LatestNews
மதுரையில் கொரோனா குறைந்து வருகிறது..அமைச ்சர்
அரசு மருத்துவமனைகளில் அமைச்சர் மற்றும் அரசு செயலர் ஆய்வு:
மதுரை
மதுரை மாவட்டம்
திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அரசு முதன்மை செயலர் டாக்டர்.ஜெ.இராதாகிருஷ்ணன்
தலைமையில் ,
வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர்
ஆர்.பி.உதயகுமார்
கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு தொடர்பாக
ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தி தெரிவித்தாவது:
மருத்துவமனை வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்த ஆய்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர்
உத்தரவிற்கிணங்க அரசுச் செயலாளர்
வழிகாட்டு நெறிமுறைககளை வழங்குகிறார்.
ஒவ்வொரு அரசு அலுவலர்கள்
முன்கள பணியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு சேவை செய்வது குறித்து எடுத்துரைத்தார்.
இந்தியாவிலேயே அதிகமான கொரோனா காய்ச்சல் பரிசோதனை தமிழ்நாட்டில்தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு எடுத்துவரம் நடவடிக்கையின் மூலம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
மதுரை மாவட்டத்தல் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 சதவீதமாக உயர்ந்து இருந்தது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவால் மதுரை மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகர்புறங்களில் உள்ள அனைத்து இடங்களிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வீடுகளுக்கே சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்பு தற்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.5 சதவிகிதமாக குறைந்துள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை த் அரசு முதன்மை செயலர்
தெரிவிக்கையில்:
அரசு அலுவலர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மிக சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் இருந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் நடத்தப்பட்ட காய்ச்சல் முகாம்களால் நோய்த் தாக்கம் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக இரண்டு அரசாணைகள் மூலம் 150 கோடி ஒதுக்கப்பட்டது.
முன்னதாக,
வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர்
கள்ளிக்குடி வட்டம் வில்லூர் கிராமத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் மருத்துவ முகாமினை துவக்கிவைத்து பார்வையிட்டார்.
LatestNews
விழா நடத்த கோரிக்கை

விழா நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மனு:
மதுரையில் ஆலய திருவிழாவை நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மாவட்டத் தலைவர் அழகர்சாமி தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மனு அளித்தனர்.
LatestNews
கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் டீக் க டைக்காரர்…

திருப்பரங்குன்றம் அருகே கொரான இரண்டாவது அலைக்காக சோளங்குருணி கிராமத்தில் போராடும் தனி ஒருவர்:
மதுரை
முக கவசம், கப சுரக்குடி நீர் வழங்கி வரும் தன்னார்வலர்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சோளங்குருணி கிராமத்தில் வசிப்பவர் ரவிச்சந்திரன் (வயது 54) இவர் டீக்கடை தொழில் நடத்தி வருகிறார்.
தற்போது வேகமாக பரவிவரும் கொரானா தொற்று இரண்டாவது பரவலை தடுக்கும். விதமாக தன்னார்வலராக ரவிச்சந்திரன் கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
சோளங்குருணி கிராமத்தில் மட்டுமல்லாமல் சுற்றுப்புறங்களில் செல்லும் பேருந்துகளில் ஏறி பொதுமக்கள் அனைவருக்கும் முகக்கவசம் மற்றும் கப சுர குடிநீர் வழங்கி தன்னார்வலராக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
ரவிசந்திரன் ஏற்கனவே கடந்த வருடம் கொரான தொடருக்கு தனது மாருதி ஆம்னி வேனில் ஸ்பீக்கர் மைக்செட் மூலம் விழிப்புணர்வு செய்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக திருமங்கலம் காவல் உதவி கண்காணிப்பாளர் (டிஎஸ்பி ) வினோதினியிடம் பாராட்டு சான்றிதழ் , மற்றும் கேடயம் பரிசு பெற்றவர் என்பது பாராட்டுக்குரிய விஷயம்.
LatestNews
12 April, 2021 14:05

*மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்க கோரி பொதுமக்கள் போராட்டம்.!
மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறும்,கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக விழாவானது பக்தர்கள் அனுமதியின்றி ஆகமவிதிப்படி நடத்தப்பட்டது, இதனையடுத்து கொரோனா பரவல் குறைந்தநிலையில் கோவில்களில் வழிபட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா பரவல் அதிகரித்துவருவதால் இந்த ஆண்டு நடைபெறும் மதுரை சித்திரை திருவிழாவினை பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சித்திரை திருவிழா எப்போதும் போல பக்தர்கள் அனுமதியோடு நடத்தகோரியும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுரை தமுக்கம் மைதானம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்,இதில் பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிவருகின்றனர், போராட்டத்தால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர், கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு காரணத்தால் காவல்துறையினர் அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்ய இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் குண்டுகட்டாக கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.