LatestNews
கோழிக்கறி மொத்த வியாபாரிகள் சங்கக் கூட் டம்

மதுரையில் பிராய்லர் கோழிக்கறி மொத்த வியாபாரிகள் சங்க கூட்டம்
மதுரை டிச. 17-
மதுரை மாவட்ட பிராய்லர் கறிக்கோழி மொத்த வியாபாரிகள் சங்க கூட்டம் அரசரடியில் சங்க தலைவர் ஷாசுலி இப்ராஹிம் தலைமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோழிப்பண்ணையில் தீவனத்துடன் கோழிகள் விற்பனைக்கு ஏற்றப்படும் என்று பண்ணையாளர்களும் தனியார் கம்பெனிகளும் அறிவிப்பு விடுத்திருந்தனர். இந்த அறிவிப்பை தளர்வு செய்ய வேண்டும் அது மட்டும் இல்லாமல் கோழிகள் விற்பனைக்கு வரும் பொழுது நான்கு மணி நேரம் தீவனக்கட்டுப்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. வரும் வெள்ளிக்கிழமை திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு சங்க பொருளாளர் கனகராஜ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஜார்ஜ் ரவி நன்றி கூறினார்.
LatestNews
திறக்கப்படாத சமுதாயக் கூடம்

சமூக விரோதிகள் கூடாரமாக மாறிய
சமுதாய கூடம் மக்கள் கொதிப்பு
மதுரை, ஜன. 24
புதூரில் தி.மு.க., சார்பில் பகுதி செயலாளர் அக்ரீ கனேசன், 46 வது வார்டு வட்ட செயலாளர் மருது ஆகியோர் ஏற்பாட்டில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. பொறுப்புக் குழு உறுப்பினர் பொன். முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். பொறுப்புக் குழு உறுப்பினர்கள் எஸ்ஸார் கோபி, வேலுச்சாமி, குழந்தைவேலு, முன்னாள் அமைச்சர் தமிழரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் 2010ல் கட்டி முடிக்கப்பட்ட சுகாதார வளாகம் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இங்குள்ள சமுதாயக்கூடம் 10 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராததால், சமூக விரோதிகள் கூடாரமாக மாறிவிட்டது. குப்பைத் தொட்டியின் அருகே சமூக விரோத செயல்கள் நடைபெறுவதால் பெண்கள் செல்ல அச்சமாக உள்ளது. இப்பகுதியில் போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்க வேண்டும் போன்ற ஏராளமான புகார்களை தெரிவித்தனர்.
LatestNews
கிராம சபைக் கூட்டம் நடத்த கோரிக்கை…

கொரோனாவால் பல கிராமங்களில் நடைபெறாத கிராமசபைக் கூட்டங்களை வரும் ஜனவரி 26 குடியரசு தினத்தில் எல்லா கிராமங்களிலும் கிராமசபை கூட்டங்களில் நடத்த வேண்டும் என கோரி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட வந்த மக்கள் நீதி மையத்தின் தொழிலாளர் அணி தென் மேற்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் தலைமையில் மனு கொடுத்தனர்.
LatestNews
யாகசாலை அமைக்கும் பணி

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை தொடங்குகிறது சிறுவர் சிறுமியர்கள் குடங்கள் எடுத்து வருகின்றனர் சோழவந்தான் ஜன 22 சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வருகிற 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது இதையொட்டி நாளை காலை 5 மணி அளவில் யாக பூஜை தொடங்குகிறது 9 மணியளவில் வைகை ஆற்றில் சிறுவர் சிறுமியர்கள் தீர்த்த குடம் எடுத்து நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து கோவிலை வந்து அடைந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது நாளை மறுநாள் தொடர்ந்து யாக பூஜை நடைபெற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பூஜை தொடங்கி ஒன்பது ஐந்து மணியிலிருந்து ஒன்பது 55 மணிக்குள் ராஜகோபுரம் விமானம் மும்மூர்த்தி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது இதைத் தொடர்ந்து விநாயகர் முருகன் ஜெனகை மாரியம்மன் உட்பட பரிகார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது விழாவுக்கு வருகை தரும் அனைவருக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் சுப்ரமணியன் செட்டியார் கௌரவத் தலைவர் மாணிக்கம் எம்எல்ஏ இணைச்செயலாளர் கொரியர் கணேசன் உதவி தலைவர்கள் முருகேசன் மணி என்ற முத்தையா பால்பாண்டி சின்னப்பாண்டி ஜவகர் செயல் அலுவலர்கள் இளஞ்செழியன் இளமதி ஆலயப் பணியாளர்கள் பூபதி வசந்த் கவிதா ஆகியோர் செய்து வருகின்றனர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவின்பேரில் சமையல் துணை கண்காணிப்பாளர் ஆனந்த ஆலோசனை பேரில் இன்ஸ்பெக்டர் வசந்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவ விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம் பேரூராட்சி இருந்து சுகாதார ஏற்பாடு கூடுதல் திருவிளக்கு கூடுதல் கழிப்பறை வசதிகள் குடிநீர் வசதிகள் செய்து வருகின்றனர் சோழவந்தான் அரசு பஸ் டிப்போவில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்து வருகின்றனர் படவிளக்கம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்