LatestNews
மழை தொடர்பான முன்னேற்பாடு கூட்டம்
பருவமழையின் காரணமாக முன்னேற்பாடு கூட்டம்:
மதுரை, ஆக. 10.
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.டி.ஜி.வினய்
தலைமையில்
இன்று
நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ,மாவட்ட ஆட்சித்தலைவர்
பேசும்போது தெரிவித்ததாவது:-
மதுரை மாவட்டத்தில் வழகிழக்கு பருவமழை மூலம் அதிகம் பாதிக்கக்கூடிய இடங்களை முதலில் கண்டறியவேண்டும். ஏற்கனவே மதுரை மாவட்டத்தில் 27 இடங்கள் பாதிக்கக்கூடிய இடங்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
இதுபோன்ற இடங்களில் வருவாய்த்துறை,
உள்ளாட்சித்துறை,
காவல்துறை,
பொதுப்பணித்துறை
நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகள் கொண்ட அலுவலர்கள் குழு ஆய்வு மேற்கொண்டு தேவையான பணிகளை மேற்கொள்ளவேண்டும்.
மாநகராட்சி,
நகராட்சி,
பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் சிறுபாலங்கள்
கால்வாய்கள் போன்றவற்றில் தங்குதடையின்றி தண்ணீர் செல்ல வடிகால் வசதியினை சுத்தப்படுத்திட வேண்டும்.
பொதுப்பணித்துறை அலுவலர்கள் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடுää அணைகளின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்,
கூடுதல் மணல் மூட்டைகள்
ஜே.சி.பி. இயக்குபவர்களின் தொலைபேசி எண்கள்
மின் மர அறுவை இயந்திரங்கள்
தண்ணீர் வெளியேற்றும் மோட்டார்கள்,
கூடுதல் மின் கம்பங்கள்
தாழ்வான மின் ஒயர்களை மாற்றுதல்
படகுகள் மற்றும் நீச்சல் வீரர்கள் தயார்படுத்துதல்
அவசர கால மருத்துவக் குழுக்கள்
பயிர்சேதம்,
கால்நடை சேதங்கள் மற்றும் பாம்பு பிடிக்கும் நபர்களின் அலைபேசி எண்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தயார் நிலையில் வைத்திட வேண்டும்.
கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீரை சேமிப்பதற்கும்
அணைகள் மற்றும் ஆற்றின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தூர்வாரி
அவ்விடங்களை பலப்படுத்தி
ஆக்கிரமிப்புகள் மற்றும் தூர்வாருதல் தொடர்பாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் உரிய ஆவணங்களின் அறிக்கையை சமர்ப்பித்திட வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணித்திட வேண்டும்.
என்பன உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டன.
கூட்டத்தில் போலீஸ் எஸ்பி சுஜித்குமார், கூடுதல் ஆட்சியர் ப்ரியா பங்கஜம், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், மற்றும் இதரதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
LatestNews
போலீஸ் கொடி அணிவகுப்பு…

திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள அவனியாபுரம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொடி அணிவகுப்பு பேரணி :
மதுரை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி மேல்நிலைப் பள்ளியில் இருந்து கொடி அணிவகுப்பு புறப்பட்டு அவனியாபுரம் பேருந்து நிலையம் கணக்குப்பிள்ளை தெரு பெரியார் நகர் இம்மானுவேல் நகர் பிரசன்னா காலனி வழியாக அவனியாபுரம் சிஎஸ் நகரில் பேரணி முடிவு பெற்றது.
இதில் , மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் துணை கமாண்டன்ட் ஜிந்தா தலைமையில் 75 வீரர்களும் , திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர் சிவராஜ் பிள்ளை மற்றும் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பெத்துராஜ், சார்பு ஆய்வாளர் தண்டீஸ்வரர், தமிழ்ச்செல்வம் அடங்கிய போலீசார் கொடி அணிவகுப்பு பேரணியில் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய சிறப்பு காவல் படை வீரர்கள் அணி வகுப்பை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
LatestNews
வாக்கு மையங்கள் ஆய்வு…

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தேர்தல் வாக்கு மையங்கள் ஆய்வு:
சோழவந்தான்
வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் மற்றும் தென்கரை வருவாய் உட் கோட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள வாக்குச் சாவடி மையங்களை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். இதில், வாடிப்பட்டி தாசில்தார் பழனி குமார் தலைமை நில அளவையாளர் செந்தில் தேர்தல் துணை வட்டாட்சியர் இசக்கிமுத்து வருவாய் ஆய்வாளர்கள் அழகுகுமார் ராஜன் கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயப்பிரகாஷ் முத்துக்குமரன் மணிவேல் சூசைஞானசேகரன் முபரக் சுல்தான் பழனி வெங்கடேசன் கார்த்திக் செல்வமணி சுரேஷ் கார்த்திஸ்வரி முத்துராமலிங்கம் பாண்டி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர் .
மொத்த வாக்காளர்கள் 2180 87 இதில், ஆண்கள் வாக்காளர்கள் 107097 பெண் வாக்காளர்கள் 110 363 மற்றவர்கள் 10 மொத்த வாக்கு மையம் 126 உள்ளன இதில் 70 மையங்களை பார்வையிட்டனர் கட்டட தன்மை கழிப்பறை வசதி மின்வசதி காற்றோட்ட வசதி உட்பட அடிப்படை வசதிகள் எவ்வாறு உள்ளன என்று ஆய்வு செய்தனர்
LatestNews
களைகட்டிய மாசி பொங்கல் விழா..

சிவகாசி பகுதிகளில் களை கட்டிய மாசி தெருக்கட்டுப் பொங்கல் விழா…..
சிவகாசி :
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாசி மாத தெருக்கட்டுப் பொங்கல் விழா களைகட்டியுள்ளது. சிவகாசி பகுதி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் தெருக்கட்டுப் பொங்கல் என்று கூறப்படும், முத்தாலம்மன் திருவிழா அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு தெருவிலும் நான்கு வீதிகள் சந்திக்கும் இடத்தில், மண் மற்றும் மஞ்சள், சந்தனத்தால் ஆன முத்தாலம்மன் உருவம் வடிவமைக்கப்பட்டு ஐந்து நாட்கள், 7 நாட்கள் தொடர்ச்சியாக பூஜைகள் நடத்தப்படும். இதற்காக தெருக்கள் முழுவதும் வேப்பிலை தோரணம் கட்டப்பட்டு, காப்பு கட்டி விரதம் இருந்து வருவார்கள். பெண்கள் நேர்த்திகடன் விரதம் இருந்து முளைப்பாரி வளர்த்து வருவார்கள். விழாவி்ன் நிறைவு நாளன்று தங்களது பகுதிகளிலிருந்து, சிவகாசி நகரில் நான்கு ரதவீதிகளில் முளைப்பாரி, பால்குடங்கள் ஏந்தி கருப்பசாமி கோவில், மாரியம்மன் கோவில், பத்திரகாளியம்மன் கோவில்களுக்கு ஊர்வலமாக சென்றுவந்து தங்களது பகுதியில் உள்ள முத்தாலம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள். பின்னர் பூரண அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தெருக்களில் உள்ள மக்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்வார்கள். சிறப்பு பூஜைகள் முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும். தெருக்கட்டுப் பொங்கல் ஆரம்பித்த நாள் முதல் தினமும் சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். ஒவ்வொரு தெருவில் இருக்கும் பலதரப்பட்ட மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, இந்த தெருக்கட்டுப் பொங்கல் விழா நடத்தப்படுவதாக கூறுகின்றனர். சிவகாசி நகர் பகுதியில் மட்டும் நடந்துவந்த தெருக்கட்டுப் பொங்கல், தற்போது சிவகாசியை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.