LatestNews
அரசு மருத்துவமனையில் 4 பேர் உயிரிழந்த சம் பவம் அரசியல் நோக்கோடு திமுக தலைவர் பேசுகிறா ர்…அமைச்சர்

திருப்பூர் அரசு மருந்துவமனையில் 4 பேர் உயிரிழந்ததை எதிர்கட்சி தலைவர் அரசியல் நோக்கத்துடன் பேசுவாதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 15 லட்சம் மதிப்பிலான ஹைடெக் 108 ஆம்புலன்ஸ் சேவையை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி துவக்கி வைத்தார்.
அதன்பின் செய்தியாளர் சந்திப்பில், இராஜபாளையம் மிக பெரிய தொழில் நகரம். இந்த பகுதியில் இரண்டு மருத்துவமனைகள் உள்ளது. இந்த மருத்துவமனை நிர்வாகம் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இதை மக்கள் நலனுக்காக மக்கள் கோரிக்கை ஏற்று தனித் தனியாக செயல்பட முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்றப்படும்,
இராஜபாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சலின் போது அதிகமான அளவில் பாதிக்கப்பட்டது. அதேபோல் தற்போது கொரோனா காலத்திலும் அதிக பாதிப்பு இருந்த நிலையில் அரசின் நடவடிக்கையால் தற்போது தொற்று அதிக அளவில் குறைந்து, இந்த பகுதியில் 25 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு செல்வார்கள். அந்த அளவிற்கு அம்மாவின் அரசு முதலமைச்சர் எடப்பாடி அவர்களால் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் இந்த மருத்துவமனைக்கு தேவையான அனைத்து மருத்துவர்களும், மருத்துவ உபகரணங்களும் உள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர் அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டு கர்ப்பிணி பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த பின்பு அவர்களுக்கு தேவையான அளவிற்கு ஒவ்வொருவருடைய படுக்கை அருகே ஆக்சிசன் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார்.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்யின்றி உயிரிழந்தவர்கள் 4 பேர் குறித்து ஸ்டாலின் கருத்து கூறுவது எதிர்க்கட்சி என்ற முறையில் கருத்துக் கூறி வருகிறார். தமிழகம் முழுவதும் தேவையான அளவிற்க்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பொருள்கள் தேவையான அளவிற்க்கு சகல வசதிகளும் அம்மாவின் அரசு சிறப்பாக செய்துள்ளது.
ஸ்டாலின் அரசியல் நோக்கத்துடன் இந்த குற்றச்சாட்டை வைப்பதாக அமைச்சர் குற்றம் சாட்டினார்.
LatestNews
விழா நடத்த கோரிக்கை

விழா நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மனு:
மதுரையில் ஆலய திருவிழாவை நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மாவட்டத் தலைவர் அழகர்சாமி தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மனு அளித்தனர்.
LatestNews
கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் டீக் க டைக்காரர்…

திருப்பரங்குன்றம் அருகே கொரான இரண்டாவது அலைக்காக சோளங்குருணி கிராமத்தில் போராடும் தனி ஒருவர்:
மதுரை
முக கவசம், கப சுரக்குடி நீர் வழங்கி வரும் தன்னார்வலர்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சோளங்குருணி கிராமத்தில் வசிப்பவர் ரவிச்சந்திரன் (வயது 54) இவர் டீக்கடை தொழில் நடத்தி வருகிறார்.
தற்போது வேகமாக பரவிவரும் கொரானா தொற்று இரண்டாவது பரவலை தடுக்கும். விதமாக தன்னார்வலராக ரவிச்சந்திரன் கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
சோளங்குருணி கிராமத்தில் மட்டுமல்லாமல் சுற்றுப்புறங்களில் செல்லும் பேருந்துகளில் ஏறி பொதுமக்கள் அனைவருக்கும் முகக்கவசம் மற்றும் கப சுர குடிநீர் வழங்கி தன்னார்வலராக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
ரவிசந்திரன் ஏற்கனவே கடந்த வருடம் கொரான தொடருக்கு தனது மாருதி ஆம்னி வேனில் ஸ்பீக்கர் மைக்செட் மூலம் விழிப்புணர்வு செய்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக திருமங்கலம் காவல் உதவி கண்காணிப்பாளர் (டிஎஸ்பி ) வினோதினியிடம் பாராட்டு சான்றிதழ் , மற்றும் கேடயம் பரிசு பெற்றவர் என்பது பாராட்டுக்குரிய விஷயம்.
LatestNews
12 April, 2021 14:05

*மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்க கோரி பொதுமக்கள் போராட்டம்.!
மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறும்,கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக விழாவானது பக்தர்கள் அனுமதியின்றி ஆகமவிதிப்படி நடத்தப்பட்டது, இதனையடுத்து கொரோனா பரவல் குறைந்தநிலையில் கோவில்களில் வழிபட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா பரவல் அதிகரித்துவருவதால் இந்த ஆண்டு நடைபெறும் மதுரை சித்திரை திருவிழாவினை பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சித்திரை திருவிழா எப்போதும் போல பக்தர்கள் அனுமதியோடு நடத்தகோரியும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுரை தமுக்கம் மைதானம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்,இதில் பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிவருகின்றனர், போராட்டத்தால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர், கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு காரணத்தால் காவல்துறையினர் அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்ய இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் குண்டுகட்டாக கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.