LatestNews
சிகிச்சைக்கு கட்டிய பணத்தை திருப்பி தரக் கோரி வழக்கு…

கொரோனா சிகிச்சைக்கு ரூ 8 இலட்சம் கட்டணம் கட்டிய பணத்தை திருப்ப தர உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு
மனு குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு…
மதுரை ராஜாமில் பகுதியைச் சேர்ந்த நேரு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "நானும் எனது மனைவியும் காய்ச்சல் மற்றும் தலைவலி காரணமாக மதுரை
NTC மருத்துவமனையில் டாக்டர் ராஜ்குமார் என்பவரிடம் சிகிச்சைக்காக சென்றோம். ஜூலை 7ஆம் தேதி சிகிச்சைக்காக சென்ற நிலையில், இருவருக்கும் கொரோனா நோய்க்கான அறிகுறிகள் இருப்பதால், சிகிச்சைக்காக முன்பணமாக 8 லட்ச ரூபாயை செலுத்த கூறினர்.
கொரோனா நோய்த்தொற்றின் மீதான அச்சம் காரணமாக நாங்களும் செலுத்தினோம். கொரோனோ பரிசோதனை முடிவில் கொரோனா நோய்த்தொற்று இல்லை என முடிவு வந்தது. அதைத்தொடர்ந்து முன்பணமாக செலுத்திய தொகையை கொடுக்குமாறு கேட்டோம்.
ஆனால் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மட்டும் வழங்கப்பட்டது. முன்பணமாக செலுத்திய தொகையை வழங்க கோரி பலமுறை முறையிட்டும் இதுவரை மருத்துவமனை நிர்வாகம், பணத்தை திரும்ப வழங்கவில்லை. இதுதொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, மதுரை வைத்தியநாதபுரம் பகுதியில் உள்ள NTC மருத்துவமனையின் மருத்துவர் ராஜ்குமார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு முன்பணமாக செலுத்திய தொகையை மீண்டும் வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலர், மதுரை மாவட்ட ஆட்சியர் , மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர் .
LatestNews
கண்மாயில் நீர் நிரப்பக் கோரி போராட்டம்…

உசிலம்பட்டி அருகே குடிநீர் ஆதாரமாக உள்ள நான்கு கண்மாய்களில் நீர் நிரப்ப வலியுறுத்தி, கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்:
மதுரை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கோவிலாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட 18 கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கோவிலாங்குளம் பெரிய கண்மாய், ஆண்டிகுளம் கண்மாய் மற்றும் கடுக்காஞ்சி, பெத்தாங்குளம் என்ற நான்கு கண்மாய்களுக்கு திருமங்கலம் பிரதான கால்வாயின் இணைப்பு கால்வாய் மூலம் நீர் நிரப்ப அரசானை பிரபிக்கப்பட்டுள்ள சூழலில் கோவிலாங்குளம் கிராமத்திலிருந்து ஜோதிமாணிக்கம் கிராம அருகே செல்லும் கால்வாய் வரை சுமார் 100 மீட்டர் தூரம் உள்ள ஆக்கிரமிப்பால் கடந்த 40 ஆண்டுகளாக கண்மாய்களுக்கு நீர் வரத்து இல்லாத நிலையே நீடிப்பதாக கூறப்படுகிறது.நீரின்றி வறண்டு காணப்படும் நான்கு கண்மாய்கள் மூலம் சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில் இருந்தாலும், இந்த கண்மாய்களை சார்ந்துள்ள 18 கிராம மக்களின் குடிநீர் தேவைக்காவது கண்மாய்களை நிரப்ப பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் ஆக்கிரமிப்பை அகற்றும் பணிக்காக வந்த அதிகாரிகள் தேர்தலை காரணம் காட்டி பணிகளை பாதியிலேயே நிறுத்தி விட்டு சென்றதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த வாரம் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்;டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்பும அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும எடுக்காததால் கோவிலாங்குளம் கிராம மக்கள் கிராமத்தில தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் எந்த அரசியல் கட்சியினரும் தங்களது கிராமத்திற்கு ஓட்டு கேட்டு வரக்கூடாது என எச்சரிக்கை விடுக்கும் கிராம மக்கள் விரைவில் நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனில் ஆதார், ரேசன் கார்டுகளை திரும்ப ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
LatestNews
வாக்குப் பதிவு இயந்திரம் செயல்முறை விளக ்கம்..

வாடிப்பட்டியில்
மின்னனுவாக்குபதிவு
செய்முறைவிளக்கம்.
வாடிப்பட்டி,மார்ச்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா தேர்தல்பிரிவு சார்பாக வரும்
சட்டமன்றதேர்தலில் மின்னனுவாக்குபதிவுசெய்யும் முறை பற்றி செய்முறை
விளக்க விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. இந்த பிரச்சாரத்தை
தேர்தல்அதிகாரி ஜெஸ்டின் ஜெயபால்,உதவிதேர்தல்அதிகாரி தாசில்தார்
பழனிக்குமார் ஆகியோரின் ஆலோசனையின்பேரில் மண்டலதுணைதாசில்தார்
திருநாவுகரசு தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். வருவாய்ஆய்வாளர்
சஞ்ஜிவீநாதன் முன்னிலை வகித்தார். கிராமநிர்வாகஅலுவலர் கார்த்திக்
வரவேற்றார். கிராமஉதவியாளர்கள் வளர்மதி, ஜெயகுமார், அழகர், சண்முகவேல்,
புஷ்பம் ஆகியோர் கலந்துகொண்டு புதியவாக்காளர்களுக்கு மின்னனுஇயந்திரம்
மூலம் வாக்குபதிவு செய்யும்முறைபற்றி விளக்கிகூறி பயிற்சியளித்து
விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.வாங
LatestNews
கொரோனாநிதி அளித்த முதியவர்

மதுரை மாவட்ட ஆட்சியரிடம்,
இதுவரை கொரோனா நிவாரண நிதியாக ரூ. 3 லட்சம் வரை நிதியாக வழங்கிய தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பூல்பாண்டியன்.