LatestNews
பழுதான சாலைகள் சீரமைப்பு..அமைச்சர்
ராஜபாளையத்தில் பாதாள சாக்கடை திட்டத்தால் பழுதடைந்த சாலைகள் நாள்தோறும் விபத்துக்குள் சிக்கும் பொதுமக்கள் விரைவில் சரி செய்யப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளில் பாதாளச் சாக்கடை திட்டத்திற்கும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக சாலைகள் மற்றும் தெருக்களில் குழாய் பதிக்கும் பணி கடந்த ஒரு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது தற்போது பணிகள் ஒரு சில இடங்களில் நிறைவுற்று நிலையில் தோண்டப்பட்ட சாலைகளை சரியாக மூடாமல் தற்போது பெய்த மழையின் காரணமாக சாலைகள் வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்ட முடியாது
ரோட்டில் மண் புழுதி தூசிகள் பறக்கின்றன தற்போது கடந்த இரண்டு தினங்களாக பெய்த மழையின் காரணமாக சாலைகளில் சாகதிகளும் நிரம்பி உள்ளதால் விபத்துக்கள் அதிக அளவில் ஆகின்றது இதுகுறித்து இராஜபாளையம் பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை இந்த சூழ்நிலையில் இன்று இராஜபாளையம் நகருக்கு வருகை புரிந்த பால்வளத் துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி செய்தியாளர் சந்திப்பின்போது இந்தப் பகுதியில் ரயில்வே மேம்பாலம் பாதாளசாக்கடை திட்டம் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவை விரைவாக நடைபெற்று வருகிறது இருந்தாலும் சரிவர சாலைகள் சரிசெய்யாமல் பள்ளம் இருப்பதாக மக்கள் கோரிக்கை வைத்தனர் அதை நானும் நேரில் பார்த்தேன் விரைவில் இந்த பணிகள் முடிவடைந்து சாலைகளை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் இன்னும் ஒரு மாத காலத்தில் அனைத்து சாலைகளும் போடப்படும் என கூறினார்.
LatestNews
கிராம மக்கள் முற்றுகை போராட்டம்..

ஆட்சியர் அலுவலக முன்பு முற்றுகை போராட்டம்:
மதுரை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட
கொம்பாரி கிராம ஊராட்சியில் உள்ள கீழக் கண்மாய் மற்றும் மேலக் கண்மாய்களுக்கு நிலையூர் – கம்பிகுடி கால்வாயிலிருந்து தொட்டியபட்டி பிரிவிலுள்ள நெடுமதுரை கடல் வழியாக மேற்சொன்ன கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க ஆவணம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தும் , தண்ணீர் திறந்து விடக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்த திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆசிக்கை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே அவரை மீண்டும் பணியிலமர்த்தக் கோரியும் கொம்பாரி
ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில்
கொம்பாரி ஊர் பொதுமக்கள் சுமார் 450 பேர் தங்களது குடும்ப அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக கூறி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுக்கை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.கி
LatestNews
திடீரென வீடு இடிந்து விழுந்தது…

மதுரை தெற்கு வாசல் மீனாட்சி டாக்கீஸ் அருகே வீடு ஒன்று திடீரென இடிந்தது.
தகவல் கிடைத்ததும், மதுரை தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.
LatestNews
ஜெயலலிதா கோயில் கும்பாபிஷேகம்..

ஜெ.கோயில் கும்பாபிசேகத்திற்கு கிராமம் கிராமாக அமைச்சர் உதயகுமார் அழைப்பு
திருமங்கலம் :
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில்ஜெ.பேரவை சார்பில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் அம்மா கோயில் என்ற பெயரில் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ.க்கு கோயில் கட்டப்படுகிறது. இதில் இருவருக்கும் 8 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், ஜன.30 ல் கும்பாபிசேகம் நடக்க உள்ளது.
இந்த கும்பாபிசேகத்திற்கு முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்காக திருமங்கலம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அமைச்சர் உதயகுமார் நேரில் சென்று கும்பாபிசேகத்தில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.