LatestNews
சாஸ்தா நீர்தேக்கத்தில் ஆய்வு..

புரெவி புயல் எச்சரிக்கையை அடுத்து மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சாஸ்தா கோவில் நீர்த்தேக்கம் அய்யனார் கோயில் பகுதியில் மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள சாஸ்தா கோவில் நீர் தேக்கம் மற்றும் அய்யனார் கோயில் பகுதிகளில் கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து இராஜபாளையம் நகர் பகுதி மற்றும் கிராமப் பகுதிகளில் கண்மாய் மற்றும் நீர் நிலைகளில் நீர் தேங்கியுள்ளது இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் புரெவி புயல் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது அறிவித்துள்ளது இதனடிப்படையில் இன்று சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அரசு செயலாளர் மாவட்ட கண்காணிப்பாளர் மதுமதி மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனார் உடன் கோட்டாட்சியர் காசி செல்வி, வட்டாசியர் ஸ்ரீதர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்
புரெவி புயலை அடுத்து ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடி பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்
LatestNews
கிராம மக்கள் முற்றுகை போராட்டம்..

ஆட்சியர் அலுவலக முன்பு முற்றுகை போராட்டம்:
மதுரை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட
கொம்பாரி கிராம ஊராட்சியில் உள்ள கீழக் கண்மாய் மற்றும் மேலக் கண்மாய்களுக்கு நிலையூர் – கம்பிகுடி கால்வாயிலிருந்து தொட்டியபட்டி பிரிவிலுள்ள நெடுமதுரை கடல் வழியாக மேற்சொன்ன கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க ஆவணம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தும் , தண்ணீர் திறந்து விடக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்த திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆசிக்கை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே அவரை மீண்டும் பணியிலமர்த்தக் கோரியும் கொம்பாரி
ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில்
கொம்பாரி ஊர் பொதுமக்கள் சுமார் 450 பேர் தங்களது குடும்ப அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக கூறி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுக்கை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.கி
LatestNews
திடீரென வீடு இடிந்து விழுந்தது…

மதுரை தெற்கு வாசல் மீனாட்சி டாக்கீஸ் அருகே வீடு ஒன்று திடீரென இடிந்தது.
தகவல் கிடைத்ததும், மதுரை தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.
LatestNews
ஜெயலலிதா கோயில் கும்பாபிஷேகம்..

ஜெ.கோயில் கும்பாபிசேகத்திற்கு கிராமம் கிராமாக அமைச்சர் உதயகுமார் அழைப்பு
திருமங்கலம் :
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில்ஜெ.பேரவை சார்பில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் அம்மா கோயில் என்ற பெயரில் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ.க்கு கோயில் கட்டப்படுகிறது. இதில் இருவருக்கும் 8 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், ஜன.30 ல் கும்பாபிசேகம் நடக்க உள்ளது.
இந்த கும்பாபிசேகத்திற்கு முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்காக திருமங்கலம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அமைச்சர் உதயகுமார் நேரில் சென்று கும்பாபிசேகத்தில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.