LatestNews
ஓடைப் பகுதியில் வெள்ளப் பெருக்கு..

செய்தி : ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு பேச்சியம்மன் கோவில் ஓடை பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வீடியோவால் வனத்துறை அதிர்ச்சி….
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வனப்பகுதியில் உள்ள பேச்சியம்மன் கோவில் ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பொதுமக்கள் இருப்பதுபோல் வெளியான வீடியோவால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக விவசாயிகளின் நீராதாரமாக விளங்கும் பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கண்மணிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள் ளது.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக மலை அடிவாரத்திலுள்ள சிறு சிறு ஓடைகளில் நீர்வரத்து அளவுக்கு அதிகமாக வரத் துவங்கியுள்ளது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள பேச்சியம்மன் கோவில் சிற்றோடை என்ற பகுதியில் மாலை நேரத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து துவங்கியுள்ள நிலையில் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் சிலர் ஓடையில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது நீர்வரத்து அதிகம் இருந்த காரணத்தால் ஒருவரையொருவர் கையை பிடித்துக்கொண்டு ஓடையில் இருந்து வெளியேறினர். வெளியேறிய பின்பும் அவர்களை அழைத்து வந்த வாகனம் தாமதமாக செண்பகத்தோப்பு பகுதிக்கு வந்த காரணத்தினாலும் மேலும் அப்பகுதியில் செல்போன் நெட்வொர்க் இல்லாததாலும் அவர்கள் சுமார் இரண்டு மணி நேரம் செண்பகத்தோப்பு வாகனம் நிறுத்தும் இடத்திலேயே நின்றிருந்தனர்.
தொடர்ந்து அவர்களை அழைத்து வந்த வாகனம் வந்ததையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து கோவிலுக்கு வந்த பொதுமக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதிக்கு வந்தனர். இதனிடையே பேச்சியம்மன் ஓடையில் நீர் வந்தது தெரியாமலும் சாமி கும்பிட வந்தவர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறாமல் இருந்ததையும் காலதாமதமாக அறிந்துகொண்ட வனத்துறை செய்வதறியாமல் திகைத்தனர். தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் பொதுமக்களை எச்சரித்து இனிவரும் காலங்களில் தங்களின் அனுமதியின்றி பேச்சியம்மன் கோவிலுக்கு செல்லக்கூடாது என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். நீர்வரத்து கட்டுக்குள் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
LatestNews
சகதியில் சிக்கி தவித்த மாடு மீட்பு…

வடுகபட்டியில்
சேறுசகதியில்சிக்கிதவித்த
பசுமாடு மீட்பு:
வாடிப்பட்டி,மார்ச்:4.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடுகபட்டி முத்தாலம்மன்கோவில்தெருவை
சேர்ந்தவர் பெரியகருப்பன் மகன் பவுன் பாண்டியன்(35)விவசாயி. இவர் பசுமாடு
வளர்த்துவருகிறார் அந்த மாடு தற்போது சினைபிடித்துள்ளது. இந்நிலையில்
நேற்று காலை 10மணிக்கு வடுகபட்டி அரிசிஆலை எதிரில் உள்ள
பெரியாறுபாசனகால்வாய் ஓடையில் மாட்டினை குளிப்பாட்டிக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சேரும்சகதியும்நிறைந்த புதைகுழிக்குள் மாடு
சிக்கிக்கொண்டது. உடனே அதை மீட்கமுயற்சித்தார் அவரால் முடியவில்லை. அந்த
புதைகுழியில் மாட்டின் கால்முழுவதும் உள்ளே இழுத்துக்கொண்டது இதனால், மாடு
எழமுடியாமல் அவதியடைந்தது.
இது சம்மந்தமாக தகவலறிந்த, வாடிப்பட்டி
தீயணைப்பு நிலைய அதிகாரி சதகத்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள்
1மணிநேரம் போராடி புதைகுழிக்குள் சிக்கியிருந்த சினைமாட்டினை மீட்டனர்.
LatestNews
போலீஸ் கொடி அணிவகுப்பு…

திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள அவனியாபுரம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொடி அணிவகுப்பு பேரணி :
மதுரை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி மேல்நிலைப் பள்ளியில் இருந்து கொடி அணிவகுப்பு புறப்பட்டு அவனியாபுரம் பேருந்து நிலையம் கணக்குப்பிள்ளை தெரு பெரியார் நகர் இம்மானுவேல் நகர் பிரசன்னா காலனி வழியாக அவனியாபுரம் சிஎஸ் நகரில் பேரணி முடிவு பெற்றது.
இதில் , மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் துணை கமாண்டன்ட் ஜிந்தா தலைமையில் 75 வீரர்களும் , திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர் சிவராஜ் பிள்ளை மற்றும் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பெத்துராஜ், சார்பு ஆய்வாளர் தண்டீஸ்வரர், தமிழ்ச்செல்வம் அடங்கிய போலீசார் கொடி அணிவகுப்பு பேரணியில் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய சிறப்பு காவல் படை வீரர்கள் அணி வகுப்பை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
LatestNews
வாக்கு மையங்கள் ஆய்வு…

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தேர்தல் வாக்கு மையங்கள் ஆய்வு:
சோழவந்தான்
வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் மற்றும் தென்கரை வருவாய் உட் கோட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள வாக்குச் சாவடி மையங்களை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். இதில், வாடிப்பட்டி தாசில்தார் பழனி குமார் தலைமை நில அளவையாளர் செந்தில் தேர்தல் துணை வட்டாட்சியர் இசக்கிமுத்து வருவாய் ஆய்வாளர்கள் அழகுகுமார் ராஜன் கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயப்பிரகாஷ் முத்துக்குமரன் மணிவேல் சூசைஞானசேகரன் முபரக் சுல்தான் பழனி வெங்கடேசன் கார்த்திக் செல்வமணி சுரேஷ் கார்த்திஸ்வரி முத்துராமலிங்கம் பாண்டி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர் .
மொத்த வாக்காளர்கள் 2180 87 இதில், ஆண்கள் வாக்காளர்கள் 107097 பெண் வாக்காளர்கள் 110 363 மற்றவர்கள் 10 மொத்த வாக்கு மையம் 126 உள்ளன இதில் 70 மையங்களை பார்வையிட்டனர் கட்டட தன்மை கழிப்பறை வசதி மின்வசதி காற்றோட்ட வசதி உட்பட அடிப்படை வசதிகள் எவ்வாறு உள்ளன என்று ஆய்வு செய்தனர்