LatestNews
அரசு மருத்துவமனையில் 4 பேர் உயிரிழந்த சம் பவம் அரசியல் நோக்கோடு திமுக தலைவர் பேசுகிறா ர்…அமைச்சர்

திருப்பூர் அரசு மருந்துவமனையில் 4 பேர் உயிரிழந்ததை எதிர்கட்சி தலைவர் அரசியல் நோக்கத்துடன் பேசுவாதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 15 லட்சம் மதிப்பிலான ஹைடெக் 108 ஆம்புலன்ஸ் சேவையை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி துவக்கி வைத்தார்.
அதன்பின் செய்தியாளர் சந்திப்பில், இராஜபாளையம் மிக பெரிய தொழில் நகரம். இந்த பகுதியில் இரண்டு மருத்துவமனைகள் உள்ளது. இந்த மருத்துவமனை நிர்வாகம் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இதை மக்கள் நலனுக்காக மக்கள் கோரிக்கை ஏற்று தனித் தனியாக செயல்பட முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்றப்படும்,
இராஜபாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சலின் போது அதிகமான அளவில் பாதிக்கப்பட்டது. அதேபோல் தற்போது கொரோனா காலத்திலும் அதிக பாதிப்பு இருந்த நிலையில் அரசின் நடவடிக்கையால் தற்போது தொற்று அதிக அளவில் குறைந்து, இந்த பகுதியில் 25 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு செல்வார்கள். அந்த அளவிற்கு அம்மாவின் அரசு முதலமைச்சர் எடப்பாடி அவர்களால் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் இந்த மருத்துவமனைக்கு தேவையான அனைத்து மருத்துவர்களும், மருத்துவ உபகரணங்களும் உள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர் அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டு கர்ப்பிணி பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த பின்பு அவர்களுக்கு தேவையான அளவிற்கு ஒவ்வொருவருடைய படுக்கை அருகே ஆக்சிசன் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார்.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்யின்றி உயிரிழந்தவர்கள் 4 பேர் குறித்து ஸ்டாலின் கருத்து கூறுவது எதிர்க்கட்சி என்ற முறையில் கருத்துக் கூறி வருகிறார். தமிழகம் முழுவதும் தேவையான அளவிற்க்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பொருள்கள் தேவையான அளவிற்க்கு சகல வசதிகளும் அம்மாவின் அரசு சிறப்பாக செய்துள்ளது.
ஸ்டாலின் அரசியல் நோக்கத்துடன் இந்த குற்றச்சாட்டை வைப்பதாக அமைச்சர் குற்றம் சாட்டினார்.
LatestNews
கிராம மக்கள் முற்றுகை போராட்டம்..

ஆட்சியர் அலுவலக முன்பு முற்றுகை போராட்டம்:
மதுரை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட
கொம்பாரி கிராம ஊராட்சியில் உள்ள கீழக் கண்மாய் மற்றும் மேலக் கண்மாய்களுக்கு நிலையூர் – கம்பிகுடி கால்வாயிலிருந்து தொட்டியபட்டி பிரிவிலுள்ள நெடுமதுரை கடல் வழியாக மேற்சொன்ன கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க ஆவணம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தும் , தண்ணீர் திறந்து விடக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்த திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆசிக்கை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே அவரை மீண்டும் பணியிலமர்த்தக் கோரியும் கொம்பாரி
ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில்
கொம்பாரி ஊர் பொதுமக்கள் சுமார் 450 பேர் தங்களது குடும்ப அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக கூறி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுக்கை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.கி
LatestNews
திடீரென வீடு இடிந்து விழுந்தது…

மதுரை தெற்கு வாசல் மீனாட்சி டாக்கீஸ் அருகே வீடு ஒன்று திடீரென இடிந்தது.
தகவல் கிடைத்ததும், மதுரை தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.
LatestNews
ஜெயலலிதா கோயில் கும்பாபிஷேகம்..

ஜெ.கோயில் கும்பாபிசேகத்திற்கு கிராமம் கிராமாக அமைச்சர் உதயகுமார் அழைப்பு
திருமங்கலம் :
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில்ஜெ.பேரவை சார்பில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் அம்மா கோயில் என்ற பெயரில் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ.க்கு கோயில் கட்டப்படுகிறது. இதில் இருவருக்கும் 8 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், ஜன.30 ல் கும்பாபிசேகம் நடக்க உள்ளது.
இந்த கும்பாபிசேகத்திற்கு முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்காக திருமங்கலம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அமைச்சர் உதயகுமார் நேரில் சென்று கும்பாபிசேகத்தில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.