LatestNews
தூக்கிட்டு சாவு
நிரந்தர வேலை இல்லாத ஏக்கத்தில் தந்தை தூக்கு போட்டு சாவு
மகன் புகார்
மதுரை.டிச.14. நிரந்தர வேலை இல்லாத ஏக்கத்தில் தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் மகன் புகார்.
கீரதுறை இருளப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் 57 .இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.இவருக்கு நிரந்தர வேலை இல்லை இதனால் மனமுடைந்து காணப்பட்ட முத்துராமலிங்கம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.இதுதொடர்பாக மகன் அய்யனார் கொடுத்த புகாரின் பேரில் கீரத்துரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
*****"****************************
குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
போலீஸ் விசாரணை
மதுரை.டிச.14. குழந்தை இல்லாத ஏக்கத்தில் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெத்தானியாபுரம் அண்ணா மெயின்ரோடை சேர்ந்தவர் ராஜமோகன் மகன் கார்த்திக் 27. இவருக்கு திருமணம் ஆனது முதல் குழந்தை இல்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கார்த்திக் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் தொடர்பாக மனைவி ஈஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
************************************
போலீஸ் தேர்வுஎழுத முடியாததால் மனமுடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை.
மதுரை.டிச.14. போலீஸ் தேர்வு எழுத முடியாமல் போனதால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கூடல்புதூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் வினோத்குமார் 24 .இவர் போலீஸ் வேலையை கனவாகக் கொண்டிருந்தார் .அதற்கான தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். ஆனால் சரியாக தயாராகமுடியவில்லை.இதனால் தேர்வு எழுத செல்லவில்லை. இதனால் மனம் உடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் தொடர்பாக அப்பா கொடுத்த கூடல்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
************************************
கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த மனைவி தூக்கு போட்டு தற்கொலை
மதுரை.டிச.14.கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த மனைவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கூடல்புதூர் செல்லையா நகர் முதல் தெரு வைச் சேர்ந்தவர் காயத்திரி 23. இவர் 2018 காதல் திருமணம் செய்து கொண்டார். கணவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. குடித்துவிட்டு இவர் வீட்டுக்கு வருவ வந்ததால் மனைவி கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது .இதனால் மனமுடைந்த காயத்ரி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக காயத்ரி அம்மா பெரியநாயகி கொடுத்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
************************************
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் வாள்முனையில் வாலிபரை மிரட்டி பணம் பறித்த ரவுடிகள் கைது
மதுரை.டிச.14. மதுரை ஜெய் ஹிந்து புரத்தில் வாலிபரை வழிமறித்து வாள் முனையில் மிரட்டி பணம் பறித்த ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் எம்கே புரத்தை சேர்ந்தவர் ரவி மகன் கார்த்திகேயன் 25 .இவர்அதே பகுதியில் சென்றபோது ஜீவாநகர் 2-வது தெருவை சேர்ந்த ரவுடிகள் மணிகண்டன் 30 ஜீவா நகர் சோனியா கோவில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மொட்டைமணி 26 இவர்கள் இருவரும் கார்த்திகேயனை வழிமறித்து வாள் முனையில் மிரட்டி ரூபாய் ஆயிரத்து 350ஐபறித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திகேயன் ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன் 30 மணி கண்டன் என்ற மொட்டைமணி26 இருவரையும் கைது செய்தனர்..
LatestNews
கொங்குநாட்டு பூப்பறிக்கும் விழா

கோவை மாவட்டத்திலுள்ள அங்காளம்மன் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பூப்பறிக்கும் திருவிழா நடைபெற்றது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகிலுள்ள மெட்டுவாவி கிராமத்தில் ஒரு அங்காளம்மன் உள்ளது. அக்கோவிலில் காணும் பொங்கலையொட்டி 40 ஆண்டுகளுக்குப் பின் "கொங்குநாட்டு பூப்பறிக்கும்" திருவிழா எனும் கலாச்சார விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட பெண்கள் தங்களது வீடுகளிலிருந்து பொரி,சுண்டல் கடலை, பழங்கள் இனிப்புகள் ஆகியவற்றை கூடையில் போட்டு தலையில் வைத்து ஊர்வலமாக ஊர் எல்லையில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு சென்றனர்.
அதன்பின் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்து முடிந்த பின் கூடையில் கொண்டு வந்த இனிப்புகள்,பழங்கள் போன்றவற்றை பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர்.மேலும் இவ்விழாவில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் பாரம்பரியக் கலைகளுள் ஒன்றான வள்ளி கும்மி பாட்டு பாடி நடனம் ஆடினர்.
LatestNews
மதுரையில் கொரோனா தடுப்பூசி
உலகமே, நாடே எதிர்பார்த்த விசயம் தடுப்பு ஊசி இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது எனவும், பிரதமரின் நடவடிக்கை வெற்றி பெற்று உள்ளதாகவும் மதுரையில் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி பேட்டி:
மதுரை
மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனையில் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர், முதல்வர் மற்றும் துணை முதல்வர் தடுப்பு ஊசி வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தனர், இந்தியா முழுதும் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் பணியை பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார், மதுரையிலிருந்து கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்றனர், தமிழகம் முழுதும் 166 மையங்களில் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கப்படுகிறது, முதல் தடுப்பு ஊசி தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர் மருத்துவர் செந்திலுக்கு போடப்பட்டது, ஒரு நாளுக்கு ஒரு மையத்தில் 100 பேருக்கு தடுப்பு ஊசி போடப்படுகிறது, மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர்களுக்கு கோவிட் – 19 தடுப்பு ஊசி போடப்படுகிறது, முதல் கட்டமாக தமிழகம் முழுதும் 6 இலட்சம் முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி போடப்படுகிறது, இந்திய மருத்துவத்துறையின் வழிகாட்டுதல் படி கோவிட் – 19 தடுப்பு ஊசி போடப்படுகிறது, ஒரு தடுப்பு ஊசி பாட்டிலில் 5 மி.லி மருந்துகள் உள்ளன, ஒரு நபருக்கு 0.5 மி.லி தடுப்பு ஊசி மருந்துகள் செலுத்தப்படும், இந்திய மருத்துவத்துறையின் வழிகாட்டுதல் படி கோவிட் – 19 தடுப்பு ஊசி போடப்படுகிறது, ஒரு தடுப்பு ஊசி பாட்டிலில் 5 மி.லி மருந்துகள் உள்ளன, ஒரு நபருக்கு 0.5 மி.லி தடுப்பு ஊசி மருந்துகள் செலுத்தப்படும், கோவிட் – 19 தடுப்பு ஊசி போட்டு கொண்டவர்கள் மது அருந்த கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது, நிகழ்வின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி கூறுகையில் "பிரதமர் எடுத்த நடவடிக்கைகள் வெற்றி பெற்றுள்ளது, முதல் கட்டமாக முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி போடப்படும், ஒவ்வொருவருக்கும் இரண்டு கட்டமாக தடுப்பு ஊசி போடப்படும், தமிழகத்தில் 166 இடங்களில் தடுப்பு ஊசி போடப்படுகிறது, தமிழகம் முழுதும் 226 இடங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது, வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்று இருக்கிறது, பிரதமரின் விட முயற்சியால் தடுப்பு ஊசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது, முதல் கட்டமாக 5 இலட்சத்து 56 ஆயிரம் தடுப்பு ஊசிகள் தமிழகம் வந்துள்ளது, அனைவரும் தடுப்பு ஊசிகள் எடுக்க வேண்டும், உலகமே, நாடே எதிர்பார்த்த விசயம் தடுப்பு ஊசி, இன்று ஒரு நல்ல நாளாக அமைந்துள்ளது, முழு ஆராய்ச்சி செய்யப்பட்டு தடுப்பு ஊசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு ஊசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது, நம்மை காக்கும் மருத்துவர்கள் தான் முதலில் தடுப்பு ஊசி போட்டு கொண்டு உள்ளார், தடுப்பு ஊசி போட்டு கொள்வதில் மக்கள் அச்சப்பட வேண்டும், மக்கள் கொரைனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், தற்காலிக எம்.ஆர்.பி செவிலியர்கள் படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவார்கள், தமிழக அரசு தொடர்ந்து கொரைனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது" என கூறினார்
LatestNews
நந்திக்கு சிறப்பு அலங்காரம்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் நந்திகேஷ்வரனுக்கு நடைபெற்ற பூஜை. காய்கனிகளுடன் காட்சி தருகிறார்.
பாலாஜி…திருவண்ணாமலை
-
LatestNews1 month ago
கோவை வள்ளல் சாந்தி கியர்ஸ் உரிமையாளர் இற ைவனடி சேர்ந்தார்.
-
LatestNews3 months ago
வீட்டுக்குள் புகுந்து உடும்பு பிடிபட்டத ு..
-
LatestNews3 months ago
மதுரை அருகே நந்தனார், வள்ளுவர் சிலை கண்ட ுபிடிப்பு…
-
LatestNews3 months ago
தேவர் சிலை அலங்கரிப்பு..
-
LatestNews4 months ago
பாலியல் பகுதியாக மாறி வரும் வாடிப்பட்டி?