LatestNews
திமுக என்றைக்கும் ஆட்சிக்கு வரமுடியாது.. .அமைச்சர்

மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
8 மாதங்களில் திமுக ஆட்சியமைக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு
8 மாதங்கள் அல்ல எத்தனை ஆண்டுளானாலும் ஆட்சிக்கு வர முடியாது
8 மாதங்களில் தேர்தல் வரும் மக்கள் வாக்களிப்பார்கள் ஆனால் தீர்ப்பு அதிமுகவிற்கு மக்கள் வழங்குவார்கள்
திமுக தற்போது எதார்த்தமான நிலையில் இல்லை
உரிமை என்று சொல்லி திமுக ஆதிகாலத்தில் உள்ளதை போன்று செயல்பட்டு வருகிறது
வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் தங்களை தயார்படுத்துவதில் திமுக மிகவும் பின்தங்கியுள்ளது
திமுக காலத்தால் பின்தங்கி மங்கிப்போய் இருக்கிறது
மக்களின் கவனத்தை ஈர்க்க முடியாமல் திமுக தத்தளித்துக்கொண்டுள்ளது
காலத்திற்கு ஏற்ப மக்களின் தேவையை அறிந்து கொள்கையை முன்வைத்து மக்களை பாதுகாப்பதிலும் உரிமையை மீட்பதிலும் அதிமுக அரசு முனைப்பு காட்டி வருகிறது
எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களது தொண்டர்களை சோர்வடையாமல் இருப்பதற்காக முதல்வராகி விடுவோம் என கூறுவது எதார்த்தம்
தேர்தல் திருவிழா வரும்போது பல்வேறு கட்சிகள் வரும் காட்சிகள் வரும் ஆட்சி மாற்றம் தருவதாகவும், முன்னேற்றத்தை தருவதாக கூறுவார்கள், அதிமுக அரசு மீது பழி சுமத்துவார்கள் எந்த கட்சியும் ஆளும் கட்சியை பாராட்ட மாட்டார்கள் ஆனால் மக்கள் மட்டும் பாராட்டுவார்கள்
திமுக எந்த மக்கள் பணியிலும் ஈடுபடவில்லை என்ற எங்களது குற்றச்சாட்டை திமுக தலைவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக விமர்சனம்
கடந்த 5 மாதமாக எந்த பணியும் செய்யவில்லை என முக. ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்
அரியர்ஸ் தேர்ச்சி அறிவிப்பு குறித்து யூசிஜி மற்றும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்
LatestNews
விழா நடத்த கோரிக்கை

விழா நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மனு:
மதுரையில் ஆலய திருவிழாவை நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மாவட்டத் தலைவர் அழகர்சாமி தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மனு அளித்தனர்.
LatestNews
கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் டீக் க டைக்காரர்…

திருப்பரங்குன்றம் அருகே கொரான இரண்டாவது அலைக்காக சோளங்குருணி கிராமத்தில் போராடும் தனி ஒருவர்:
மதுரை
முக கவசம், கப சுரக்குடி நீர் வழங்கி வரும் தன்னார்வலர்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சோளங்குருணி கிராமத்தில் வசிப்பவர் ரவிச்சந்திரன் (வயது 54) இவர் டீக்கடை தொழில் நடத்தி வருகிறார்.
தற்போது வேகமாக பரவிவரும் கொரானா தொற்று இரண்டாவது பரவலை தடுக்கும். விதமாக தன்னார்வலராக ரவிச்சந்திரன் கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
சோளங்குருணி கிராமத்தில் மட்டுமல்லாமல் சுற்றுப்புறங்களில் செல்லும் பேருந்துகளில் ஏறி பொதுமக்கள் அனைவருக்கும் முகக்கவசம் மற்றும் கப சுர குடிநீர் வழங்கி தன்னார்வலராக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
ரவிசந்திரன் ஏற்கனவே கடந்த வருடம் கொரான தொடருக்கு தனது மாருதி ஆம்னி வேனில் ஸ்பீக்கர் மைக்செட் மூலம் விழிப்புணர்வு செய்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக திருமங்கலம் காவல் உதவி கண்காணிப்பாளர் (டிஎஸ்பி ) வினோதினியிடம் பாராட்டு சான்றிதழ் , மற்றும் கேடயம் பரிசு பெற்றவர் என்பது பாராட்டுக்குரிய விஷயம்.
LatestNews
12 April, 2021 14:05

*மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்க கோரி பொதுமக்கள் போராட்டம்.!
மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறும்,கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக விழாவானது பக்தர்கள் அனுமதியின்றி ஆகமவிதிப்படி நடத்தப்பட்டது, இதனையடுத்து கொரோனா பரவல் குறைந்தநிலையில் கோவில்களில் வழிபட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா பரவல் அதிகரித்துவருவதால் இந்த ஆண்டு நடைபெறும் மதுரை சித்திரை திருவிழாவினை பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சித்திரை திருவிழா எப்போதும் போல பக்தர்கள் அனுமதியோடு நடத்தகோரியும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுரை தமுக்கம் மைதானம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்,இதில் பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிவருகின்றனர், போராட்டத்தால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர், கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு காரணத்தால் காவல்துறையினர் அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்ய இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் குண்டுகட்டாக கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.