LatestNews
கிராமங்களில் கனிமவளம் கொள்ளை..

அலங்காநல்லூர் வட்டாரத்தில் பல கிராமங்களில் இரவு நேரங்களில் கனிமவளம் கொள்ளை
பா.ம.க. ஆட்சியரிடம் புகார்:
மதுரை
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், அலங்காநல்லூர் ஒன்றியத்தில் பல கிராமங்களில் இரவு நேரங்களில் லாரி மற்றும் டிராக்டர்களில் கனிம வளம் கொள்ளையடிக்கப்படுவதாக, பாமக மாவட்ட நிர்வாகி இரா. அழகுராஜா, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளாதாவது:
அலங்காநல்லூர் அருகேயுள்ள அழகாபுரி, இடையபட்டி, மீனாட்சிபுரம், அய்யூர், கோவில்பட்டி, பாலமேடு, கொழிஞ்சிபட்டி, ஆதனூர், முடுவார்பட்டி, வெள்ளையம்பட்டி ஆகிய இடங்களில் உள்ள பட்டாநிலங்களில், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி, இரவு நேரத்தில் மணல் மற்றும் செங்கல்சூளை மணல் ஆகியவை லாரி மற்றும் டிராக்டரில் தொடர்ந்து அள்ளப்பட்டு வருகிறது.
மேலும் ஆறு அடி வரை தோண்டப்படுவதால், கிராமங்களில் நிலத்தடி நீர் குறையவும் வாய்ப்புள்ளதாகவும், ஆகவே, மதுரை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார்.
LatestNews
கிராம மக்கள் முற்றுகை போராட்டம்..

ஆட்சியர் அலுவலக முன்பு முற்றுகை போராட்டம்:
மதுரை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட
கொம்பாரி கிராம ஊராட்சியில் உள்ள கீழக் கண்மாய் மற்றும் மேலக் கண்மாய்களுக்கு நிலையூர் – கம்பிகுடி கால்வாயிலிருந்து தொட்டியபட்டி பிரிவிலுள்ள நெடுமதுரை கடல் வழியாக மேற்சொன்ன கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க ஆவணம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தும் , தண்ணீர் திறந்து விடக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்த திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆசிக்கை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே அவரை மீண்டும் பணியிலமர்த்தக் கோரியும் கொம்பாரி
ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில்
கொம்பாரி ஊர் பொதுமக்கள் சுமார் 450 பேர் தங்களது குடும்ப அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக கூறி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுக்கை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.கி
LatestNews
திடீரென வீடு இடிந்து விழுந்தது…

மதுரை தெற்கு வாசல் மீனாட்சி டாக்கீஸ் அருகே வீடு ஒன்று திடீரென இடிந்தது.
தகவல் கிடைத்ததும், மதுரை தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.
LatestNews
ஜெயலலிதா கோயில் கும்பாபிஷேகம்..

ஜெ.கோயில் கும்பாபிசேகத்திற்கு கிராமம் கிராமாக அமைச்சர் உதயகுமார் அழைப்பு
திருமங்கலம் :
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில்ஜெ.பேரவை சார்பில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் அம்மா கோயில் என்ற பெயரில் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ.க்கு கோயில் கட்டப்படுகிறது. இதில் இருவருக்கும் 8 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், ஜன.30 ல் கும்பாபிசேகம் நடக்க உள்ளது.
இந்த கும்பாபிசேகத்திற்கு முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்காக திருமங்கலம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அமைச்சர் உதயகுமார் நேரில் சென்று கும்பாபிசேகத்தில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.