LatestNews
கால்வாயில் தொழிலாளி சடலமாக மீட்பு..
கால்வாயில் அடித்து சென்ற தொழிலாளி சடலமாக மீட்பு:
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கால்வாயில் வந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை மீட்டனர்.
இது பற்றி கூறப்படுதாவது:
திண்டுக்கல் மருதாங்குளத்தைச் சேர்ந்தவர்
தங்கபாண்டியன் வயது 39. இவர் அதே ஊரில் டீக்கடை நடத்தி வந்தாராம்.
இவர், நிலக்கோட்டை அருகேயுள்ள மட்டப்பாறைக்கு உறவினர் வீட்டுக்கு வந்தவர், அப் பகுதியில் உள்ள பெரியாறு பிரதானக் கால்வாய்க்கு குளிக்க சென்றுள்ளார்.
அப்போது, எதிர்பாரதவிதமாக கால்வாய் நீரானது இவரை தண்ணீரில் இழுத்து சென்றுவிட்டது.
இந்த நிலையில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அழகாபுரி பெரியாறு பிரதானக் கால்வாயில் அலங்காநல்லூர்
போலீஸார் தங்கப் பாண்டியனை சடலமாக மீட்டு, மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
LatestNews
சோலைமலை முருகன் கோயிலில் கொடியேற்றம்…

சோலைமலை முருகன் கோயிலில் கொடியேற்றம்
அழகர்கோவில்
மதுரை அருகே அழகர்மலைமேல் உள்ள 6வது படைவீடு எனும் சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி கொடியேற்றத்துடன் தொடங்இயது இதில் கோவில் நிர்வாக அதிகாரி அனிதா உள்பட பலர் பங்கேற்றனர்.
LatestNews
விடியோவை பார்த்து பரிசு வழங்க கோரிக்கை

பாலமேடு ஜல்லிக்கட்டில்
வீடியோவை பார்த்து பரிசு வழஙக கோரி ஆட்சியரிடம் மனு
மதுரை :
பாலமேடு ஜல்லிக்கட்டில் முறைகேடாக பரிசு வழங்கப்பட்டதாக கூறி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு விழா கமிட்டி நடத்திய முறைகேட்டை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. பொதும்பு பிரபாகரன் க்கு 17 மாடு பிடித்து முதலிடம் பிடித்தார். அதை மறுத்து மற்றொரு நபரை அறிவித்துவிட்டது. பாலமேடு ஜல்லிக்கட்டு வீடியோ பார்த்து அறிவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
LatestNews
மதுபான கடை வேண்டாம்: பாஜக போர்க்கொடி…

டாஸ்மாக் கடை வைக்க எதிர்ப்பு
மதுரை
மதுரை மாவட்ட வாடிப்பட்டி வட்டம், பாலமேடு அருகே உள்ள சுக்காம்பட்டி கிராமத்தில் டாஸ்மார்க் கடை வைக்கக்கூடாது என்று , அக்கிரம மக்களும், பாரதிய ஜனதா கட்சியினரும்
மாவட்ட ஆட்சியாரிடம் மனுகொடுத்தனர்.