LatestNews
சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று:
*சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு விசாரணை குழுவில் இடம்பெற்றிருந்த இரு சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று : காவலர்களிடம் அவசரமாக முடிக்கப்பட்ட விசாரணை – 3பேருக்கும் ஆகஸ்ட் 5ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு.!!!*
சாத்தான்குளம் கொலை வழக்கில் ஏற்கனவே சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ், ஆய்வாளர் ஸ்ரீதர்,உள்ளிட்ட 5போலிஸ் கைதிகளையும் 3நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரணை நடத்திய நிலையில் கொலை வழக்கில் இரண்டாம் கட்டமாக கைதுசெய்யப்பட்ட 3போலிஸ் கைதிகளான செல்லதுரை, சாமத்துரை, வெயில்முத்து ஆகியோரை 23ஆம் தேதிவரை சிபிஐ காவலில் விசாரிக்க மதுரை மாவட்ட தலைமை நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், 3காவலர்களையும் நேற்று சாத்தான்குளம் காவல் நிலையம், பென்னிக்ஸ் கடை அமைந்திருந்த பகுதி ஆகிய பகுதிகளுக்கு நேரில் அழைத்து சென்ற சிபிஐ காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் ,இரவில் ஒமதுரை சிபிஐ அலுவலகத்திற்கு 3பேரையும் அழைத்துவந்த நிலையில் சிபிஐ குழுவில் இடம்பெற்றிருந்த இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் இன்று காலை வாக்குமூலங்களை ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்றதை தொடர்ந்து 3பேரையும் மதுரை மாவட்ட தலைமை நீதிமன்ற நீதிபதி ஹேமானந்தகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தபட்டதையடுத்து 3காவலர்களுக்கும் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதிவரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதனையடுத்து ,3பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்,ஏற்கனவே, 3காவலர்களையும் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கிய நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக ஒரு நாளுக்கு முன்பாகவே ஆஜர்படுத்தபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது,
இதனிடையே நேற்றைய தினம் சாத்தான்குளத்திற்கு 3பேரையும் அழைத்து சென்றபோது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மதுரை மாநகர ஆயுதப்படை காவலர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பிற்கு சென்ற காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுவருகிறது,மேலும், சிபிஐ விசாரணையின்போது ஆஜரான காவலர்களுக்கும், பென்னிக்ஸ் குடும்பத்தினர், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றகூடிய காவலர்கள் உள்ளிட்ட சிபிஐ அதிகாரிகளோடு தொடர்பில் இருந்த பரிசோதனை நடத்தவாய்ப்பு உள்ளது, இதனையடுத்து ,வழக்கு தொடர்பாக சிபிஐ காவல்துறையினரின் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
LatestNews
உறவின்முறை நிர்வாகிகள் தேர்தல்..

மதுரை பந்தல்குடி கிராமம் ஆதி திராவிடர் உறவின்முறை தலைவர் தேர்தல் நடந்தது. பு.பாலகிருஷ்ணன், வா.சொக்கர், அமாரியப்பன், மொ.மாய அழகர், மு.ரவிச்சந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர். கிராமத்தை சேர்ந்த 1500 பேர் வாக்களித்தனர். தேர்தல் பார்வையாளர் வக்கீல் சரவணன் தலைமையில் தேர்தல் நடந்தது.
LatestNews
பூமிபூஜை

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி முடுக்கங்குளம் ஊராட்சியில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் அமைப்பதற்கான பூமி பூஜை ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி முத்துச்சாமி தலைமையில் நடைபெற்றது.
LatestNews
ராணுவ வீரர் உடலுக்கு மரியாதை
26- 2 – 21
இந்திய திபேத் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றும் மதுரை இராணுவ வீரரின் உடலுக்கு துணை இராணுவத்தினர் 39 குண்டுகள் முழங்க அஞ்சலி:
கிராமமே சோகத்தில் மூழ்கியது, கடைகள் முழுவதும் அடைப்பு.:
மதுரை
மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள பொய்கைகரைப்பட்டியினைச் சேர்ந்த பாலச்சாமி இந்திய திபேத் எல்லை பாதுகாப்பு படையில் கடந்த 14 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் வந்து கடந்த பிப்ரவரி 3ந் தேதி மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் கடந்த 24 ந் தேதி மாலையில் சத்திஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்கள் பதுக்கி வைத்திருந்த கண்ணி வெடிகளில் சிக்கி எதிர்பாராவிதமாக உயிரழந்துள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் பெங்களுரில் இருந்து துணை இராணுவ வாகனம் மூலம் தரை மார்க்கமாக சொந்த ஊரான பொய்கை கரைப்பட்டி கிராமத்திற்கு இன்று துணை இராணுவ வீரர்கள் கொண்டு வந்தனர். பின்னர் உறவினர்களிடம் பிரேத உடல் ஒப்படைக்கப்பட்டது. பிரேத உடலை பார்த்தவுடன் உறவினர்கள் கிராம மக்கள் அனைவரும் கதறி அழுதனர்.
மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பிரேத உடலுக்கு மலர் அஞ்சலி செய்து விட்டு பால்ச்சாமியின் மனைவி ராமலெட்சுமியிடம் ரூ 20 லட்சத்திற்க்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து பிரேத உடலுக்கு துணை ராணுவத்தினர் கமாண்டர் பானு பிர தாப் சிங், துணை கமாண்டர் ராஜேஸ் மீனா ஆகியோர் தலைமையில் அஞ்சலி செய்தனர் பின்னர் அவரது உடலை துணை இராணுவத்தினர் மற்றும் கிராம பொது மக்கள் மயானத்திற்க்கு சுமந்தே கொண்டு சென்றனர். அங்கு துணை இராணுவத்தினர் பிரேத உடலை சவப்பெட்டியிலிருந்து மயானத்தில் வைத்தனர். அதன் பின்னர் மூவர்ண தேசியக் கொடியினை போர்த்தினர். துணை ராணுவத்தினர் 13 பேர் வரிசையில் நின்று, 3 தடவை 39 குண்டுகள் வானை நோக்கி சுட்டனர். பிரேத உடலில் போர்த்தப்பட்ட கொடி அவரது தந்தையிடம் கமாண்டர் வழங்கினார். அதன் பின்னர் பிரேத உடல் எரியூட்டப்பட்டது.
இறந்தவருக்கு ராமலட்சும் என்ற மனைவியும் அவருக்கு நிதிக்ஸா என்ற இரன்று வயது பெண் குழந்தையும் உள்ளது. இறப்பை முன்னிட்டு பொய்கை கரைப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. கிராமங்களே சோகத்தில் மூழ்கின.