LatestNews
பண்ணீர்செல்வமான பேச்சீமுத்து.

பேச்சிமுத்து பன்னீர்செல்வமாக மாறியது!!
பெரியகுளத்து நாயகனே! இந்த வார்த்தையை சொன்னவுடனே முதலில் நமக்கு ஞாபகத்திற்கு வருவது ஓபிஎஸ் தான். இரண்டு முறை ஓபிஎஸ் ஐயாவை சட்டமன்ற உறுப்பினராக்கிய தொகுதி பெரியகுளம். பிறந்து வளர்ந்தது எல்லாம் பெரியகுளம் என்றாலும், இவருக்கு பூர்வீகம் ஸ்ரீவில்லிபுத்தூர்.
வறுமையால் வாடிய இவரது முன்னோர்கள் “ஊர்விட்டு ஊர்மாறினால் நல்ல காலம் பிறக்கும்” எனக்கருதி புலம்பெயர்ந்த ஊரே பெரியகுளம்.
பெரியகுளத்தில் விவசாயத்தை முக்கியத் தொழிலாக பார்த்து வந்த ஓபிஎஸ் அவர்களின் தந்தை ஓட்டக்காரத் தேவர், பழனியம்மாள் என்ற உறவுக்காரப் பெண்ணையே திருமணம் புரிந்தார்.
இத்தம்பதியருக்கு மூத்த மகனாக 1951 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைத்திருநாளன்று (14-01-1951) பிறந்தவரே பேச்சிமுத்து என்ற பன்னீர்செல்வம்.
பேச்சிமுத்து என்பதே ஓபிஎஸ் ஐயாவின் இயற்பெயர். இப்பெயர் சூட்டியதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.
ஒன்று, பொதுவாக தங்களது குலதெய்வப் பெயரையே குடும்ப வாரிசுகளுக்கு பெயர் சூட்டும் வழக்கத்தை இவர்களது குடும்பம் மேற்கொண்டு வந்ததால், மூத்த குழந்தையான ஓபிஎஸ் ஐயாவிற்கும் பேச்சிமுத்து எனப் பெயர் சூட்டினர்.
இன்னொரு காரணம் ஓபிஎஸ் ஐயா அவர்களின் பெரியப்பா பெயரும் பேச்சிமுத்து. அந்த காலத்தில் பெரியகுளம் முனிசிபாலிட்டி துணை சேர்மன் போன்ற முக்கியப் பொறுப்புகளை வகித்து ஊர் மெச்ச பல சிறப்புகளை பெற்றார் இவர்.
அவரைப் போலவே இக்குழந்தையும் பல புகழ்ச்சிகளைப் பெற வேண்டும் என்பதால் இவர்க்கு இப்பெயர் சூட்டப்பட்டது. அதன் படியே பின்னாளில் இக்குழந்தை ஒரு மாநிலத்தையே ஆண்டது என்பது வரலாறு.
இயற்பெயரான பேச்சிமுத்து பன்னீர்செல்வமாக மாறியது எப்போது?
பேச்சிமுத்து…
பேச்சிமுத்து… என சொந்தபந்தங்கள் அக்குழந்தையை பாராட்டி அழைத்து வந்தாலும் ஓபிஎஸ் அவர்களின் பாட்டி மட்டும்
பன்னீர்… பன்னீர்… என அழைத்து வந்தார்.
பின்னாளில் பன்னீரோடு சேர்த்து செல்வம் என்ற பெயரையும் இணைத்து
பன்னீர்செல்வம்…
பன்னீர்செல்வம்… என சூட்டி அவர் அழைத்தது அனைவரையும் கவர,
பாட்டியோடு சேர்ந்து அனைவரும் பன்னீர்செல்வம் என அழைத்து வரலானார்கள்.
அந்த பேச்சிமுத்து என்ற பன்னீர்செல்வம் தான் பின்னாளில் மூன்றுமுறை தமிழ்நாட்டை ஆண்டு, இன்றும் மக்கள் மனங்களை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அதிமுகவின் மூன்றாம் தலைமுறையாக புரட்சித்தலைவர் உருவாக்கிய மக்கள் இயக்கத்தை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
நாட்டுக்கு நான் பன்னீர் செல்வமாக இருந்தாலும்;
நம்ம ஊருக்குள்ள எப்பவும் பேச்சிமுத்து தான்
LatestNews
மாடு முட்டி ஒருவர் பலி

உலகப் புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – மாடு முட்டியதில் ஒருவர் பலி:
மதுரை
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா காணும் பொங்கல் நாளான நேற்று சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது. தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பச்சை கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் 711 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. ஒரு சுற்றுக்கு 75 நபர் வீதம் மொத்தம் 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். மாடுபிடி வீரர்களும் காளை உரிமையாளர்களும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மிக்க வீட்டு உபயோகப் பொருட்களை பரிசாக பெற்று சென்றனர். மேலும் ,இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 48 பேர் காயமடைந்தனர். இவர்களில் , 14 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் , வாடிவாசல் வழியாக காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. இந்த காளைகள் அனைத்தும் வெளியே வந்து முடிவில் காளைகளை படிப்பதற்கு அமைக்கப்பட்ட இடத்தில் காளை உதவியாளர்கள் நின்று அந்த காளைகளை பிடித்துச் சென்றனர். இப்படி காளைகளை பிடிக்க முயன்றபோது காளை தாக்கியதில் ஒரு நபருக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந் நிலையில், இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விசாரணையில் அவர் அலங்காநல்லூர் அருகே உள்ள காந்தி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் நவமணி (24) கட்டிட தொழிலாளி என்பதும் இவர் காளைக்கு உதவியாளராக வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
LatestNews
பத்திரிக்கையாளர் தாக்கு.

கோவை : கோவையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளரை தி.மு.க.,வினர் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குறிச்சி பகுதியில் நேற்று திமுக சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக., எம்.பி., ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். பொங்கல் விழா என்பதால் அந்த இடத்திற்கு செய்தியாளர் சந்திரசேகர் என்பவர் செய்தி சேகரிக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த திமுக.,வினர் சந்திரசேகரை மிரட்டியதோடு புகைப்படம் எடுக்க கூடாது என்று கூறி அவரை தாக்கியுள்ளனர்.
LatestNews
தலையாரிக்கு அரிவாள் வெட்டு..
சிவகங்கை தாலுகா அலுவலகம் முன்பு கிராம தலையாரிக்கு அரிவாள் வெட்டு. மருத்துவமனையில் அனுமதி.
சிவகங்கை அருகே பெரிய கோட்டை வழுதனி கிராமத்தில் தலையாரியாக பணிபுரிந்து வருபவர் பாண்டியன். இவர் பணிபுரியும் எல்லைப்பகுதியில் மாட்டு வண்டியில் சட்டவிரோதமாக சிலர் மணல் அள்ளி கடத்தியுள்ளனர்.இது குறித்து தலையாரி பாண்டியன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த புது குலத்தை சேர்ந்த சிவா மற்றும் அவரது நண்பர்கள், சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் இருந்த தலையாரியை அழைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அரிவாளால் தலையாரியின் கையில் வெட்டி விட்டு தப்பி ஓடி யுள்ளனர். தலையாரியின் அலறலைக் கேட்ட தாலுகா அலுவலக ஊழியர்கள் உடனடியாக அவரை சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுளார்.சம்பவம் குறித்து தலையாரி பாண்டி அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த சிவகங்கை நகர காவல் நிலையத்தினர் தப்பி ஓடிய சிவா மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
LatestNews1 month ago
கோவை வள்ளல் சாந்தி கியர்ஸ் உரிமையாளர் இற ைவனடி சேர்ந்தார்.
-
LatestNews3 months ago
வீட்டுக்குள் புகுந்து உடும்பு பிடிபட்டத ு..
-
LatestNews3 months ago
மதுரை அருகே நந்தனார், வள்ளுவர் சிலை கண்ட ுபிடிப்பு…
-
LatestNews3 months ago
தேவர் சிலை அலங்கரிப்பு..
-
LatestNews4 months ago
பாலியல் பகுதியாக மாறி வரும் வாடிப்பட்டி?