LatestNews
சாலைகள் அமைக்க பூமி பூஜை..

இராஜபாளையத்தில் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக சாலைகள் அமைக்க பூமி பூஜையுடன் பணிகளை பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம்
இராஜபாளையம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் ,ரயில்வே மேம்பால பணிகள் என பல்வேறு பணிகள் இந்த பகுதியில் நடந்து வருவதால் சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் மேடுகளாக இருப்பதால் விபத்துக்கள் அதிகரித்து வந்த நிலையில் இன்று பால்வளத் துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பூமி பூஜை போட்டு புதிய சாலை அமைக்கும் பணிகளை துவங்கி வைத்தார் உடன் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா , நகர செயலாளர் பாஸ்கர், நகர அம்மா பேரவை வாக்கில் முருகேசன் கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றார்
அதன்பின் செய்தியாளர்களை சந்திப்பின் போது,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் ரயில்வே மேம்பால திட்டம், பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல பணிகள் பல கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மக்கள் நலன் கருதி அதிமுக அரசினால் கொண்டுவரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது
எதிர்காலத்தில் மக்கள் குடிநீர் பிரச்சினை தீரும், சுகாதாரமான வாறுகால் வசதி கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் தோண்டப்பட்ட சாலைகள் புதிதாக அமைக்க தற்போது 24 கோடி ரூபாய் செலவில் முக்கிய சாலைகள் பணி துவங்கி உள்ளது
மேலும் பல பகுதிகளில் சாலை பணிகளை விரைவில் 40 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அதிமுக அரசு துவங்க உள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.
திமுகவில் ஆ.ராசா தொண்டர்களை தரக்குறைவாக பொதுவெளியில் நாயே என திட்டியது குறித்து நிருபர்கள் கேட்டபோது, இது திமுகவின் கலாச்சாரமாக தொடர்கிறது . ராஜா வாழ்க என கத்தியதிற்க்கு தரகுறைவாக வசைபாடியதால் அவரின் மனநிலை என்னவோ?என விமர்சித்தார்.
LatestNews
விழா நடத்த கோரிக்கை

விழா நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மனு:
மதுரையில் ஆலய திருவிழாவை நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மாவட்டத் தலைவர் அழகர்சாமி தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மனு அளித்தனர்.
LatestNews
கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் டீக் க டைக்காரர்…

திருப்பரங்குன்றம் அருகே கொரான இரண்டாவது அலைக்காக சோளங்குருணி கிராமத்தில் போராடும் தனி ஒருவர்:
மதுரை
முக கவசம், கப சுரக்குடி நீர் வழங்கி வரும் தன்னார்வலர்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சோளங்குருணி கிராமத்தில் வசிப்பவர் ரவிச்சந்திரன் (வயது 54) இவர் டீக்கடை தொழில் நடத்தி வருகிறார்.
தற்போது வேகமாக பரவிவரும் கொரானா தொற்று இரண்டாவது பரவலை தடுக்கும். விதமாக தன்னார்வலராக ரவிச்சந்திரன் கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
சோளங்குருணி கிராமத்தில் மட்டுமல்லாமல் சுற்றுப்புறங்களில் செல்லும் பேருந்துகளில் ஏறி பொதுமக்கள் அனைவருக்கும் முகக்கவசம் மற்றும் கப சுர குடிநீர் வழங்கி தன்னார்வலராக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
ரவிசந்திரன் ஏற்கனவே கடந்த வருடம் கொரான தொடருக்கு தனது மாருதி ஆம்னி வேனில் ஸ்பீக்கர் மைக்செட் மூலம் விழிப்புணர்வு செய்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக திருமங்கலம் காவல் உதவி கண்காணிப்பாளர் (டிஎஸ்பி ) வினோதினியிடம் பாராட்டு சான்றிதழ் , மற்றும் கேடயம் பரிசு பெற்றவர் என்பது பாராட்டுக்குரிய விஷயம்.
LatestNews
12 April, 2021 14:05

*மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்க கோரி பொதுமக்கள் போராட்டம்.!
மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறும்,கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக விழாவானது பக்தர்கள் அனுமதியின்றி ஆகமவிதிப்படி நடத்தப்பட்டது, இதனையடுத்து கொரோனா பரவல் குறைந்தநிலையில் கோவில்களில் வழிபட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா பரவல் அதிகரித்துவருவதால் இந்த ஆண்டு நடைபெறும் மதுரை சித்திரை திருவிழாவினை பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சித்திரை திருவிழா எப்போதும் போல பக்தர்கள் அனுமதியோடு நடத்தகோரியும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுரை தமுக்கம் மைதானம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்,இதில் பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிவருகின்றனர், போராட்டத்தால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர், கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு காரணத்தால் காவல்துறையினர் அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்ய இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் குண்டுகட்டாக கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.