LatestNews
மருத்துவ குழுக்கள்: ஆட்சியர் தகவல்..
தொற்றுநோய்கள் ஏற்படாமல் வடகிழக்கு பருவமழை காலங்களில் தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுத்திட தடுத்திட
மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது: மாவட்ட ஆட்சியர்:
புதுக்கோட்டை
வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர்
கே.பணீந்திரரெட்டி
சென்னையிலிருந்து
காணொலிக்காட்சி வாயிலாக புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு
பருவமழையின் போது மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து
மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் திர
.பி.உமாமகேஸ்வரி
உடன்
ஆய்வு மேற்கொண்டார். பின்னர்,
மாவட்ட
ஆட்சித்தலைவர்
தெரிவித்ததாவது:
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள
சூ
ழ்நிலையில் கடந்த கால
நிகழ்வுகளை கருத்தில் கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ள
வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து இன்றையதினம் ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக வருவாய்த்துறையினர் தங்களது பகுதியில் பாதிப்புகள்
ஏற்பட்டால் உடனுக்குடன் பேரிடர் மேலாண்மை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு
தகவல் தெரிவிக்கவும். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தங்களது
பகுதிகளில் உள்ள குளங்கள்ää ஊரணிகளில் ஏதேனும் உடைப்பு ஏற்படும்
நிலையில் இருந்தால் அதனை உடனுக்குடன் சரி செய்வதுடன்,
பொதுப்பணித்துறை தேவையான மணல் மூட்டைகளை தயார் நிலையில்
வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழை காலங்களில் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவாமல் தடுக்கும்
வகையில் குடிநீரை குளோரினேசன் செய்து பாதுகாப்பாக வழங்கவும்ää
தேவையான இடங்களில் பிளிச்சிங் பவுடர் தெளித்து தூய்மைப் பணிகளை
மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரசு
மருத்துவமனைகளிலும் தேவையான மருந்து மாத்திரைகள் கையிருப்பில்
வைக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.
LatestNews
கிராம மக்கள் முற்றுகை போராட்டம்..

ஆட்சியர் அலுவலக முன்பு முற்றுகை போராட்டம்:
மதுரை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட
கொம்பாரி கிராம ஊராட்சியில் உள்ள கீழக் கண்மாய் மற்றும் மேலக் கண்மாய்களுக்கு நிலையூர் – கம்பிகுடி கால்வாயிலிருந்து தொட்டியபட்டி பிரிவிலுள்ள நெடுமதுரை கடல் வழியாக மேற்சொன்ன கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க ஆவணம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தும் , தண்ணீர் திறந்து விடக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்த திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆசிக்கை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே அவரை மீண்டும் பணியிலமர்த்தக் கோரியும் கொம்பாரி
ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில்
கொம்பாரி ஊர் பொதுமக்கள் சுமார் 450 பேர் தங்களது குடும்ப அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக கூறி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுக்கை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.கி
LatestNews
திடீரென வீடு இடிந்து விழுந்தது…

மதுரை தெற்கு வாசல் மீனாட்சி டாக்கீஸ் அருகே வீடு ஒன்று திடீரென இடிந்தது.
தகவல் கிடைத்ததும், மதுரை தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.
LatestNews
ஜெயலலிதா கோயில் கும்பாபிஷேகம்..

ஜெ.கோயில் கும்பாபிசேகத்திற்கு கிராமம் கிராமாக அமைச்சர் உதயகுமார் அழைப்பு
திருமங்கலம் :
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில்ஜெ.பேரவை சார்பில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் அம்மா கோயில் என்ற பெயரில் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ.க்கு கோயில் கட்டப்படுகிறது. இதில் இருவருக்கும் 8 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், ஜன.30 ல் கும்பாபிசேகம் நடக்க உள்ளது.
இந்த கும்பாபிசேகத்திற்கு முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்காக திருமங்கலம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அமைச்சர் உதயகுமார் நேரில் சென்று கும்பாபிசேகத்தில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.