LatestNews
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் ஒப்படைப்பு. …அமைச்சர்
*எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் ஒப்படைக்கப்பட்டது தொடர்பான ஆவணம் தயார் – யார் வேண்டுமானாலும் வந்து ஆய்வு செய்து கொள்ளலாம்; வருவாய்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு*
எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு நிலம் ஒப்படைக்கப் படவில்லை என்ற தவறான தகவலை சொல்பவர்களுக்கு மருத்துவமனை இடம் ஒப்படைக்கப்பட்டதற்கு ஆதாரங்களாக ஆவணங்கள் வருவாய்த்துறையிடம் தயாராக உள்ளது. அதை யார் வேண்டுமானாலும் வந்து ஆய்வு செய்து கொள்ளலாம் என திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.பி . உதயகுமார் பேசினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள அம்மா மினி கிளினிக்கை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
*இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் பேசிய அமைச்சர் ஆர் பி உதயகுமார்;*
டிவி கடை, நகைக் கடையை திறந்து வைக்கும்போது நிறைய வாடிக்கையாளர்கள் வர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் திறந்துவைக்கிறோம்.
ஆனால் அம்மா கிளினிக்கிற்கு யாரும் வரக்கூடாது என்று வேண்டி கொள்கிறேன். நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதைத் திறந்து வைக்கிறோம் என அமைச்சர் தெரிவித்தார்.
எய்ம்ஸ் மருத்துவமனை அமையக்கூடிய பகுதியில் நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு, சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கிறது ஆனால் மூன்று மாதத்திற்கு ஒருமுறை யாராவது ஒருவர் ஆர்டிஐ தகவல் மூலம் தான் அங்குள்ள நிலையை தெரிந்து கொண்டு மக்களை குழப்பும் வேலையை செய்கிறார்கள்.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக அரசு நிலம் ஒதுக்க வில்லை என தெரிவித்ததாக எல்லோரும் கூறுகிறார்கள். நிலம் ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டது, காசநோய் மருத்துவமனைக்கு சொந்தமான இடத்தை வருவாய்த் துறைக்கு மாற்றி மத்திய சுகாதாரத் துறைக்கு ஒப்படைப்பு செய்யப்பட்டுவிட்டது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவே ஒப்பந்தம் தள்ளிப் போயிருக்கிறது, எய்ம்ஸ் வருவதை எவராலும் தடுக்க முடியாது.
ஆர்டிஐ தகவல் கேட்டவர்க்கும் சொல்கிறேன் எதிர்க்கட்சித் தலைவருக்கும், சொல்கிறேன் எய்ம்ஸ் வருவது நிச்சயம் யார் வேண்டுமானாலும் ஆவணங்களை வந்து பார்த்துக் கொள்ளலாம் எய்ம்ஸ் தொடர்பான வருவாய்த்துறை ஆவணம் தயார் நிலையில் உள்ளது என்று பேசினார்.
LatestNews
கொங்குநாட்டு பூப்பறிக்கும் விழா

கோவை மாவட்டத்திலுள்ள அங்காளம்மன் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பூப்பறிக்கும் திருவிழா நடைபெற்றது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகிலுள்ள மெட்டுவாவி கிராமத்தில் ஒரு அங்காளம்மன் உள்ளது. அக்கோவிலில் காணும் பொங்கலையொட்டி 40 ஆண்டுகளுக்குப் பின் "கொங்குநாட்டு பூப்பறிக்கும்" திருவிழா எனும் கலாச்சார விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட பெண்கள் தங்களது வீடுகளிலிருந்து பொரி,சுண்டல் கடலை, பழங்கள் இனிப்புகள் ஆகியவற்றை கூடையில் போட்டு தலையில் வைத்து ஊர்வலமாக ஊர் எல்லையில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு சென்றனர்.
அதன்பின் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்து முடிந்த பின் கூடையில் கொண்டு வந்த இனிப்புகள்,பழங்கள் போன்றவற்றை பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர்.மேலும் இவ்விழாவில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் பாரம்பரியக் கலைகளுள் ஒன்றான வள்ளி கும்மி பாட்டு பாடி நடனம் ஆடினர்.
LatestNews
மதுரையில் கொரோனா தடுப்பூசி
உலகமே, நாடே எதிர்பார்த்த விசயம் தடுப்பு ஊசி இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது எனவும், பிரதமரின் நடவடிக்கை வெற்றி பெற்று உள்ளதாகவும் மதுரையில் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி பேட்டி:
மதுரை
மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனையில் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர், முதல்வர் மற்றும் துணை முதல்வர் தடுப்பு ஊசி வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தனர், இந்தியா முழுதும் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் பணியை பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார், மதுரையிலிருந்து கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்றனர், தமிழகம் முழுதும் 166 மையங்களில் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கப்படுகிறது, முதல் தடுப்பு ஊசி தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர் மருத்துவர் செந்திலுக்கு போடப்பட்டது, ஒரு நாளுக்கு ஒரு மையத்தில் 100 பேருக்கு தடுப்பு ஊசி போடப்படுகிறது, மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர்களுக்கு கோவிட் – 19 தடுப்பு ஊசி போடப்படுகிறது, முதல் கட்டமாக தமிழகம் முழுதும் 6 இலட்சம் முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி போடப்படுகிறது, இந்திய மருத்துவத்துறையின் வழிகாட்டுதல் படி கோவிட் – 19 தடுப்பு ஊசி போடப்படுகிறது, ஒரு தடுப்பு ஊசி பாட்டிலில் 5 மி.லி மருந்துகள் உள்ளன, ஒரு நபருக்கு 0.5 மி.லி தடுப்பு ஊசி மருந்துகள் செலுத்தப்படும், இந்திய மருத்துவத்துறையின் வழிகாட்டுதல் படி கோவிட் – 19 தடுப்பு ஊசி போடப்படுகிறது, ஒரு தடுப்பு ஊசி பாட்டிலில் 5 மி.லி மருந்துகள் உள்ளன, ஒரு நபருக்கு 0.5 மி.லி தடுப்பு ஊசி மருந்துகள் செலுத்தப்படும், கோவிட் – 19 தடுப்பு ஊசி போட்டு கொண்டவர்கள் மது அருந்த கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது, நிகழ்வின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி கூறுகையில் "பிரதமர் எடுத்த நடவடிக்கைகள் வெற்றி பெற்றுள்ளது, முதல் கட்டமாக முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி போடப்படும், ஒவ்வொருவருக்கும் இரண்டு கட்டமாக தடுப்பு ஊசி போடப்படும், தமிழகத்தில் 166 இடங்களில் தடுப்பு ஊசி போடப்படுகிறது, தமிழகம் முழுதும் 226 இடங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது, வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்று இருக்கிறது, பிரதமரின் விட முயற்சியால் தடுப்பு ஊசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது, முதல் கட்டமாக 5 இலட்சத்து 56 ஆயிரம் தடுப்பு ஊசிகள் தமிழகம் வந்துள்ளது, அனைவரும் தடுப்பு ஊசிகள் எடுக்க வேண்டும், உலகமே, நாடே எதிர்பார்த்த விசயம் தடுப்பு ஊசி, இன்று ஒரு நல்ல நாளாக அமைந்துள்ளது, முழு ஆராய்ச்சி செய்யப்பட்டு தடுப்பு ஊசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு ஊசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது, நம்மை காக்கும் மருத்துவர்கள் தான் முதலில் தடுப்பு ஊசி போட்டு கொண்டு உள்ளார், தடுப்பு ஊசி போட்டு கொள்வதில் மக்கள் அச்சப்பட வேண்டும், மக்கள் கொரைனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், தற்காலிக எம்.ஆர்.பி செவிலியர்கள் படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவார்கள், தமிழக அரசு தொடர்ந்து கொரைனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது" என கூறினார்
LatestNews
நந்திக்கு சிறப்பு அலங்காரம்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் நந்திகேஷ்வரனுக்கு நடைபெற்ற பூஜை. காய்கனிகளுடன் காட்சி தருகிறார்.
பாலாஜி…திருவண்ணாமலை
-
LatestNews1 month ago
கோவை வள்ளல் சாந்தி கியர்ஸ் உரிமையாளர் இற ைவனடி சேர்ந்தார்.
-
LatestNews3 months ago
வீட்டுக்குள் புகுந்து உடும்பு பிடிபட்டத ு..
-
LatestNews3 months ago
மதுரை அருகே நந்தனார், வள்ளுவர் சிலை கண்ட ுபிடிப்பு…
-
LatestNews3 months ago
தேவர் சிலை அலங்கரிப்பு..
-
LatestNews4 months ago
பாலியல் பகுதியாக மாறி வரும் வாடிப்பட்டி?