LatestNews
அதிமுக மீது அவதூறு பரப்புவதே திமுகவின் ந ோக்கம்..அமைச்சர்
மதுரை
உயர் தொழில்நுட்ப மின்னணுவியல் வளர்ச்சியை மையமாக கொண்ட 11 வது மாநாடு அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக தொழில்நுட்பதுறை சார்பில் காணொளி காட்சி மூலம் கலந்துகொண்ட அமைச்சர் ஆர்பி.உதயகுமார் 2024ஆம் ஆண்டிற்குள் மின்னணு பொருட்கள் உற்பத்தி துறையின் மனிதவள தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க உள்ளது குறித்தும் பயிற்சி பெற்ற பெண் ஊழியர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் பயிற்சி மானியம் வழங்கப்படும் எனவும் மின்னணு துறையில் மதிப்புக்கூட்டு அளவினை அதிகரிப்பதற்கான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வது குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்பி உதயகுமார்
கிசான் முறைக்கேடு தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேளாண், வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் உரிய விசாரணை நடத்தி முறைக்கேடாக பெறப்பட்ட பணம் முழுமையாக மீட்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
அரசு ஒன்று இருந்தால் எதிர்க்கட்சி இருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு ஆட்சிக்கு வர வேண்டும் அடிப்படை நோக்கம் இருப்பது இயல்பு
அதிமுக மீது சேற்றை வாரி இறைப்பது, அவதூறு பரப்புவதை திமுக மரபாக கொண்டுள்ளனர், எனவே திமுகவிடமிருந்து புதிய அணுகுமுறையை எதிர்பார்க்க முடியாது
அதிமுக மீது அவதூறு பரப்பும் காலகாலமாக பின்பற்றி வரும் அணுகுமுறையை தற்போதும் முக. ஸ்டாலின் பின்பற்றி வருகிறார், ஆனால் மக்கள் மத்தியில் பழகிப்போன மரபாகவே உள்ளது
திமுகவின் பொதுக்குழு வசைபாடும் பொதுக்குழுவாக மட்டுமே இருக்கும் வாழ்த்தும் பொதுக்குழுவாக இருக்காது
அதிமுகவில் இன்றும் பட்டியலின்னத்தை சேர்ந்தவர்களே சபாநாயகராக உள்ளனர்
அதிமுகவை பொறுத்தவரை சமத்துவம் இருக்கும்
திமுக ஆட்சியில் சத்யவாணி முத்து காலம் முதல் பட்டியலின மக்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வருகிறது
LatestNews
கண்மாயில் நீர் நிரப்பக் கோரி போராட்டம்…

உசிலம்பட்டி அருகே குடிநீர் ஆதாரமாக உள்ள நான்கு கண்மாய்களில் நீர் நிரப்ப வலியுறுத்தி, கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்:
மதுரை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கோவிலாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட 18 கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கோவிலாங்குளம் பெரிய கண்மாய், ஆண்டிகுளம் கண்மாய் மற்றும் கடுக்காஞ்சி, பெத்தாங்குளம் என்ற நான்கு கண்மாய்களுக்கு திருமங்கலம் பிரதான கால்வாயின் இணைப்பு கால்வாய் மூலம் நீர் நிரப்ப அரசானை பிரபிக்கப்பட்டுள்ள சூழலில் கோவிலாங்குளம் கிராமத்திலிருந்து ஜோதிமாணிக்கம் கிராம அருகே செல்லும் கால்வாய் வரை சுமார் 100 மீட்டர் தூரம் உள்ள ஆக்கிரமிப்பால் கடந்த 40 ஆண்டுகளாக கண்மாய்களுக்கு நீர் வரத்து இல்லாத நிலையே நீடிப்பதாக கூறப்படுகிறது.நீரின்றி வறண்டு காணப்படும் நான்கு கண்மாய்கள் மூலம் சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில் இருந்தாலும், இந்த கண்மாய்களை சார்ந்துள்ள 18 கிராம மக்களின் குடிநீர் தேவைக்காவது கண்மாய்களை நிரப்ப பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் ஆக்கிரமிப்பை அகற்றும் பணிக்காக வந்த அதிகாரிகள் தேர்தலை காரணம் காட்டி பணிகளை பாதியிலேயே நிறுத்தி விட்டு சென்றதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த வாரம் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்;டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்பும அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும எடுக்காததால் கோவிலாங்குளம் கிராம மக்கள் கிராமத்தில தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் எந்த அரசியல் கட்சியினரும் தங்களது கிராமத்திற்கு ஓட்டு கேட்டு வரக்கூடாது என எச்சரிக்கை விடுக்கும் கிராம மக்கள் விரைவில் நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனில் ஆதார், ரேசன் கார்டுகளை திரும்ப ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
LatestNews
வாக்குப் பதிவு இயந்திரம் செயல்முறை விளக ்கம்..

வாடிப்பட்டியில்
மின்னனுவாக்குபதிவு
செய்முறைவிளக்கம்.
வாடிப்பட்டி,மார்ச்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா தேர்தல்பிரிவு சார்பாக வரும்
சட்டமன்றதேர்தலில் மின்னனுவாக்குபதிவுசெய்யும் முறை பற்றி செய்முறை
விளக்க விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. இந்த பிரச்சாரத்தை
தேர்தல்அதிகாரி ஜெஸ்டின் ஜெயபால்,உதவிதேர்தல்அதிகாரி தாசில்தார்
பழனிக்குமார் ஆகியோரின் ஆலோசனையின்பேரில் மண்டலதுணைதாசில்தார்
திருநாவுகரசு தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். வருவாய்ஆய்வாளர்
சஞ்ஜிவீநாதன் முன்னிலை வகித்தார். கிராமநிர்வாகஅலுவலர் கார்த்திக்
வரவேற்றார். கிராமஉதவியாளர்கள் வளர்மதி, ஜெயகுமார், அழகர், சண்முகவேல்,
புஷ்பம் ஆகியோர் கலந்துகொண்டு புதியவாக்காளர்களுக்கு மின்னனுஇயந்திரம்
மூலம் வாக்குபதிவு செய்யும்முறைபற்றி விளக்கிகூறி பயிற்சியளித்து
விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.வாங
LatestNews
கொரோனாநிதி அளித்த முதியவர்

மதுரை மாவட்ட ஆட்சியரிடம்,
இதுவரை கொரோனா நிவாரண நிதியாக ரூ. 3 லட்சம் வரை நிதியாக வழங்கிய தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பூல்பாண்டியன்.