LatestNews
கூடுதல் கட்டிடங்கள்: அமைச்சர் ஆய்வு
கூடுதல் கட்டிடங்கள்: அமைச்சர் ஆய்வு
மதுரை, ஜூலை. 19.
மதுரை மாவட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கூடுதல் கட்டடங்கள் கட்டும் பணியை,
வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும்
தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர்
.ஆர்.பி.உதயகுமார்
ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.டி.ஜி.வினய்
தலைமையில்,
பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவிக்கையில்:
தமிழகத்தில் இன்று கோவிட்-19 கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர்
எடுத்து வருகிறார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தளர்வின்றி முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு மக்களின் ஒத்துழைப்போடு நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ,மதுரையில் தளர்வின்றி நடைபெறும் முழு ஊரடங்கில் மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். தேவையான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் அதிகமாக கூடக்கூடிய பகுதியான காய்கறி மார்க்கெட்,
மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்,
பூ மார்க்கெட்,
நெல் வணிக வளாகம்
மீன் மார்க்கெட்,
பரவை மொத்த மற்றும் சில்லரை காய்கறி மார்க்கெட் ஆகிய இடங்களில் அதிகமாக கூடாமல் இருப்பதற்காக வரைமுறைப்படுத்தி நேரக்கட்டுப்பாட்டை மார்க்கெட் சங்க உறுப்பினர்கள் தாமாக முன்வந்து செயல்படுத்தினர்.
சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கு ஒரு புதிய அணுகுமுறையை பூ மார்க்கெட்டில் மாவட்ட ஆட்சித்தலைவர்
அறிவுரையின்படி ,அதற்கான உபகரணங்களை தயார் செய்து வைத்திருக்கிறார்கள். அதை பரிசார்த்த முறையிலே பயன்படுத்தப்படுகிறது. அது நல்ல பலனை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் வீதி வீதியாக மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. மூன்று வாரங்களுக்கு முன் 5 சதவீதமாக இருந்த நோய்த்தொற்று 20 சதவீதம் வரை உயர்ந்தது. தீவிர நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டதன் காரணமாகவும்ää முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஆரம்ப நிலையிலே நோய்த்தொற்றை கண்டறிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதன் காரணமாகவும் 7 சதவீதத்திற்கும் குறைவாக நோய்த்தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அனைத்து பணிகளும் 24 மணிநேரமும் செயல்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
LatestNews
சகதியில் சிக்கி தவித்த மாடு மீட்பு…

வடுகபட்டியில்
சேறுசகதியில்சிக்கிதவித்த
பசுமாடு மீட்பு:
வாடிப்பட்டி,மார்ச்:4.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடுகபட்டி முத்தாலம்மன்கோவில்தெருவை
சேர்ந்தவர் பெரியகருப்பன் மகன் பவுன் பாண்டியன்(35)விவசாயி. இவர் பசுமாடு
வளர்த்துவருகிறார் அந்த மாடு தற்போது சினைபிடித்துள்ளது. இந்நிலையில்
நேற்று காலை 10மணிக்கு வடுகபட்டி அரிசிஆலை எதிரில் உள்ள
பெரியாறுபாசனகால்வாய் ஓடையில் மாட்டினை குளிப்பாட்டிக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சேரும்சகதியும்நிறைந்த புதைகுழிக்குள் மாடு
சிக்கிக்கொண்டது. உடனே அதை மீட்கமுயற்சித்தார் அவரால் முடியவில்லை. அந்த
புதைகுழியில் மாட்டின் கால்முழுவதும் உள்ளே இழுத்துக்கொண்டது இதனால், மாடு
எழமுடியாமல் அவதியடைந்தது.
இது சம்மந்தமாக தகவலறிந்த, வாடிப்பட்டி
தீயணைப்பு நிலைய அதிகாரி சதகத்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள்
1மணிநேரம் போராடி புதைகுழிக்குள் சிக்கியிருந்த சினைமாட்டினை மீட்டனர்.
LatestNews
போலீஸ் கொடி அணிவகுப்பு…

திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள அவனியாபுரம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொடி அணிவகுப்பு பேரணி :
மதுரை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி மேல்நிலைப் பள்ளியில் இருந்து கொடி அணிவகுப்பு புறப்பட்டு அவனியாபுரம் பேருந்து நிலையம் கணக்குப்பிள்ளை தெரு பெரியார் நகர் இம்மானுவேல் நகர் பிரசன்னா காலனி வழியாக அவனியாபுரம் சிஎஸ் நகரில் பேரணி முடிவு பெற்றது.
இதில் , மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் துணை கமாண்டன்ட் ஜிந்தா தலைமையில் 75 வீரர்களும் , திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர் சிவராஜ் பிள்ளை மற்றும் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பெத்துராஜ், சார்பு ஆய்வாளர் தண்டீஸ்வரர், தமிழ்ச்செல்வம் அடங்கிய போலீசார் கொடி அணிவகுப்பு பேரணியில் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய சிறப்பு காவல் படை வீரர்கள் அணி வகுப்பை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
LatestNews
வாக்கு மையங்கள் ஆய்வு…

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தேர்தல் வாக்கு மையங்கள் ஆய்வு:
சோழவந்தான்
வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் மற்றும் தென்கரை வருவாய் உட் கோட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள வாக்குச் சாவடி மையங்களை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். இதில், வாடிப்பட்டி தாசில்தார் பழனி குமார் தலைமை நில அளவையாளர் செந்தில் தேர்தல் துணை வட்டாட்சியர் இசக்கிமுத்து வருவாய் ஆய்வாளர்கள் அழகுகுமார் ராஜன் கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயப்பிரகாஷ் முத்துக்குமரன் மணிவேல் சூசைஞானசேகரன் முபரக் சுல்தான் பழனி வெங்கடேசன் கார்த்திக் செல்வமணி சுரேஷ் கார்த்திஸ்வரி முத்துராமலிங்கம் பாண்டி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர் .
மொத்த வாக்காளர்கள் 2180 87 இதில், ஆண்கள் வாக்காளர்கள் 107097 பெண் வாக்காளர்கள் 110 363 மற்றவர்கள் 10 மொத்த வாக்கு மையம் 126 உள்ளன இதில் 70 மையங்களை பார்வையிட்டனர் கட்டட தன்மை கழிப்பறை வசதி மின்வசதி காற்றோட்ட வசதி உட்பட அடிப்படை வசதிகள் எவ்வாறு உள்ளன என்று ஆய்வு செய்தனர்