தப்படும், கோவிட் – 19 தடுப்பு ஊசி போட்டு கொண்டவர்கள் மது அருந்த கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது, நிகழ்வின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி கூறுகையில் "பிரதமர் எடுத்த நடவடிக்கைகள் வெற்றி பெற்றுள்ளது, முதல் கட்டமாக முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி போடப்படும், ஒவ்வொருவருக்கும் இரண்டு கட்டமாக தடுப்பு ஊசி போடப்படும், தமிழகத்தில் 166 இடங்களில் தடுப்பு ஊசி போடப்படுகிறது, தமிழகம் முழுதும் 226 இடங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது, வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்று இருக்கிறது, பிரதமரின் விட முயற்சியால் தடுப்பு ஊசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது, முதல் கட்டமாக 5 இலட்சத்து 56 ஆயிரம் தடுப்பு ஊசிகள் தமிழகம் வந்துள்ளது, அனைவரும் தடுப்பு ஊசிகள் எடுக்க வேண்டும், உலகமே, நாடே எதிர்பார்த்த விசயம் தடுப்பு ஊசி, இன்று ஒரு நல்ல நாளாக அமைந்துள்ளது, முழு ஆராய்ச்சி செய்யப்பட்டு தடுப்பு ஊசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு ஊசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது, நம்மை காக்கும் மருத்துவர்கள் தான் முதலில் தடுப்பு ஊசி போட்டு கொண்டு உள்ளார், தடுப்பு ஊசி போட்டு கொள்வதில் மக்கள் அச்சப்பட வேண்டும், மக்கள் கொரைனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், தற்காலிக எம்.ஆர்.பி செவிலியர்கள் படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவார்கள், தமிழக அரசு தொடர்ந்து கொரைனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது" என கூறினார்
LatestNews
நந்திக்கு சிறப்பு அலங்காரம்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் நந்திகேஷ்வரனுக்கு நடைபெற்ற பூஜை. காய்கனிகளுடன் காட்சி தருகிறார்.
பாலாஜி…திருவண்ணாமலை
-
LatestNews1 month ago
கோவை வள்ளல் சாந்தி கியர்ஸ் உரிமையாளர் இற ைவனடி சேர்ந்தார்.
-
LatestNews3 months ago
வீட்டுக்குள் புகுந்து உடும்பு பிடிபட்டத ு..
-
LatestNews3 months ago
மதுரை அருகே நந்தனார், வள்ளுவர் சிலை கண்ட ுபிடிப்பு…
-
LatestNews3 months ago
தேவர் சிலை அலங்கரிப்பு..
-
LatestNews4 months ago
பாலியல் பகுதியாக மாறி வரும் வாடிப்பட்டி?