LatestNews
வாடிப்பட்டியில் ராஜிவ்காந்தி பிறந்த தின ம்..
ராஜுவ்காந்தி பிறந்தநாள்விழா.
வாடிப்பட்டி ஆக.21.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நகர,வட்டார இ.காங்கிரஸ் சார்பாக ராஜுவ்
காந்தி பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு மாவட்டத்
துணைத்தலைவர் எஸ்.எஸ்.குருசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர்
ஜெகதீசன், மனிதஉரிமைதொகுதிதலைவர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இளைஞர்காங்கிரஸ்தொகுதிதலைவர் மணிவண்ணன் வரவேற்றார். இதில்
கட்சிநிர்வாகிகள் அழகன், முத்து, ரமேஷ், குருவன், சுந்தரபாண்டி உள்பட
பலர்கலந்துகொண்டனர். முடிவில் பழனிச்சாமி நன்றிகூறினார். தேனூரில்
நடந்த
நிகழ்ச்சிக்கு, கிராமகமிட்டி
த்தலைவர் நாகேந்திரன் தலைமை தாங்கினார்.
வட்டாரதுணைத்தலைவர் கணேசன், பொன்னுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டாரதலைவர் செந்தில்குமார் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். இதில்
பவுன்ராஜ், ஊர்காவலன், தி;னேஷ் உள்பட பலர்கலந்துகொண்டனர். முடிவில்
முத்துப்பிள்ளை நன்றிகூறினார்.
விடுதலைபோராட்டவீரர்
ஒண்டிவீரன்நினைவுநாள்.
வாடிப்பட்டி ஆக. 21.
மதுரை வடக்கு புறநகர்மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றிய ஆதித்தமிழர்பேரவை
சார்பாக விடுதலைபோராட்டவீரர் ஒண்டிவீரன் நினைவுநாள் ஆண்டிபட்டி
இந்திராகாலணியில் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர்
சரவணன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் அய்யப்பன், இளைஞரணி
ஒன்றிய செயலாளர் இனியவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய
துணைச் செயலாளர் மணிமாறன்;, தொழிலாளர்பேரவை ஒன்றிய துணைச்செயலாளர் சரவணன்
உள்பட பலர்கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றியதுணைத் தலைவர் கண்ணன் நன்றி
கூறினார். மேலும் ,தாதம்பட்டி, பொட்டுலுப்பட்டி, கச்சைகட்டி,
விராலிப்பட்டி, திருவாலவாயநல்;லுhர், வைத்தியநாதபுரம், பூச்சம்பட்டி
கிளைகளிலும் ஒண்டிவீரன் படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம்
செலுத்தப்பட்டது..
LatestNews
பூமிபூஜை

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி முடுக்கங்குளம் ஊராட்சியில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் அமைப்பதற்கான பூமி பூஜை ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி முத்துச்சாமி தலைமையில் நடைபெற்றது.
LatestNews
ராணுவ வீரர் உடலுக்கு மரியாதை
26- 2 – 21
இந்திய திபேத் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றும் மதுரை இராணுவ வீரரின் உடலுக்கு துணை இராணுவத்தினர் 39 குண்டுகள் முழங்க அஞ்சலி:
கிராமமே சோகத்தில் மூழ்கியது, கடைகள் முழுவதும் அடைப்பு.:
மதுரை
மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள பொய்கைகரைப்பட்டியினைச் சேர்ந்த பாலச்சாமி இந்திய திபேத் எல்லை பாதுகாப்பு படையில் கடந்த 14 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் வந்து கடந்த பிப்ரவரி 3ந் தேதி மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் கடந்த 24 ந் தேதி மாலையில் சத்திஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்கள் பதுக்கி வைத்திருந்த கண்ணி வெடிகளில் சிக்கி எதிர்பாராவிதமாக உயிரழந்துள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் பெங்களுரில் இருந்து துணை இராணுவ வாகனம் மூலம் தரை மார்க்கமாக சொந்த ஊரான பொய்கை கரைப்பட்டி கிராமத்திற்கு இன்று துணை இராணுவ வீரர்கள் கொண்டு வந்தனர். பின்னர் உறவினர்களிடம் பிரேத உடல் ஒப்படைக்கப்பட்டது. பிரேத உடலை பார்த்தவுடன் உறவினர்கள் கிராம மக்கள் அனைவரும் கதறி அழுதனர்.
மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பிரேத உடலுக்கு மலர் அஞ்சலி செய்து விட்டு பால்ச்சாமியின் மனைவி ராமலெட்சுமியிடம் ரூ 20 லட்சத்திற்க்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து பிரேத உடலுக்கு துணை ராணுவத்தினர் கமாண்டர் பானு பிர தாப் சிங், துணை கமாண்டர் ராஜேஸ் மீனா ஆகியோர் தலைமையில் அஞ்சலி செய்தனர் பின்னர் அவரது உடலை துணை இராணுவத்தினர் மற்றும் கிராம பொது மக்கள் மயானத்திற்க்கு சுமந்தே கொண்டு சென்றனர். அங்கு துணை இராணுவத்தினர் பிரேத உடலை சவப்பெட்டியிலிருந்து மயானத்தில் வைத்தனர். அதன் பின்னர் மூவர்ண தேசியக் கொடியினை போர்த்தினர். துணை ராணுவத்தினர் 13 பேர் வரிசையில் நின்று, 3 தடவை 39 குண்டுகள் வானை நோக்கி சுட்டனர். பிரேத உடலில் போர்த்தப்பட்ட கொடி அவரது தந்தையிடம் கமாண்டர் வழங்கினார். அதன் பின்னர் பிரேத உடல் எரியூட்டப்பட்டது.
இறந்தவருக்கு ராமலட்சும் என்ற மனைவியும் அவருக்கு நிதிக்ஸா என்ற இரன்று வயது பெண் குழந்தையும் உள்ளது. இறப்பை முன்னிட்டு பொய்கை கரைப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. கிராமங்களே சோகத்தில் மூழ்கின.
LatestNews
படம்

*மதுரை டவுன்ஹால் ரோட்டில் பயங்கர மின்னணு கடையில் பயங்கர தீ விபத்து:
மதுரை
மதுரை டவுன்ஹால் ரோடு பெருமாள் தெப்பக்குளம் அருகே மின்னணு சாதனங்கள் விற்பனை செய்யும் 200 கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இந்நிலையில் நேற்று 10.45 மணிக்கு டவுன்ஹால் ரோடு வடக்கு பெருமாள் தெப்பம் திடீரென ஒரு மின்னணு கடையில் இருந்து புகை வருவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக, டவுன் தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்
ஒரு கடையில் ஏற்பட்ட தீ மளமளவென 15க்கும் மேற்பட்ட கடைகளில் பற்றி எரிந்தது.
3 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்னணு பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
இந்த விபத்து குறித்து திடீர் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.