LatestNews
தமிழக முதல்வர் பம்பரம் போல சுழன்று பணியா ற்றுகிறார்…அமைச்சர்

தமிழக முதல்வர் பம்பரம் சுழலன்று செயலாற்றுகிறார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
மதுரை
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பம்பரம் போல சுழன்று தமிழக மக்களுக்காக செயலாற்றி வருகிறார் என, தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
மதுரை கிழக்குத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் மகள் திருமணத்தை விசாரிக்க வந்து விட்டு நிருபர்களிடம் மதுரையில் அவர் பேசியது:
தமிழக முதல்வர் எடப்பாடியார் மாவட்டங்கள் தோறும் நேரில் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார். மக்களின் தேவைகளை அறிந்து அதிமுக அரசு திட்டம் தீட்டி வருகிறது.
விருதுநகர் மாவட்டத்துக்கு வருகை தரவுள்ள தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும்.
அதிமுக அரசு எந்த நல்ல திட்டங்களை மக்கள் நலன் கருதி செயல்படுத்தினால், அதை திமுக தலைவர் குறை சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதிமுகவை பொறுத்தமட்டில், தமிழக முதல்வரும், துணை முதல்வரும் இணைந்து பல்வேறு நலத்திட்டங்களை, மக்களுக்கு அளித்து வருகின்றனர் என்றார்.
LatestNews
கிராம மக்கள் முற்றுகை போராட்டம்..

ஆட்சியர் அலுவலக முன்பு முற்றுகை போராட்டம்:
மதுரை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட
கொம்பாரி கிராம ஊராட்சியில் உள்ள கீழக் கண்மாய் மற்றும் மேலக் கண்மாய்களுக்கு நிலையூர் – கம்பிகுடி கால்வாயிலிருந்து தொட்டியபட்டி பிரிவிலுள்ள நெடுமதுரை கடல் வழியாக மேற்சொன்ன கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க ஆவணம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தும் , தண்ணீர் திறந்து விடக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்த திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆசிக்கை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே அவரை மீண்டும் பணியிலமர்த்தக் கோரியும் கொம்பாரி
ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில்
கொம்பாரி ஊர் பொதுமக்கள் சுமார் 450 பேர் தங்களது குடும்ப அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக கூறி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுக்கை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.கி
LatestNews
திடீரென வீடு இடிந்து விழுந்தது…

மதுரை தெற்கு வாசல் மீனாட்சி டாக்கீஸ் அருகே வீடு ஒன்று திடீரென இடிந்தது.
தகவல் கிடைத்ததும், மதுரை தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.
LatestNews
ஜெயலலிதா கோயில் கும்பாபிஷேகம்..

ஜெ.கோயில் கும்பாபிசேகத்திற்கு கிராமம் கிராமாக அமைச்சர் உதயகுமார் அழைப்பு
திருமங்கலம் :
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில்ஜெ.பேரவை சார்பில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் அம்மா கோயில் என்ற பெயரில் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ.க்கு கோயில் கட்டப்படுகிறது. இதில் இருவருக்கும் 8 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், ஜன.30 ல் கும்பாபிசேகம் நடக்க உள்ளது.
இந்த கும்பாபிசேகத்திற்கு முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்காக திருமங்கலம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அமைச்சர் உதயகுமார் நேரில் சென்று கும்பாபிசேகத்தில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.