LatestNews
கொரோனா தொற்று..தென்மாவட்டங்களில் அதிகரி ப்பு
வைரஸ் தொற்று பாதிப்பு தென் மாவட்டங்களில் அதிகரிப்பு…..
அச்சத்தில் பொதுமக்கள்…..
கொரோனா வைரஸ் தொற்று தென்மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வருவது, பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இன்று 283 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 10,977 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உச்சபட்சமாக சென்னையில் 1,11,054 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியுள்ளது. பத்தாயிரம் எண்ணிக்கையை கடந்த மாவட்டங்களாக செங்கல்பட்டு 18,735, திருவள்ளூர் 17,706, காஞ்சிபுரம் 12,470, மதுரை 12,195, விருதுநகர் 10,977 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தென்மாவட்டங்களில் மதுரை, விருதுநகருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடியில் 9469, தேனி 8554, திருநெல்வேலி 6801, கன்னியாகுமரி 6746, திண்டுக்கல் 4204, ராமநாதபுரம் 3719, சிவகங்கை 3053 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகரிப்பதற்கு ,பரிசோதனை முடிவுகள் தாமதமாக வருவதுதான் காரணமாக கூறப்படுகிறது. மாவட்டத்தில் எடுக்கப்படும் மாதிரிகள் மதுரை, திருநெல்வேலி, தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும், மதுரை தனியார் பரிசோதனை மையங்களிலும் ஆய்வு செய்யப்படுகிறது. சோதனை முடிவுகள் அறிவிக்க குறைந்தது ஐந்து நாட்கள் ஆவதாக கூறப்படுகிறது. இதனால் பரிசோதனைக்கு மாதிரி கொடுத்த நபர்கள் இயல்பாக வெளியில் நடமாடுவதால், பாதிப்பு கட்டுக்குள் வராமல் உள்ளது என மருத்துவக்குழுவினர் கூறுகின்றனர். எனவே விருதுநகர் மாவட்டத்தில் பரிசோதனைக் கூடங்களை அதிகப்படுத்தி, சோதனை முடிவுகளை விரைவு படுத்துவதற்கு, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
LatestNews
விழா நடத்த கோரிக்கை

விழா நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மனு:
மதுரையில் ஆலய திருவிழாவை நடத்தக்கோரி இந்து முன்னணியினர் மாவட்டத் தலைவர் அழகர்சாமி தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மனு அளித்தனர்.
LatestNews
கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் டீக் க டைக்காரர்…

திருப்பரங்குன்றம் அருகே கொரான இரண்டாவது அலைக்காக சோளங்குருணி கிராமத்தில் போராடும் தனி ஒருவர்:
மதுரை
முக கவசம், கப சுரக்குடி நீர் வழங்கி வரும் தன்னார்வலர்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சோளங்குருணி கிராமத்தில் வசிப்பவர் ரவிச்சந்திரன் (வயது 54) இவர் டீக்கடை தொழில் நடத்தி வருகிறார்.
தற்போது வேகமாக பரவிவரும் கொரானா தொற்று இரண்டாவது பரவலை தடுக்கும். விதமாக தன்னார்வலராக ரவிச்சந்திரன் கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
சோளங்குருணி கிராமத்தில் மட்டுமல்லாமல் சுற்றுப்புறங்களில் செல்லும் பேருந்துகளில் ஏறி பொதுமக்கள் அனைவருக்கும் முகக்கவசம் மற்றும் கப சுர குடிநீர் வழங்கி தன்னார்வலராக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
ரவிசந்திரன் ஏற்கனவே கடந்த வருடம் கொரான தொடருக்கு தனது மாருதி ஆம்னி வேனில் ஸ்பீக்கர் மைக்செட் மூலம் விழிப்புணர்வு செய்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக திருமங்கலம் காவல் உதவி கண்காணிப்பாளர் (டிஎஸ்பி ) வினோதினியிடம் பாராட்டு சான்றிதழ் , மற்றும் கேடயம் பரிசு பெற்றவர் என்பது பாராட்டுக்குரிய விஷயம்.
LatestNews
12 April, 2021 14:05

*மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்க கோரி பொதுமக்கள் போராட்டம்.!
மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறும்,கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக விழாவானது பக்தர்கள் அனுமதியின்றி ஆகமவிதிப்படி நடத்தப்பட்டது, இதனையடுத்து கொரோனா பரவல் குறைந்தநிலையில் கோவில்களில் வழிபட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா பரவல் அதிகரித்துவருவதால் இந்த ஆண்டு நடைபெறும் மதுரை சித்திரை திருவிழாவினை பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சித்திரை திருவிழா எப்போதும் போல பக்தர்கள் அனுமதியோடு நடத்தகோரியும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுரை தமுக்கம் மைதானம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்,இதில் பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிவருகின்றனர், போராட்டத்தால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர், கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு காரணத்தால் காவல்துறையினர் அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்ய இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் குண்டுகட்டாக கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.