LatestNews
பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு..

திருமங்கலம் பிரதானக் கால்வாய்க்கு தண்ணீர் திறப்பு
வருவாய்த்துறை அமைச்சர் திறந்து வைத்தார்
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம், திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் ஓரு போகத்துக்கு தண்ணீரை, பேரணையில் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் திறந்து விட்டார்.
தமிழக முதல்வர் உத்தரவுப்படி, பெரியாறு பாசனப் பகுதியில், திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசனப் பகுதியான 19.436 ஏக்கருக்கு நிலங்களுக்கு விநாடிக்கு 230 கன அடி வீதம் செப். 27 முதல் 120 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் திறப்பால், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் 13723 ஏக்கர் நிலங்களும், திருமங்கலம் வட்டத்தில் 4369 ஏக்கர் நிலங்களும், வாடிப்பட்டி வட்டத்தில் 1201, ஏக்கர் நிலங்களும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் 146 ஏக்கர் நிலங்களும் பாசனம் பெறும்.
இந்த வேலையில், குறுகிய கால பயிர்களை பயிரிட்டு பயன்பெற பொதுப்பணித்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி,
சட்டப்பேரவை உறுப்பினர் நீதிபதி, நத்தம் அதிமுக பிரமுகர் கண்ணன் மதுரை மாவட்ட அதிமுக நிர்வாகி ஐயப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
LatestNews
கிராம மக்கள் முற்றுகை போராட்டம்..

ஆட்சியர் அலுவலக முன்பு முற்றுகை போராட்டம்:
மதுரை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட
கொம்பாரி கிராம ஊராட்சியில் உள்ள கீழக் கண்மாய் மற்றும் மேலக் கண்மாய்களுக்கு நிலையூர் – கம்பிகுடி கால்வாயிலிருந்து தொட்டியபட்டி பிரிவிலுள்ள நெடுமதுரை கடல் வழியாக மேற்சொன்ன கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க ஆவணம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தும் , தண்ணீர் திறந்து விடக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்த திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆசிக்கை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே அவரை மீண்டும் பணியிலமர்த்தக் கோரியும் கொம்பாரி
ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில்
கொம்பாரி ஊர் பொதுமக்கள் சுமார் 450 பேர் தங்களது குடும்ப அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக கூறி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுக்கை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.கி
LatestNews
திடீரென வீடு இடிந்து விழுந்தது…

மதுரை தெற்கு வாசல் மீனாட்சி டாக்கீஸ் அருகே வீடு ஒன்று திடீரென இடிந்தது.
தகவல் கிடைத்ததும், மதுரை தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.
LatestNews
ஜெயலலிதா கோயில் கும்பாபிஷேகம்..

ஜெ.கோயில் கும்பாபிசேகத்திற்கு கிராமம் கிராமாக அமைச்சர் உதயகுமார் அழைப்பு
திருமங்கலம் :
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில்ஜெ.பேரவை சார்பில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் அம்மா கோயில் என்ற பெயரில் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ.க்கு கோயில் கட்டப்படுகிறது. இதில் இருவருக்கும் 8 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், ஜன.30 ல் கும்பாபிசேகம் நடக்க உள்ளது.
இந்த கும்பாபிசேகத்திற்கு முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்காக திருமங்கலம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அமைச்சர் உதயகுமார் நேரில் சென்று கும்பாபிசேகத்தில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.