LatestNews
மதுரையில் விடுதலைகளம் அமைப்பினர் ஆர்ப்ப ாட்டம்..

சமூக வளைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி விடுதலைகளம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்:
மதுரை
அமைதியான தமிழகத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் அரசியல் சட்டத்திற்கு புறம்பாக சாதிய பிரிவினை பேசி சமூக வலைதளங்களில் சாதிய மோதல்களை தூண்டுகிற கருத்துக்களை பரப்புவோர் மீது,
குறிப்பாக தமிழகத்தில் பன்னெடுங்காலமாக தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் நாயுடு நாயக்கர் சமுதாயத்தையும் அச்சமுதாயத்தில் பிறந்து இந்த மண்ணிற்காக வாழ்ந்து இன்னுயிர் நீத்த *இந்திய சுதந்திரத்திற்காக முதல் குரல் எழுப்பிய மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனார் அவர்களையும் மதுரை மாநகரை அழகுடன் வடிவமைத்து தென்தமிழகத்தில் இந்து சமயத்தை தழைத்தோங்க வைத்த மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களையும் இழிவாக பேசியும் அவர்கள் குறித்து வரலாற்று உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்பியும் வருகிறவர்கள்* மீது பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்காத *மாநில அரசை கண்டித்தும்* உடனடியாக *தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்*
திங்கட்கிழமை காலை
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாபெரும் முற்றுகை போராட்டம் *விடுதலைக்களம்* சார்பில் விடுதலைக்களம் நிறுவனத் தலைவர் *அண்ணன் கொ நாகராஜன்* அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு தெலுங்கு சம்மேளன மாநில தலைவர்
*வெ. வேங்கடவிஜயன்* முன்னிலை வகித்தார். தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத்தலைவர் *கே.சி. திருமாறன் ஜி* தொடங்கி வைத்து தொடக்க உரையாற்றினார்.தேசிய செட்டியார் பேரவை நிறுவனத்தலைவர் *பி.எல்.ஏ . ஜெகநாத் மிஸ்ரா* முடித்து வைத்து சிறப்புரையாற்றினர். தமிழ் மாநில நாயுடு பேரவை நிறுவனத் தலைவர் *என்.கிருஷ்ணமூர்த்தி நாயுடு*, தமிழ்நாடு கம்மா நாயுடு எழுச்சி பேரவை மாநிலத் தலைவர் *எஸ். செல்வராஜ்*, விஜய நகர புரட்சி படை நிறுவனர். *வைகை பாண்டியன்*, நாயுடு மகாஜன சங்க மாநில பொருளாளர் **டாக்டர் சன்னாசி*, வெலம நாயுடு சங்க மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் *வெங்கட்ட ராமன்*, தமிழக வெலம நாயுடு இளைஞர் எழுச்சி பேரவை தலைவர் *ஏ. காளிதாஸ்*
மாமன்னர் திருமலை நாயக்கர் இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் *என். சிவன்ராஜ்* நாயக்கர், நாயுடு மகாஜன சங்க மதுரை மாவட்ட தலைவர் *சப்னா மகாராஜன்*, தமிழக நாயுடு நாயக்கர் பேரவை மாநில இளைஞர் அணித்தலைவர் *எஸ்.எஸ்.பிரேம்குமார்*, நாயக்கர் நாயுடு பேரவை நிறுவனத் தலைவர் *மெய். தனபாலன்*, தொழுவா நாயக்கர் மகாஜன சங்க
மாநிலத் தலைவர் *எஸ்.ஏ. கட்டபொம்மு ராஜா*, மாமன்னர் திருமலை நாயக்கர் பண்பாட்டு கழக நிறுவனத் தலைவர் *வி.கே. சுந்தர்ராஜன்*, தெலுங்கர் மகாஜன சங்க மாநிலத்தலைவர் *ஜி.வி. பாலமுகருகன்*, தமிழ்நாடு இளைஞர்கள் சங்க விருதுநகர் மாவட்டத்து தலைவர் *விக்னேஷ்குமார்* ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து மேற்கண்ட கோரிக்கை குறித்தான கோரிக்கை மனு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.
LatestNews
கண்மாயில் நீர் நிரப்பக் கோரி போராட்டம்…

உசிலம்பட்டி அருகே குடிநீர் ஆதாரமாக உள்ள நான்கு கண்மாய்களில் நீர் நிரப்ப வலியுறுத்தி, கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்:
மதுரை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கோவிலாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட 18 கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கோவிலாங்குளம் பெரிய கண்மாய், ஆண்டிகுளம் கண்மாய் மற்றும் கடுக்காஞ்சி, பெத்தாங்குளம் என்ற நான்கு கண்மாய்களுக்கு திருமங்கலம் பிரதான கால்வாயின் இணைப்பு கால்வாய் மூலம் நீர் நிரப்ப அரசானை பிரபிக்கப்பட்டுள்ள சூழலில் கோவிலாங்குளம் கிராமத்திலிருந்து ஜோதிமாணிக்கம் கிராம அருகே செல்லும் கால்வாய் வரை சுமார் 100 மீட்டர் தூரம் உள்ள ஆக்கிரமிப்பால் கடந்த 40 ஆண்டுகளாக கண்மாய்களுக்கு நீர் வரத்து இல்லாத நிலையே நீடிப்பதாக கூறப்படுகிறது.நீரின்றி வறண்டு காணப்படும் நான்கு கண்மாய்கள் மூலம் சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில் இருந்தாலும், இந்த கண்மாய்களை சார்ந்துள்ள 18 கிராம மக்களின் குடிநீர் தேவைக்காவது கண்மாய்களை நிரப்ப பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் ஆக்கிரமிப்பை அகற்றும் பணிக்காக வந்த அதிகாரிகள் தேர்தலை காரணம் காட்டி பணிகளை பாதியிலேயே நிறுத்தி விட்டு சென்றதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த வாரம் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்;டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்பும அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும எடுக்காததால் கோவிலாங்குளம் கிராம மக்கள் கிராமத்தில தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் எந்த அரசியல் கட்சியினரும் தங்களது கிராமத்திற்கு ஓட்டு கேட்டு வரக்கூடாது என எச்சரிக்கை விடுக்கும் கிராம மக்கள் விரைவில் நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனில் ஆதார், ரேசன் கார்டுகளை திரும்ப ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
LatestNews
வாக்குப் பதிவு இயந்திரம் செயல்முறை விளக ்கம்..

வாடிப்பட்டியில்
மின்னனுவாக்குபதிவு
செய்முறைவிளக்கம்.
வாடிப்பட்டி,மார்ச்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா தேர்தல்பிரிவு சார்பாக வரும்
சட்டமன்றதேர்தலில் மின்னனுவாக்குபதிவுசெய்யும் முறை பற்றி செய்முறை
விளக்க விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. இந்த பிரச்சாரத்தை
தேர்தல்அதிகாரி ஜெஸ்டின் ஜெயபால்,உதவிதேர்தல்அதிகாரி தாசில்தார்
பழனிக்குமார் ஆகியோரின் ஆலோசனையின்பேரில் மண்டலதுணைதாசில்தார்
திருநாவுகரசு தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். வருவாய்ஆய்வாளர்
சஞ்ஜிவீநாதன் முன்னிலை வகித்தார். கிராமநிர்வாகஅலுவலர் கார்த்திக்
வரவேற்றார். கிராமஉதவியாளர்கள் வளர்மதி, ஜெயகுமார், அழகர், சண்முகவேல்,
புஷ்பம் ஆகியோர் கலந்துகொண்டு புதியவாக்காளர்களுக்கு மின்னனுஇயந்திரம்
மூலம் வாக்குபதிவு செய்யும்முறைபற்றி விளக்கிகூறி பயிற்சியளித்து
விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.வாங
LatestNews
கொரோனாநிதி அளித்த முதியவர்

மதுரை மாவட்ட ஆட்சியரிடம்,
இதுவரை கொரோனா நிவாரண நிதியாக ரூ. 3 லட்சம் வரை நிதியாக வழங்கிய தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பூல்பாண்டியன்.