LatestNews
விவசாயிகளுக்கு தானிய உற்பத்தி பயிற்சி..
பாலமேட்டில் சிறுதானிய ஊட்டச்சத்து முகாம்
விவசாயிகளுக்கு நேரடி பயிற்சி
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேட்டில், தேசீய உணவு பாதுகாப்பு இயக்கம் சார்பில், கிராமப்புற விவசாயிகளுக்கான, சிறுதானிய ஊட்டசத்து முகாமானது வியாழக்கிழமை நடைபெற்றது.
கரீப் முன்பருவ சாகுபடி பற்றி விவசாயிகள் மத்தியில் எடுத்துரைக்கப்பட்டது.
பாலமேடு துணை வேளாண் விரிவாக்க மையத்தில் நடந்த இந்த முகாமுக்கு, வேளாண் வளர்ச்சி அலுவலர் வாசுகி தலைமை வகித்து, வேளாண் தொழில் நுட்பங்கள் பற்றியும், சான்று பெற்ற விதைகளையே, விவசாயிகள் பயன்படுத்த கேட்டுக் கொண்டார்.
உணவு பாதுகாப்பு திட்ட அலுவலர் ராதாகிருஷ்ணன், அலுவலர் ஆனந்தன், விதை சான்று உதவி இயக்குநர் குணசேகரன், வட்டார தொழில் நுட்ப மேலாளர் வேல்முருகன், உதவி இயக்குநர் அமினம்மாள், துணை இயக்குநர் அம்சவேணி, உதவி வேளாண் அலுவலர்கள் இந்திரஜித், ஈஸ்வரன், காதர்மொய்தீன், வட்டார உதவி தொழில் நுட்ப அலுவலர் பாலமுருகன் உள்ளிட்டோர் சிறு தானியங்களான, கம்பு, மக்காச் சோளம், கேழ்வரகு, குதிரைவாலி, வரகு, மக்காச் சோளம், துவரை ஆகிய சாகுபடியில் புதிய தொழில் நுட்பங்கள், தரமான விதைகளை பயன்படுத்துதல், தொழில் நுட்பங்கள் பற்றி, விவசாயிகள் மத்தியில் எடுத்துரைத்தனர்.
இந்த முகாமில், பாலமேடு, ராஜாக்காபட்டி, முடுவார்பட்டி உள்ளிட்ட பத்து கிராமங்களிலிருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.
LatestNews
விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி:
மதுரையில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி, விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட ஆட்சியர் அன்பழகன், காவல் ஆணையர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
LatestNews
மாடு முட்டி ஒருவர் பலி

உலகப் புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – மாடு முட்டியதில் ஒருவர் பலி:
மதுரை
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா காணும் பொங்கல் நாளான நேற்று சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது. தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பச்சை கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் 711 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. ஒரு சுற்றுக்கு 75 நபர் வீதம் மொத்தம் 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். மாடுபிடி வீரர்களும் காளை உரிமையாளர்களும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மிக்க வீட்டு உபயோகப் பொருட்களை பரிசாக பெற்று சென்றனர். மேலும் ,இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 48 பேர் காயமடைந்தனர். இவர்களில் , 14 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் , வாடிவாசல் வழியாக காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. இந்த காளைகள் அனைத்தும் வெளியே வந்து முடிவில் காளைகளை படிப்பதற்கு அமைக்கப்பட்ட இடத்தில் காளை உதவியாளர்கள் நின்று அந்த காளைகளை பிடித்துச் சென்றனர். இப்படி காளைகளை பிடிக்க முயன்றபோது காளை தாக்கியதில் ஒரு நபருக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந் நிலையில், இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விசாரணையில் அவர் அலங்காநல்லூர் அருகே உள்ள காந்தி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் நவமணி (24) கட்டிட தொழிலாளி என்பதும் இவர் காளைக்கு உதவியாளராக வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
LatestNews
பத்திரிக்கையாளர் தாக்கு.

கோவை : கோவையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளரை தி.மு.க.,வினர் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குறிச்சி பகுதியில் நேற்று திமுக சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக., எம்.பி., ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். பொங்கல் விழா என்பதால் அந்த இடத்திற்கு செய்தியாளர் சந்திரசேகர் என்பவர் செய்தி சேகரிக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த திமுக.,வினர் சந்திரசேகரை மிரட்டியதோடு புகைப்படம் எடுக்க கூடாது என்று கூறி அவரை தாக்கியுள்ளனர்.
-
LatestNews1 month ago
கோவை வள்ளல் சாந்தி கியர்ஸ் உரிமையாளர் இற ைவனடி சேர்ந்தார்.
-
LatestNews3 months ago
வீட்டுக்குள் புகுந்து உடும்பு பிடிபட்டத ு..
-
LatestNews3 months ago
மதுரை அருகே நந்தனார், வள்ளுவர் சிலை கண்ட ுபிடிப்பு…
-
LatestNews3 months ago
தேவர் சிலை அலங்கரிப்பு..
-
LatestNews4 months ago
பாலியல் பகுதியாக மாறி வரும் வாடிப்பட்டி?