LatestNews
கொள்முதல் நிலையம் மூடல்…நெல் மூடைகள் சே தம்

மதுரை சோழவந்தான் அருகே சித்தாலங்குடி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் மூடியதால் ஆயிரக்கணக்கான நெல் மூடைகள் சேதம் அடைந்து உள்ளதால் விவசாயிகள் வேதனை
சோழவந்தான் நெடுங்குளம் தேனூர் திருவாலவாய் நல்லூர் சித்தாலங்குடி செங்கோட்டை நகரி ரிஷபம் ஆகிய பகுதியில் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் சித்தாலங்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் குவித்து வைத்துள்ளனர் சுமார் 20 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் வெயிலிலும் மழையிலும் நனைந்து சில குவியல்களில் நெல் முளைத்திருக்கிறது இதை விவசாயிகள் கையிலெடுத்து காட்டி தங்கள் வேதனையை தெரிவித்தனர்
வயலூர் முத்துக்கருப்பன் என்பவர் தன்னுடைய 13 ஏக்கர் நிலத்தில் விளைந்த நெல் சுமார் 700 மூட்டைகள் 23 நாட்களாக நெல் கொள்முதல் நிலையத்தில் குவித்து பாதுகாத்து வருகிறார் இதுகுறித்து அவர் கூறும்போது ஏற்கனவே விவசாயம் பல இன்னல்களுக்கு இடையே செய்துவருகிறோம் விவசாயம் செய்வதற்கு கடன் வாங்கி விவசாயம் செய்து வருகிறோம் தற்போது நெல் விளைந்து அறுவடை செய்து அந்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் 23 நாட்களாக களத்தில் போட்டு நெல் கொள்முதல் நிலையம் எப்போது எடுக்கும் என்று எதிர்பார்ப்போடு இருக்கிறோம் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து மழை தண்ணீரில் நெல் முளைத்து விலை போக முடியாத நிலை வரும் முன் நெல் கொள்முதல் நிலையத்தைத் திறந்து விவசாயி கல் குவித்து வைத்துள்ள நெல் அனைத்தையும் எடைபோட்டு அதற்கான உரிய பணத்தை வழங்கி விவசாயிகளின் கண்ணீரை துடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்
இதேபோல் தேனூர் மணிகண்டன் என்ற விவசாயி சுமார் பத்து ஏக்கரில் 500 மூட்டை எடையுள்ள நெல் குவித்து வைத்திருக்கிறேன் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் 9 நாட்களாக நெல் குவியல்களை காவல் காத்து வருகிறேன் அரசு உடனடியாக விவசாயிகள் மீது கருணை காட்டி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து எங்கள் போன்றவர்களுடைய துயர் துடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
இதுபோன்ற நேரத்தில் போர்க்கால அடிப்படையில் பாரபட்சமில்லாமல் நெல் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு உரிய பணத்தை செலுத்தி விவசாயிகளுடைய துயர் துடைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்
.
LatestNews
கிராம மக்கள் முற்றுகை போராட்டம்..

ஆட்சியர் அலுவலக முன்பு முற்றுகை போராட்டம்:
மதுரை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட
கொம்பாரி கிராம ஊராட்சியில் உள்ள கீழக் கண்மாய் மற்றும் மேலக் கண்மாய்களுக்கு நிலையூர் – கம்பிகுடி கால்வாயிலிருந்து தொட்டியபட்டி பிரிவிலுள்ள நெடுமதுரை கடல் வழியாக மேற்சொன்ன கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க ஆவணம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தும் , தண்ணீர் திறந்து விடக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்த திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆசிக்கை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே அவரை மீண்டும் பணியிலமர்த்தக் கோரியும் கொம்பாரி
ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில்
கொம்பாரி ஊர் பொதுமக்கள் சுமார் 450 பேர் தங்களது குடும்ப அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக கூறி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுக்கை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.கி
LatestNews
திடீரென வீடு இடிந்து விழுந்தது…

மதுரை தெற்கு வாசல் மீனாட்சி டாக்கீஸ் அருகே வீடு ஒன்று திடீரென இடிந்தது.
தகவல் கிடைத்ததும், மதுரை தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.
LatestNews
ஜெயலலிதா கோயில் கும்பாபிஷேகம்..

ஜெ.கோயில் கும்பாபிசேகத்திற்கு கிராமம் கிராமாக அமைச்சர் உதயகுமார் அழைப்பு
திருமங்கலம் :
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில்ஜெ.பேரவை சார்பில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் அம்மா கோயில் என்ற பெயரில் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ.க்கு கோயில் கட்டப்படுகிறது. இதில் இருவருக்கும் 8 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், ஜன.30 ல் கும்பாபிசேகம் நடக்க உள்ளது.
இந்த கும்பாபிசேகத்திற்கு முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்காக திருமங்கலம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அமைச்சர் உதயகுமார் நேரில் சென்று கும்பாபிசேகத்தில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.