LatestNews
உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கான திட ்டம்..
புதுக்கோட்டை மாவட்டத்தில் பாரதப்பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு
நிறுவனங்களுக்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதது.:
மாவட்ட ஆட்சித்தலைவர்
பி.உமாமகேஸ்வரி தகவல்:
புதுக்கோட்டை. ஆக.30,
புதுக்கோட்டை மாவட்டத்தில் பாரதப்பிரதமரின் உணவு பதப்படுத்தும்
சிறு நிறுவனங்களுக்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து,
மாவட்ட ஆட்சித்தலைவர்
பி.உமாமகேஸ்வரி
தெரிவித்ததாவது,
புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘பாரதப்பிரதமரின் உணவு பதப்படுத்தும்
சிறு நிறுவனங்களுக்கான திட்டம்”; 2020-2021ஆம் ஆண்டு முதல் 2024-2025
வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம்
மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி
பங்களிப்புடன் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டம் மத்திய அமைச்சக உணவு பதப்படுத்தும் தொழில்துறை
வாயிலாக தமிழகத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்
வணிகத்துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. மாவட்ட அளவில்
மாவட்ட
ஆட்சித்தலைவர்
தலைமையின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட
உள்ளது.
உணவுப்பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான இத்திட்டத்தின் மூலம்
தனிநபர் அடிப்படையில்ää ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில்
ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய
நிறுவனங்கள் தொடங்குதல்ää குழு அடிப்படையில் பொது உட்டகட்டமைப்பு
வசதிகள் ஏற்படுத்தி தருதல்,
வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல்,
தொழில் நுட்ப பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.
மேலும்,
உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள்
சுய உதவி குழுக்கள் மற்றும்
கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளுக்கும் நிதி உதவி வழங்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் ஒரு சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனம்
தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிக பட்சமாக
ரூ.10 லட்சம் வரை நிதியுதவி பெறலாம். வர்த்தக முத்திரை மற்றும்
சந்தைப்படுத்துதலுக்கு ரூ.50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
மேலும் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு தேவைப்படும்
தொழில் கடன் தொகை வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.
‘ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள்” என்ற அடிப்படையில்
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முந்திரி விளை
பொருள் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபடவுள்ள சிறு
உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஆகவே மாவட்ட அளவில் ஏற்கனவே இயங்கி வரும் சிறு உணவு
பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கென
தேர்ந்தெடுக்கப்பட்ட முந்திரி விளைபொருளை பதப்படுத்தும் தொழிலில்
ஏற்கனவே ஈடுபட்டுள்ள மற்றும் புதிதாக ஈடுபட உள்ள நிறுவனங்கள்
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளை பெற்று பயனடையுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை வணிக
துணை இயக்குநரின் 94422 75726 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு
கொள்ளலாம். என்றார்.
LatestNews
விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி:
மதுரையில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி, விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட ஆட்சியர் அன்பழகன், காவல் ஆணையர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
LatestNews
மாடு முட்டி ஒருவர் பலி

உலகப் புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – மாடு முட்டியதில் ஒருவர் பலி:
மதுரை
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா காணும் பொங்கல் நாளான நேற்று சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது. தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பச்சை கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் 711 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. ஒரு சுற்றுக்கு 75 நபர் வீதம் மொத்தம் 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். மாடுபிடி வீரர்களும் காளை உரிமையாளர்களும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மிக்க வீட்டு உபயோகப் பொருட்களை பரிசாக பெற்று சென்றனர். மேலும் ,இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 48 பேர் காயமடைந்தனர். இவர்களில் , 14 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் , வாடிவாசல் வழியாக காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. இந்த காளைகள் அனைத்தும் வெளியே வந்து முடிவில் காளைகளை படிப்பதற்கு அமைக்கப்பட்ட இடத்தில் காளை உதவியாளர்கள் நின்று அந்த காளைகளை பிடித்துச் சென்றனர். இப்படி காளைகளை பிடிக்க முயன்றபோது காளை தாக்கியதில் ஒரு நபருக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந் நிலையில், இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விசாரணையில் அவர் அலங்காநல்லூர் அருகே உள்ள காந்தி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் நவமணி (24) கட்டிட தொழிலாளி என்பதும் இவர் காளைக்கு உதவியாளராக வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
LatestNews
பத்திரிக்கையாளர் தாக்கு.

கோவை : கோவையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளரை தி.மு.க.,வினர் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குறிச்சி பகுதியில் நேற்று திமுக சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக., எம்.பி., ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். பொங்கல் விழா என்பதால் அந்த இடத்திற்கு செய்தியாளர் சந்திரசேகர் என்பவர் செய்தி சேகரிக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த திமுக.,வினர் சந்திரசேகரை மிரட்டியதோடு புகைப்படம் எடுக்க கூடாது என்று கூறி அவரை தாக்கியுள்ளனர்.
-
LatestNews1 month ago
கோவை வள்ளல் சாந்தி கியர்ஸ் உரிமையாளர் இற ைவனடி சேர்ந்தார்.
-
LatestNews3 months ago
வீட்டுக்குள் புகுந்து உடும்பு பிடிபட்டத ு..
-
LatestNews3 months ago
மதுரை அருகே நந்தனார், வள்ளுவர் சிலை கண்ட ுபிடிப்பு…
-
LatestNews3 months ago
தேவர் சிலை அலங்கரிப்பு..
-
LatestNews4 months ago
பாலியல் பகுதியாக மாறி வரும் வாடிப்பட்டி?