LatestNews
முகக் கவசம் அணியாதோரை பஸ்ஸிலிருந்து இறக ்கி விட்ட அதிகாரிகள்…
வீட்டை விட்டு வெளியே வந்தால் முககவசம் கட்டாயம்….
முககவசம் அணியாமல், பேருந்துகளில் இருந்தவர்களை இறக்கிவிட்ட தாசில்தார்…
விருதுநகர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது போக்குவரத்து துவங்கிய நிலையில், பேருந்துகளில் வந்து செல்லும் பயணிகள், பெரும்பாலும் முககவசம் அணியாமல் இருக்கின்றனர். இதனை கண்காணித்து வருவாய்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.
காரியாபட்டி பேருந்து நிலையத்தில் தாசில்தார் தனக்குமார் தலைமையில், மண்டல துணை தாசில்தார் இராஜீவ்காந்தி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் காசிமாயன், ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு முககவசம் அணிந்து வர வலியுறுத்தினர். மேலும் பேருந்துகளில் முககவசம் இல்லாத பயணிகளை இறக்கி விட்டனர். வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் வெளியில் செல்லுமாறும், வெளியிடங்களுக்கு செல்லும் போது முககவசம் அணிய வேண்டும். முககவசம் அணியாமல் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அபராதம் விதிக்கப்படும் என்று வருவாய்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.
LatestNews
கிராம மக்கள் முற்றுகை போராட்டம்..

ஆட்சியர் அலுவலக முன்பு முற்றுகை போராட்டம்:
மதுரை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட
கொம்பாரி கிராம ஊராட்சியில் உள்ள கீழக் கண்மாய் மற்றும் மேலக் கண்மாய்களுக்கு நிலையூர் – கம்பிகுடி கால்வாயிலிருந்து தொட்டியபட்டி பிரிவிலுள்ள நெடுமதுரை கடல் வழியாக மேற்சொன்ன கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க ஆவணம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தும் , தண்ணீர் திறந்து விடக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்த திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆசிக்கை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே அவரை மீண்டும் பணியிலமர்த்தக் கோரியும் கொம்பாரி
ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில்
கொம்பாரி ஊர் பொதுமக்கள் சுமார் 450 பேர் தங்களது குடும்ப அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக கூறி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுக்கை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.கி
LatestNews
திடீரென வீடு இடிந்து விழுந்தது…

மதுரை தெற்கு வாசல் மீனாட்சி டாக்கீஸ் அருகே வீடு ஒன்று திடீரென இடிந்தது.
தகவல் கிடைத்ததும், மதுரை தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.
LatestNews
ஜெயலலிதா கோயில் கும்பாபிஷேகம்..

ஜெ.கோயில் கும்பாபிசேகத்திற்கு கிராமம் கிராமாக அமைச்சர் உதயகுமார் அழைப்பு
திருமங்கலம் :
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில்ஜெ.பேரவை சார்பில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் அம்மா கோயில் என்ற பெயரில் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ.க்கு கோயில் கட்டப்படுகிறது. இதில் இருவருக்கும் 8 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், ஜன.30 ல் கும்பாபிசேகம் நடக்க உள்ளது.
இந்த கும்பாபிசேகத்திற்கு முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்காக திருமங்கலம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அமைச்சர் உதயகுமார் நேரில் சென்று கும்பாபிசேகத்தில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.