LatestNews
படங்கள்…
சோழவந்தான் அரசஞ் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மது பிரியர்கள் அட்டகாசம் ?விளையாட்டு வீரர்கள் வேதனை :
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டைக் கடந்த சிறப்புமிக்க பள்ளி.
இங்கு எந்த அரசு பள்ளியிலும் இல்லாத அளவிற்கு விளையாட்டு மைதானம் பெரியதாக அமைந்துள்ளது. இங்கு அதிகாலை முதல் பள்ளி ஆரம்பிப்பதற்கு முன்பாக உள்ள இடைவெளியில் சோழவந்தான் உட்பட இப்பகுதி கிராமங்களிலிருந்து விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை இங்கே தமிழர் வீர விளையாட்டு களான கபடி,கூடைப்பந்து, இறகுப்பந்து,கால்பந்து, நீளம்,தாண்டுதல்,குதித்து விளையாடுதல்,ஓட்டப் பந்தயம்,ஈட்டி எறிதல் உட்பட அனைத்து விளையாட்டுகளும் விளையாடுவதற்கு வந்து தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதில், மாவட்டம்,மாநிலம், தேசிய அளவில் பதக்கம் வாங்கிய வீரர்களும் இதில் பங்கு பெறுகின்றனர். போலீஸ் மற்றும் ராணுவத்தில் சேர விரும்புபவர்கள் இங்கு வந்து பயிற்சி எடுக்கின்றனர்.இங்குள்ள மைதான சுற்றுச்சுவர்கள் சமூக விரோதிகளால் சேதப்படுத்தி மைதானத்துக்குள் இரவு பகல் பாராமல் மது அருந்துவதும் கஞ்சா குடிப்பதும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
சிலர் ஆடு,மாடுகளை இங்கு வந்து மேய்கின்றனர். .மது அருந்துபவர்கள் குடித்த பாட்டில்களை உடைத்து விட்டுச் செல்கின்றனர். இதுகுறித்து இங்கு விளையாடக்கூடிய விளையாட்டு வீரர்கள் மன வேதனையுடன் கூறுகின்றனர்.
பார்த்தசாரதி வயது 23 …
ஈட்டி எறிதல் வீரர் கூறியபோது இங்கு விளையாடுவதற்கு ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் இதுபோன்று கிடைக்காது. அரசு இந்த மைதானத்தை பாதுகாக்க சுற்றுச்சுவரை உயரமாக கட்டித்தர வேண்டும், அந்தச் சுவரில் சமூக விரோதிகள் ஏறி குதிக்காத வாறு தடுப்பு வேலி அமைக்க வேண்டும். இங்கே இளம் பெண்களும் வந்து விளையாடுவது குறிப்பிடத்தக்கது. விளையாடக்கூடிய அனைத்து வீரர்களுடைய கோரிக்கையாக நான் கேட்டுக்கொள்கிறேன் .இந்த மைதானத்தை முறையாக பராமரித்து பாதுகாத்து மாலை மற்றும் இரவு நேரங்களில் விளையாடுவதற்கு மின் விளக்கு வசதி,கழிப்பறை வசத, தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும். இதனால் ,இப்பகுதி விளையாட்டு வீரர்களை கூடுதலாக ஊக்குவிக்கும் . சோழவந்தான் பகுதி விளையாட்டு சிறுவர் மற்ற இளைஞர்கள் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வாய்ப்பாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
சவுந்தரபாண்டி சமூக ஆர்வலர் கூறுகையில் …
சோழவந்தான் வெற்றிலை பெயர் பெற்றதோ அதேபோல் கூடைப்பந்து போட்டியில் இப்பகுதியில் உள்ள விளையாட்டு வீரர்கள் தேசிய அளவில் பல்வேறு பதக்கங்கள் பெற்று வந்திருக்கின்றனர். என் போன்றவர்கள் மருத்துவர் ஆலோசனையின்பேரில் விளையாடுவதற்கு வந்திருக்கின்றோம் ஏற்கனவே எனக்கு விளையாட்டில் ஆர்வம் இருப்பதால் தினசரி அதிகாலையில் வந்து ஓட்ட பயிற்சி எடுத்து வருகிறேன் இங்கு விளையாட்டு பயிற்சி இருக்க கூடிய சாதனங்கள் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டுள்ளது இதனால் சில விளையாட்டு வீரர்களுக்கு விளையாட முடியாத நிலையில் உள்ளனர் மாவட்ட நிர்வாகம் இந்த மைதானத்தை பாதுகாக்க சுற்றுச்சுவர் எடுத்து விளையாட்டு ஆர்வம் உள்ளவர்களை ஊக்குவிப்பதற்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
LatestNews
கிராம மக்கள் முற்றுகை போராட்டம்..

ஆட்சியர் அலுவலக முன்பு முற்றுகை போராட்டம்:
மதுரை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட
கொம்பாரி கிராம ஊராட்சியில் உள்ள கீழக் கண்மாய் மற்றும் மேலக் கண்மாய்களுக்கு நிலையூர் – கம்பிகுடி கால்வாயிலிருந்து தொட்டியபட்டி பிரிவிலுள்ள நெடுமதுரை கடல் வழியாக மேற்சொன்ன கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க ஆவணம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தும் , தண்ணீர் திறந்து விடக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்த திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆசிக்கை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே அவரை மீண்டும் பணியிலமர்த்தக் கோரியும் கொம்பாரி
ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில்
கொம்பாரி ஊர் பொதுமக்கள் சுமார் 450 பேர் தங்களது குடும்ப அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக கூறி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுக்கை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.கி
LatestNews
திடீரென வீடு இடிந்து விழுந்தது…

மதுரை தெற்கு வாசல் மீனாட்சி டாக்கீஸ் அருகே வீடு ஒன்று திடீரென இடிந்தது.
தகவல் கிடைத்ததும், மதுரை தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.
LatestNews
ஜெயலலிதா கோயில் கும்பாபிஷேகம்..

ஜெ.கோயில் கும்பாபிசேகத்திற்கு கிராமம் கிராமாக அமைச்சர் உதயகுமார் அழைப்பு
திருமங்கலம் :
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில்ஜெ.பேரவை சார்பில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் அம்மா கோயில் என்ற பெயரில் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ.க்கு கோயில் கட்டப்படுகிறது. இதில் இருவருக்கும் 8 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், ஜன.30 ல் கும்பாபிசேகம் நடக்க உள்ளது.
இந்த கும்பாபிசேகத்திற்கு முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்காக திருமங்கலம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அமைச்சர் உதயகுமார் நேரில் சென்று கும்பாபிசேகத்தில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.