LatestNews
மு.க. ஸ்டாலின் அரசியல் நாடகம்..அமைச்சர்

மதுரை :
திமுக மத்தியில் அமைச்சர்கள் ஆட்சியில் இருந்த பொழுது அப்பொழுதெல்லாம் நீட் தேர்வு பற்றி பேசாத மு க ஸ்டாலின், இப்பொழுது அரசியல் நாடகம் செய்து வருகிறார் என மதுரையில் கூட்டுறவு த்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி.
மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை திருமலை நாயக்கர் மஹாலிலை சுற்றியுள்ள பகுதியில் நடைபெற்று வரும் பணியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று பார்வையிட்டார். பின்பு பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்த பேட்டியின் போது,
மதுரை மாநகரில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. வைகையை சிரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து நெரிசல் மையம் பகுதியில் உள்ளதை தவிர்க்க இரு வழிச்சாலைகள் அமைக்க பட உள்ளது. இன்று திருமலை நாயக்கர் மகாலை சுற்றி அழகு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. பிஜேபியின் துணைத் தலைவி வானதி சீனிவாசன் கோயம்புத்தூர் மாவட்டத்தை இரண்டாவது தலை நகரமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளார் என்ற கேள்விக்கு,
மதுரை மாநகரை இரண்டாம் தலைநகரமாக ஆக்க வேண்டும் என்பதை முதலமைச்சரிடம் ஏற்கனவே கூறிவிட்டோம் ஆகையால் அதைப் பற்றி மீண்டும் நான் பேச விரும்பவில்லை.
வைரஸ் தொற்றோடு வாழ பழகிக் கொள்ள தான் வேண்டும் நானே பழகி கொள்ள தயாராகிவிட்டேன். நீங்கள் கூட முக கவசம் போட்டு உள்ளீர்கள், ஆனால் நான் முக கவசம் அணியவில்லை. வைரஸ் ரோடு பழகிவிட்டேன்.
எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நாங்கள் விசுவாசமாக இருந்து வைரஸ் காலத்திலும் மக்களுக்காக பணியாற்றி சிறப்பான திட்டங்களை கொடுத்துள்ளோம்.
எங்களது பணிகளைப் பார்த்து மக்கள் நிச்சயமாக தேர்தலில் எங்களை ஆதரிப்பது என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. மாநிலத்தை யார் ஆள வேண்டும் மத்தியில் யார் ஆள வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். எங்கள் பார்வை நேர் கொண்ட பார்வை .
முதலமைச்சரைப் பொறுத்தவரையில் எந்த நடவடிக்கை எடுத்தாலும் சிறப்பான நடவடிக்கை எடுப்பார். புள்ளி வைத்து கோலம் போட்டு விடுவார் எங்களது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கோடு போட்டால் ரோடு போட்டு விடுவார்.
திமுக மத்தியில் அமைச்சர்கள் ஆட்சியில் இருந்த பொழுது அப்பொழுதெல்லாம் நீட் தேர்வு பற்றி பேசாமல் இப்பொழுது அரசியல் நாடகம் செய்து வருகிறார் என தெரிவித்தார்.
LatestNews
சகதியில் சிக்கி தவித்த மாடு மீட்பு…

வடுகபட்டியில்
சேறுசகதியில்சிக்கிதவித்த
பசுமாடு மீட்பு:
வாடிப்பட்டி,மார்ச்:4.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடுகபட்டி முத்தாலம்மன்கோவில்தெருவை
சேர்ந்தவர் பெரியகருப்பன் மகன் பவுன் பாண்டியன்(35)விவசாயி. இவர் பசுமாடு
வளர்த்துவருகிறார் அந்த மாடு தற்போது சினைபிடித்துள்ளது. இந்நிலையில்
நேற்று காலை 10மணிக்கு வடுகபட்டி அரிசிஆலை எதிரில் உள்ள
பெரியாறுபாசனகால்வாய் ஓடையில் மாட்டினை குளிப்பாட்டிக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சேரும்சகதியும்நிறைந்த புதைகுழிக்குள் மாடு
சிக்கிக்கொண்டது. உடனே அதை மீட்கமுயற்சித்தார் அவரால் முடியவில்லை. அந்த
புதைகுழியில் மாட்டின் கால்முழுவதும் உள்ளே இழுத்துக்கொண்டது இதனால், மாடு
எழமுடியாமல் அவதியடைந்தது.
இது சம்மந்தமாக தகவலறிந்த, வாடிப்பட்டி
தீயணைப்பு நிலைய அதிகாரி சதகத்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள்
1மணிநேரம் போராடி புதைகுழிக்குள் சிக்கியிருந்த சினைமாட்டினை மீட்டனர்.
LatestNews
போலீஸ் கொடி அணிவகுப்பு…

திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள அவனியாபுரம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொடி அணிவகுப்பு பேரணி :
மதுரை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி மேல்நிலைப் பள்ளியில் இருந்து கொடி அணிவகுப்பு புறப்பட்டு அவனியாபுரம் பேருந்து நிலையம் கணக்குப்பிள்ளை தெரு பெரியார் நகர் இம்மானுவேல் நகர் பிரசன்னா காலனி வழியாக அவனியாபுரம் சிஎஸ் நகரில் பேரணி முடிவு பெற்றது.
இதில் , மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் துணை கமாண்டன்ட் ஜிந்தா தலைமையில் 75 வீரர்களும் , திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர் சிவராஜ் பிள்ளை மற்றும் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பெத்துராஜ், சார்பு ஆய்வாளர் தண்டீஸ்வரர், தமிழ்ச்செல்வம் அடங்கிய போலீசார் கொடி அணிவகுப்பு பேரணியில் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய சிறப்பு காவல் படை வீரர்கள் அணி வகுப்பை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
LatestNews
வாக்கு மையங்கள் ஆய்வு…

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தேர்தல் வாக்கு மையங்கள் ஆய்வு:
சோழவந்தான்
வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் மற்றும் தென்கரை வருவாய் உட் கோட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள வாக்குச் சாவடி மையங்களை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். இதில், வாடிப்பட்டி தாசில்தார் பழனி குமார் தலைமை நில அளவையாளர் செந்தில் தேர்தல் துணை வட்டாட்சியர் இசக்கிமுத்து வருவாய் ஆய்வாளர்கள் அழகுகுமார் ராஜன் கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயப்பிரகாஷ் முத்துக்குமரன் மணிவேல் சூசைஞானசேகரன் முபரக் சுல்தான் பழனி வெங்கடேசன் கார்த்திக் செல்வமணி சுரேஷ் கார்த்திஸ்வரி முத்துராமலிங்கம் பாண்டி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர் .
மொத்த வாக்காளர்கள் 2180 87 இதில், ஆண்கள் வாக்காளர்கள் 107097 பெண் வாக்காளர்கள் 110 363 மற்றவர்கள் 10 மொத்த வாக்கு மையம் 126 உள்ளன இதில் 70 மையங்களை பார்வையிட்டனர் கட்டட தன்மை கழிப்பறை வசதி மின்வசதி காற்றோட்ட வசதி உட்பட அடிப்படை வசதிகள் எவ்வாறு உள்ளன என்று ஆய்வு செய்தனர்