LatestNews
தேசீய ஊட்டச்சத்து மாத விழா..
குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நிகழ்ச்சி: அமைச்சர் தொடங்கி
வைதார்
மதுரை
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை ஓருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நிகழ்ச்சியை ,
வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர்
ஆர்.பி.உதயகுமார்
திருமங்கலம் பயணியர் விடுதி வளாகத்தில் துவக்கி வைத்து தெரிவிக்கையில்:-
தமிழ்நாடு முதலமைச்சர்
ஆணைக்கினங்க
துணைமுதலமைச்சர்
வழிகாட்டுதலோடும்,
சமூகநலத்துறை அமைச்சர் ,
மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் அவர்களும் நமக்கு வழங்கி இருக்கின்ற மேலான உத்தரவிற்கு இணங்க இன்று தேசிய ஊட்டச்சத்து மாத விழாவினை இந்த கொரோணா காலத்திலும் ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சிதிட்ட அலுவலர் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் இணைந்து எழுச்சியோடும் விழிப்புணர்வோடும் சிறப்பாக நடத்ததி வருகின்றனர்.
ஒரு சமுதாயத்திற்கு மிகவும் அத்தியாவசிய தேவை என்பது ஆரோக்கியமான சமுதாயத்தினை உருவாக்க வேண்டும் என்பதே ஆகும். அதனால்தான் இந்த ஊட்டச்சத்து மாத விழாவை போஷான் அபியான் 2020 என்று பெயரிடப்பட்டது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தாய் மற்றும் குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கிமான உடல் நிலையை அடைவதே இந்த திட்டம் ஆகும். தேசிய ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான கருத்துக்கள் நாட்டிலுள்ள ஒவ்வொரு விட்டிற்கும் சென்று சேர வேண்டும். ஆரோக்கியம் என்பது சரிவிகித சத்தான உணவு,
தூய்மையான குடிநீர்,
சுகாதாரம்,
சரியான தாய்மை
பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கான உணவு ஊட்டும் பழக்கவழக்கங்கள் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே எடுத்துச்சொல்லும் நோக்கத்தோடும்,
தேசிய ஊட்டச்சத்து இயக்கமானது நாடு முழுவதும் ஒரு மக்கள் இயக்கமாக மாற ஒவ்வொரு வீட்டிலும்
ஒவ்வொரு பள்ளியிலும்,
ஒவ்வொரு கிராமத்திலும்,
ஒவ்வொரு நகரத்திலும் ஊட்டச்சத்துள்ள உணவு மற்றும் நல்வாழ்வு சம்பந்தமான கருத்துக்களை அறிய உறுதி மொழி எடுக்கவேண்டும்.
இந்த மக்கள் பேரியக்கத்தின் மூலம் எனது தாய் தமிழ்நாட்டிலுள்ள எனது சகோதரிகள்ää சகோதரர்கள் மற்றும் குழந்தைகள் சிறந்த ஆரோக்கியமானவர்களாகவும்ää திறமையானவர்களாகவும் உருவெடுப்பர் என்கிற உறுதிமொழி ஏற்கவும் ஆரோக்கியமான மக்களால் தான் வலிமையான தேசத்தை உறுவாக்க முடியும் என்பதன் அடிப்படையிலேயே இந்த தேசிய ஊட்டச்சத்து மாத விழா துவங்கப்பட்டுள்ளது.
அம்மாவின் அரசு கோவிட்-19 கொரோனா வைரஸ் நோய் தொற்று காலத்தில் சிறப்பாக செயல்பட்டு நோய் தொற்றை தடுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும்,
நிவாரண பொருட்களை வழங்குவதிலும்,
நோயாளிகளுக்கு தனிமைப்படுத்தி மருத்துவம் செய்வதிலும் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது என்று
பாரத பிரதமர் பாராட்டியுள்ளார்கள். மக்களுக்கு விழிப்புணர்வு என்பது அவர்களுக்கு உண்மை நிலையை எடுத்துச்சொல்ல வேண்டும் தாமாக முன்வரும் நிலையினை நாம் ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக நாம் என்ன வகையான உணவுவகைகளை உண்ண வேண்டும் எந்த வகையான உணவுவகைகளை உண்ணக்கூடாது என்பதை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்கள் என்ன வகையான உணவுகளை உண்ண வேண்டும் என்பது தொடர்பாக தாய் சேய் நலப்பெட்டகம் அங்கங்கே இருக்கக்கூடிய ஆரம்பசுகாதார மையங்களில் தலைசிறந்த மருத்துவர்களின் ஆலோசனையோடு வழங்கப்பட்டு வருகின்றது. ஆரோக்கியமான மக்களால் தான் வலிமையான தேசத்தை உருவாக்க முடியும் என்ற நோக்கத்தோடு தான் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவினை நடத்திக்கொண்டிருக்கிறோம் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்சியில் துணை இயக்குனர் சுகாதாரம் மரு.அர்ஜீன்குமார்
மாவட்ட சமூகநலத்துறை அலுவலர்
.சாந்தி ,
திருமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் மரு.உமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
LatestNews
மதுரையில் கொரோனா தடுப்பூசி
உலகமே, நாடே எதிர்பார்த்த விசயம் தடுப்பு ஊசி இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது எனவும், பிரதமரின் நடவடிக்கை வெற்றி பெற்று உள்ளதாகவும் மதுரையில் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி பேட்டி:
மதுரை
மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனையில் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர், முதல்வர் மற்றும் துணை முதல்வர் தடுப்பு ஊசி வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தனர், இந்தியா முழுதும் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் பணியை பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார், மதுரையிலிருந்து கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்றனர், தமிழகம் முழுதும் 166 மையங்களில் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கப்படுகிறது, முதல் தடுப்பு ஊசி தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர் மருத்துவர் செந்திலுக்கு போடப்பட்டது, ஒரு நாளுக்கு ஒரு மையத்தில் 100 பேருக்கு தடுப்பு ஊசி போடப்படுகிறது, மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர்களுக்கு கோவிட் – 19 தடுப்பு ஊசி போடப்படுகிறது, முதல் கட்டமாக தமிழகம் முழுதும் 6 இலட்சம் முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி போடப்படுகிறது, இந்திய மருத்துவத்துறையின் வழிகாட்டுதல் படி கோவிட் – 19 தடுப்பு ஊசி போடப்படுகிறது, ஒரு தடுப்பு ஊசி பாட்டிலில் 5 மி.லி மருந்துகள் உள்ளன, ஒரு நபருக்கு 0.5 மி.லி தடுப்பு ஊசி மருந்துகள் செலுத்தப்படும், இந்திய மருத்துவத்துறையின் வழிகாட்டுதல் படி கோவிட் – 19 தடுப்பு ஊசி போடப்படுகிறது, ஒரு தடுப்பு ஊசி பாட்டிலில் 5 மி.லி மருந்துகள் உள்ளன, ஒரு நபருக்கு 0.5 மி.லி தடுப்பு ஊசி மருந்துகள் செலுத்தப்படும், கோவிட் – 19 தடுப்பு ஊசி போட்டு கொண்டவர்கள் மது அருந்த கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது, நிகழ்வின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி கூறுகையில் "பிரதமர் எடுத்த நடவடிக்கைகள் வெற்றி பெற்றுள்ளது, முதல் கட்டமாக முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி போடப்படும், ஒவ்வொருவருக்கும் இரண்டு கட்டமாக தடுப்பு ஊசி போடப்படும், தமிழகத்தில் 166 இடங்களில் தடுப்பு ஊசி போடப்படுகிறது, தமிழகம் முழுதும் 226 இடங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது, வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்று இருக்கிறது, பிரதமரின் விட முயற்சியால் தடுப்பு ஊசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது, முதல் கட்டமாக 5 இலட்சத்து 56 ஆயிரம் தடுப்பு ஊசிகள் தமிழகம் வந்துள்ளது, அனைவரும் தடுப்பு ஊசிகள் எடுக்க வேண்டும், உலகமே, நாடே எதிர்பார்த்த விசயம் தடுப்பு ஊசி, இன்று ஒரு நல்ல நாளாக அமைந்துள்ளது, முழு ஆராய்ச்சி செய்யப்பட்டு தடுப்பு ஊசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு ஊசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது, நம்மை காக்கும் மருத்துவர்கள் தான் முதலில் தடுப்பு ஊசி போட்டு கொண்டு உள்ளார், தடுப்பு ஊசி போட்டு கொள்வதில் மக்கள் அச்சப்பட வேண்டும், மக்கள் கொரைனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், தற்காலிக எம்.ஆர்.பி செவிலியர்கள் படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவார்கள், தமிழக அரசு தொடர்ந்து கொரைனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது" என கூறினார்
LatestNews
நந்திக்கு சிறப்பு அலங்காரம்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் நந்திகேஷ்வரனுக்கு நடைபெற்ற பூஜை. காய்கனிகளுடன் காட்சி தருகிறார்.
பாலாஜி…திருவண்ணாமலை
LatestNews
பராம்பரியமிக்க முனியாண்டி சுவாமி திருவி ழா: தமிழக முழுவதும் ஹோட்டல் உரிமையாளர்கள் ப ங்கேற்பு…

திருமங்கலம் அருகே முனியாண்டி சுவாமி திருக்கோயில் விழா:
மதுரை
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா எஸ்.
கோபாலபுரம் என்ற சின்ன செங்கப்படை கிராமத்தில் உலகமெங்கும் புகழ் பெற்ற அருள்மிகு ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோவில் 58 ஆம் ஆண்டு பூஜை விழா மற்றும் பால்குடம் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது .
இந்த பூஜாவிற்கு, ஆண்டுதோறும் தமிழகமெங்கும் உள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சேர்ந்து இரண்டு நாள் கடை அடைத்துவிட்டு சொந்த ஊர் கிராமத்தில் தனதுஉலகமெங்கும் புகழ் பெற்ற ஸ்ரீ முனியாண்டி சுவாமி அருள் ஆசி பெற்று மக்களுக்கு 100 -க்கும் மேற்பட்ட கிடாக்களை வெட்டி அன்னதானம் செய்வார்கள்.
-
LatestNews1 month ago
கோவை வள்ளல் சாந்தி கியர்ஸ் உரிமையாளர் இற ைவனடி சேர்ந்தார்.
-
LatestNews3 months ago
வீட்டுக்குள் புகுந்து உடும்பு பிடிபட்டத ு..
-
LatestNews3 months ago
மதுரை அருகே நந்தனார், வள்ளுவர் சிலை கண்ட ுபிடிப்பு…
-
LatestNews3 months ago
தேவர் சிலை அலங்கரிப்பு..
-
LatestNews4 months ago
பாலியல் பகுதியாக மாறி வரும் வாடிப்பட்டி?