LatestNews
ஏழைமாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்..
நியாய விலைக்கடைகளில் ஏழை எளிய பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பயன்படுத்த ஸ்மார்ட் போன் வழங்க வேண்டும் என்று மதுரையில் நாடார் முன்னேற்ற சங்க சார்பில் கோரிக்கை
மதுரை மாட்டுத்தாவணி பி.டி.ஆர் ஜான் ஹோட்டலில், நாடார்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், எதிர்வரும் நாடார் மகாஜன சங்கம் மற்றும் கல்வி நிறுவனங்களின் தேர்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம், சங்கத்தின் பொதுச் செயலாளர் பெரீஸ் மகேந்திரவேல் தலைமையில், துணை தலைவர் மதுரை பி.டி.ஆர் குழுமங்களின் நிறுவனத் தலைவர் பி.டேனியல் தங்கராஜ் முன்னிலையில் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர் பெரீஸ் மகேந்திரவேல் விரைவில் நடைபெறவிருக்கும் நாடார் மகாஜன சங்கம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான தேர்தலில் பங்கேற்பதுடன் வெற்றி பெறவும் செயல்படுத்த வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கமாக பேசினார். மேலும் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. மதுரையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாநிலம் அறிவிக்க வேண்டும். தமிழக முதல்வர் ஏற்கனவே எங்களது கோரிக்கையை ஏற்று நியாய விலைக் கடைகளில் முகக்கவசம் வழங்கியதைப் போல, ஏழை,எளிய பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பயன்படுத்த ஸ்மார்ட்போன் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் துணைப் பொதுச்செயலாளர் ராமையா, பொருளாளர் ஜோசப் வாசுதேவன்,பாலகுரு, முனிராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
LatestNews
விழா நடத்த கோரிக்கை

விழா நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மனு:
மதுரையில் ஆலய திருவிழாவை நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மாவட்டத் தலைவர் அழகர்சாமி தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மனு அளித்தனர்.
LatestNews
கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் டீக் க டைக்காரர்…

திருப்பரங்குன்றம் அருகே கொரான இரண்டாவது அலைக்காக சோளங்குருணி கிராமத்தில் போராடும் தனி ஒருவர்:
மதுரை
முக கவசம், கப சுரக்குடி நீர் வழங்கி வரும் தன்னார்வலர்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சோளங்குருணி கிராமத்தில் வசிப்பவர் ரவிச்சந்திரன் (வயது 54) இவர் டீக்கடை தொழில் நடத்தி வருகிறார்.
தற்போது வேகமாக பரவிவரும் கொரானா தொற்று இரண்டாவது பரவலை தடுக்கும். விதமாக தன்னார்வலராக ரவிச்சந்திரன் கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
சோளங்குருணி கிராமத்தில் மட்டுமல்லாமல் சுற்றுப்புறங்களில் செல்லும் பேருந்துகளில் ஏறி பொதுமக்கள் அனைவருக்கும் முகக்கவசம் மற்றும் கப சுர குடிநீர் வழங்கி தன்னார்வலராக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
ரவிசந்திரன் ஏற்கனவே கடந்த வருடம் கொரான தொடருக்கு தனது மாருதி ஆம்னி வேனில் ஸ்பீக்கர் மைக்செட் மூலம் விழிப்புணர்வு செய்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக திருமங்கலம் காவல் உதவி கண்காணிப்பாளர் (டிஎஸ்பி ) வினோதினியிடம் பாராட்டு சான்றிதழ் , மற்றும் கேடயம் பரிசு பெற்றவர் என்பது பாராட்டுக்குரிய விஷயம்.
LatestNews
12 April, 2021 14:05

*மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்க கோரி பொதுமக்கள் போராட்டம்.!
மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறும்,கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக விழாவானது பக்தர்கள் அனுமதியின்றி ஆகமவிதிப்படி நடத்தப்பட்டது, இதனையடுத்து கொரோனா பரவல் குறைந்தநிலையில் கோவில்களில் வழிபட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா பரவல் அதிகரித்துவருவதால் இந்த ஆண்டு நடைபெறும் மதுரை சித்திரை திருவிழாவினை பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சித்திரை திருவிழா எப்போதும் போல பக்தர்கள் அனுமதியோடு நடத்தகோரியும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுரை தமுக்கம் மைதானம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்,இதில் பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிவருகின்றனர், போராட்டத்தால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர், கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு காரணத்தால் காவல்துறையினர் அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்ய இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் குண்டுகட்டாக கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.