LatestNews
மதுரையில் தர்பணம்: போலீஸார் வழக்கு
*மதுரையில் பொது ஊரடங்கு மீறி வைகை ஆற்றங்கரையில் 300 பேரைக் கொண்டு தர்ப்பணம் செய்த புரோகிதர் கைது காவல்துறை விசாரணை..!!!*
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்கள் அத்துமீறி பொது இடங்களில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் இன்று ஆடி அமாவாசை என்பதால் ஆற்றங்கரைகள்,கோவில் குளங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம் அதனால் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய கோவில்கள் ஆற்றங்கரைகளில் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டது,இந்த நிலையில் மதுரை வைகை ஆற்றங்கரையில் காவல் துறையின் அனுமதியின்றி சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வைத்து புரோகிதர் ஒருவர் தர்ப்பணம் செய்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அனைவரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தி மேலும் புரோகிதரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்,மேலும் அலட்சியமாக 300க்கும் மேற்பட்ட பொதுமக்களை ஆற்றங்கரையில் அமரவைத்து தர்ப்பணம் செய்த சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
LatestNews
விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி:
மதுரையில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி, விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட ஆட்சியர் அன்பழகன், காவல் ஆணையர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
LatestNews
மாடு முட்டி ஒருவர் பலி

உலகப் புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – மாடு முட்டியதில் ஒருவர் பலி:
மதுரை
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா காணும் பொங்கல் நாளான நேற்று சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது. தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பச்சை கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் 711 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. ஒரு சுற்றுக்கு 75 நபர் வீதம் மொத்தம் 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். மாடுபிடி வீரர்களும் காளை உரிமையாளர்களும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மிக்க வீட்டு உபயோகப் பொருட்களை பரிசாக பெற்று சென்றனர். மேலும் ,இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 48 பேர் காயமடைந்தனர். இவர்களில் , 14 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் , வாடிவாசல் வழியாக காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. இந்த காளைகள் அனைத்தும் வெளியே வந்து முடிவில் காளைகளை படிப்பதற்கு அமைக்கப்பட்ட இடத்தில் காளை உதவியாளர்கள் நின்று அந்த காளைகளை பிடித்துச் சென்றனர். இப்படி காளைகளை பிடிக்க முயன்றபோது காளை தாக்கியதில் ஒரு நபருக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந் நிலையில், இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விசாரணையில் அவர் அலங்காநல்லூர் அருகே உள்ள காந்தி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் நவமணி (24) கட்டிட தொழிலாளி என்பதும் இவர் காளைக்கு உதவியாளராக வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
LatestNews
பத்திரிக்கையாளர் தாக்கு.

கோவை : கோவையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளரை தி.மு.க.,வினர் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குறிச்சி பகுதியில் நேற்று திமுக சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக., எம்.பி., ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். பொங்கல் விழா என்பதால் அந்த இடத்திற்கு செய்தியாளர் சந்திரசேகர் என்பவர் செய்தி சேகரிக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த திமுக.,வினர் சந்திரசேகரை மிரட்டியதோடு புகைப்படம் எடுக்க கூடாது என்று கூறி அவரை தாக்கியுள்ளனர்.
-
LatestNews1 month ago
கோவை வள்ளல் சாந்தி கியர்ஸ் உரிமையாளர் இற ைவனடி சேர்ந்தார்.
-
LatestNews3 months ago
வீட்டுக்குள் புகுந்து உடும்பு பிடிபட்டத ு..
-
LatestNews3 months ago
மதுரை அருகே நந்தனார், வள்ளுவர் சிலை கண்ட ுபிடிப்பு…
-
LatestNews4 months ago
பாலியல் பகுதியாக மாறி வரும் வாடிப்பட்டி?
-
LatestNews3 months ago
தேவர் சிலை அலங்கரிப்பு..