LatestNews
கோலம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்திய ப ெண்மணி..
மதுரையில் கோலம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண்:
மதுரை
மதுரையில் தொடர்ந்து 150 நாட்கள் வீட்டுவாசலில் கோலம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ள பெண்மணி.
மதுரை ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் போதிலட்சுமி. இவர், கடந்த ஐந்து மாதங்களாக தினசரி வீட்டு வாசலில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தீபத்துக்கு வேப்ப எண்ணையை பயன்படுத்தினால் நோய் தொற்று அகழும், குடியை கைவிட அரசு மறுவாழ்வு மையங்களை அதிகப்படுத்த வேண்டும், மதுபழக்கத்தால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும், அயராது உழைத்தால் உயர்வு தரும் போன்ற விழிப்புணர்வு வாசகங்களை, போதிலட்சுமி, தினசரி காலை வீட்டு வாசலில் கோலம் போடும் போது, விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே வழக்கமாக கொண்டுள்ளார்.
மேலும், இவர் கொரோனா விழிப்புணர்வு வாசகங்களையும், அவ்வப்போது கோலத்தின் மேலே தீட்டி வருகிறார்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த நல்ல பிரசாரம் தேவை. அந்த பிரசாரத்தையே, மக்களை கவரும் வகையில், எல்லோரும் தினசரி பார்க்கும் வகையில் தொடர்ந்து 150 நாட்களாக கோலம் வரைந்தும், அதில் ஊடே விழிப்புணர்வு வாசகங்களை வரைந்துள்ளேன் என்றார்.
இவர் செய்த இந்த புதுமையான விழிப்புணர்வானது, மதுரை ஆத்திக்குளம் பகுதியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
LatestNews
கண்மாயில் நீர் நிரப்பக் கோரி போராட்டம்…

உசிலம்பட்டி அருகே குடிநீர் ஆதாரமாக உள்ள நான்கு கண்மாய்களில் நீர் நிரப்ப வலியுறுத்தி, கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்:
மதுரை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கோவிலாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட 18 கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கோவிலாங்குளம் பெரிய கண்மாய், ஆண்டிகுளம் கண்மாய் மற்றும் கடுக்காஞ்சி, பெத்தாங்குளம் என்ற நான்கு கண்மாய்களுக்கு திருமங்கலம் பிரதான கால்வாயின் இணைப்பு கால்வாய் மூலம் நீர் நிரப்ப அரசானை பிரபிக்கப்பட்டுள்ள சூழலில் கோவிலாங்குளம் கிராமத்திலிருந்து ஜோதிமாணிக்கம் கிராம அருகே செல்லும் கால்வாய் வரை சுமார் 100 மீட்டர் தூரம் உள்ள ஆக்கிரமிப்பால் கடந்த 40 ஆண்டுகளாக கண்மாய்களுக்கு நீர் வரத்து இல்லாத நிலையே நீடிப்பதாக கூறப்படுகிறது.நீரின்றி வறண்டு காணப்படும் நான்கு கண்மாய்கள் மூலம் சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில் இருந்தாலும், இந்த கண்மாய்களை சார்ந்துள்ள 18 கிராம மக்களின் குடிநீர் தேவைக்காவது கண்மாய்களை நிரப்ப பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் ஆக்கிரமிப்பை அகற்றும் பணிக்காக வந்த அதிகாரிகள் தேர்தலை காரணம் காட்டி பணிகளை பாதியிலேயே நிறுத்தி விட்டு சென்றதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த வாரம் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்;டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்பும அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும எடுக்காததால் கோவிலாங்குளம் கிராம மக்கள் கிராமத்தில தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் எந்த அரசியல் கட்சியினரும் தங்களது கிராமத்திற்கு ஓட்டு கேட்டு வரக்கூடாது என எச்சரிக்கை விடுக்கும் கிராம மக்கள் விரைவில் நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனில் ஆதார், ரேசன் கார்டுகளை திரும்ப ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
LatestNews
வாக்குப் பதிவு இயந்திரம் செயல்முறை விளக ்கம்..

வாடிப்பட்டியில்
மின்னனுவாக்குபதிவு
செய்முறைவிளக்கம்.
வாடிப்பட்டி,மார்ச்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா தேர்தல்பிரிவு சார்பாக வரும்
சட்டமன்றதேர்தலில் மின்னனுவாக்குபதிவுசெய்யும் முறை பற்றி செய்முறை
விளக்க விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. இந்த பிரச்சாரத்தை
தேர்தல்அதிகாரி ஜெஸ்டின் ஜெயபால்,உதவிதேர்தல்அதிகாரி தாசில்தார்
பழனிக்குமார் ஆகியோரின் ஆலோசனையின்பேரில் மண்டலதுணைதாசில்தார்
திருநாவுகரசு தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். வருவாய்ஆய்வாளர்
சஞ்ஜிவீநாதன் முன்னிலை வகித்தார். கிராமநிர்வாகஅலுவலர் கார்த்திக்
வரவேற்றார். கிராமஉதவியாளர்கள் வளர்மதி, ஜெயகுமார், அழகர், சண்முகவேல்,
புஷ்பம் ஆகியோர் கலந்துகொண்டு புதியவாக்காளர்களுக்கு மின்னனுஇயந்திரம்
மூலம் வாக்குபதிவு செய்யும்முறைபற்றி விளக்கிகூறி பயிற்சியளித்து
விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.வாங
LatestNews
கொரோனாநிதி அளித்த முதியவர்

மதுரை மாவட்ட ஆட்சியரிடம்,
இதுவரை கொரோனா நிவாரண நிதியாக ரூ. 3 லட்சம் வரை நிதியாக வழங்கிய தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பூல்பாண்டியன்.