LatestNews
பாலியல் பகுதியாக மாறி வரும் வாடிப்பட்டி?

மதுரை மாவட்டத்தில் பாலியல் மையப்பகுதியாக மாறிவரும் வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் விடுதிகளில் வேலை வாய்ப்பு கொடுப்பதாக இளம்பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகின்றனர் என வழக்கறிஞர் விஜயகுமார் தெரிவித்தார். வாடிப்பட்டி பேரூராட்சி தாலுகா அலுவலகம் நீதிமன்றம் யூனியன் அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் கோவில் தேவாலயம் உள்பட வாரச்சந்தை இயங்கி வருகிறது இங்கு சுற்று வட்டாரத்திலிருந்து கிராம பொதுமக்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இங்கு தேவைக்கு அதிகமாக விடுதிகள் உள்ளதாகவும் இதில் விபச்சாரம் நடந்ததாக வழக்குகள் உள்ளதாகவும் தெரிகிறது. இதுகுறித்து வழக்கறிஞர் வக்கீல் விஜயகுமார் கூறியதாவது, மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி பேரூராட்சி பாலியல் மையமாக மாறி வருவதாக தெரிகிறது இங்கு பேரூராட்சி உட்பட்ட பகுதியில் சுமார் 13 விடுதிகள் உள்ளது இங்கு கடந்த ஐந்து ஆண்டுக்கு முன்பாக விபச்சார வழக்கு பதிவு செய்யப்பட்டு அதில் சம்பந்தப்பட்டவர்கள் விடுதலை ஆனார்கள் அளவுக்கு அதிகமாக விடுதிகள் பேரூராட்சி விதிகளுக்கு உட்படாமல் உள்ளது இங்குள்ள விடுதிகள் அனைத்தும் பேரூராட்சி அனுமதி பெற்று உள்ளதா?என்று சந்தேகம் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது சமீபத்தில் குழந்தைகள் வன்முறைகளுக்கு எதிரான இயக்க காவல் ஆய்வாளர் சாந்தி அவர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது இதன் பேரில் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பதிமூன்று விடுதிகளிலும் சோதனை நடந்தது இதில் மூன்று ப்ரோக்கர் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 6 பெண்கள் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதில் அரசியல் தலையீடு உள்ளதாக பொதுமக்கள் சந்தேகப்படுகிறார்கள்.ஏனென்றால் வாடிப்பட்டி நகரம் சுற்றுலாதளம் மற்றும் பெரிய வணிக நகரம் கிடையாது.இங்கு வரக்கூடியவர்கள் அன்றாட தேவைக்கு இப்பகுதி கிராம மக்கள் வந்து செல்லக் கூடியவர்கள் தான்.ஆனால் இங்கு 13 விடுதிகள் உள்ளது இங்குள்ள விடுதியில் வெளிமாநிலத்தில் இருந்தும் வெளி மாவட்டத்தில் இருந்தும் வேலைவாய்ப்பு அளிப்பதாக இளம்பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக இப்பகுதி மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருவதாகவும். இதனை உறுதி செய்யும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இங்குள்ள விடுதிகளில் சோதனை நடந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கூறி 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் ஆனால் முழுமையாக நடவடிக்கையில் எடுக்கப்பட்டிருந்தால் இன்னும் பல பேர் கைதுசெய்யப்பட்டு இருப்பார்கள் இதில் பல அரசியல் பிரமுகர்களின் மறைமுக தலையீடு இருப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் வருங்காலத்தில் மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி பாலியல் மையமாக மாறுவதை தடுக்க முடியும் என்று மனம் வேதனையுடன் கூறுவதாக தெரிவித்தார். உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் மதுரை மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் விடுதிகளை கணக்கிட்டு முறைப்படுத்தி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்
LatestNews
விழா நடத்த கோரிக்கை

விழா நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மனு:
மதுரையில் ஆலய திருவிழாவை நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மாவட்டத் தலைவர் அழகர்சாமி தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மனு அளித்தனர்.
LatestNews
கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் டீக் க டைக்காரர்…

திருப்பரங்குன்றம் அருகே கொரான இரண்டாவது அலைக்காக சோளங்குருணி கிராமத்தில் போராடும் தனி ஒருவர்:
மதுரை
முக கவசம், கப சுரக்குடி நீர் வழங்கி வரும் தன்னார்வலர்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சோளங்குருணி கிராமத்தில் வசிப்பவர் ரவிச்சந்திரன் (வயது 54) இவர் டீக்கடை தொழில் நடத்தி வருகிறார்.
தற்போது வேகமாக பரவிவரும் கொரானா தொற்று இரண்டாவது பரவலை தடுக்கும். விதமாக தன்னார்வலராக ரவிச்சந்திரன் கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
சோளங்குருணி கிராமத்தில் மட்டுமல்லாமல் சுற்றுப்புறங்களில் செல்லும் பேருந்துகளில் ஏறி பொதுமக்கள் அனைவருக்கும் முகக்கவசம் மற்றும் கப சுர குடிநீர் வழங்கி தன்னார்வலராக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
ரவிசந்திரன் ஏற்கனவே கடந்த வருடம் கொரான தொடருக்கு தனது மாருதி ஆம்னி வேனில் ஸ்பீக்கர் மைக்செட் மூலம் விழிப்புணர்வு செய்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக திருமங்கலம் காவல் உதவி கண்காணிப்பாளர் (டிஎஸ்பி ) வினோதினியிடம் பாராட்டு சான்றிதழ் , மற்றும் கேடயம் பரிசு பெற்றவர் என்பது பாராட்டுக்குரிய விஷயம்.
LatestNews
12 April, 2021 14:05

*மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்க கோரி பொதுமக்கள் போராட்டம்.!
மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறும்,கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக விழாவானது பக்தர்கள் அனுமதியின்றி ஆகமவிதிப்படி நடத்தப்பட்டது, இதனையடுத்து கொரோனா பரவல் குறைந்தநிலையில் கோவில்களில் வழிபட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா பரவல் அதிகரித்துவருவதால் இந்த ஆண்டு நடைபெறும் மதுரை சித்திரை திருவிழாவினை பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சித்திரை திருவிழா எப்போதும் போல பக்தர்கள் அனுமதியோடு நடத்தகோரியும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுரை தமுக்கம் மைதானம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்,இதில் பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிவருகின்றனர், போராட்டத்தால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர், கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு காரணத்தால் காவல்துறையினர் அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்ய இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் குண்டுகட்டாக கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.