LatestNews
வறுமையால் மூதாட்டி கொலை..4 பேர் கைது
மூதாட்டி கொலை வழக்கில் திருப்பம். வறுமையால் மூதாட்டியை குடும்பமே கொன்றது அம்பலம்.. மகள் பேரன் பேத்தி உட்பட 4 பேர் கைது,, மதுரை மாவட்டம் திருமங்கலம் குண்டற்றில் நேற்று முன்தினம் எரிந்து கொண்டிருந்த நிலையில் 75 வயது மூதாட்டி உடல் மீட்டனர் இதுதொடர்பாக திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர் இது குறித்து போலீஸார் கூறும்போது… விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த விஜயகரிசல்குளம் தைச் சேர்ந்த கருப்பாயி வயது 75 இவரது கணவர் இறந்தபின் கருப்பாயி தன் குடும்பத்துடன் திருமங்கலத்தில் கடந்த 20 முன் குடியேறிவிட்டார் இரண்டாவது மகள் பழனியம்மாள் வயது 52 பூ கட்டும் தொழில் செய்துவருகிறார் பழனி அம்பாளுக்கு வைர மணி வயது 33 காளீஸ்வரி 27 என்ற மகள்களும் காளிதாஸ் வயது 30 என்ற மகனும் வைரமணி என் கணவரும் இவர்களுடன் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மூதாட்டி கருப்பாயி முதுமை காரணமாக நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் இருந்து வந்தார், தற்பொழுது.கொரோனா காரணமாக இவர்களுக்கு வேலை இல்லை இதனால் குடும்பமே வறுமை நிலை ஏற்பட்டது இதனால் மூதாட்டிக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை குடியிருந்த வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாததால் வீட்டின் உரிமையாளர் காலி செய்யக் கூறினார். கடந்த சில நாட்களாக பழனியம்மாள் குடும்பத்தினர் வேறு வீடு பார்த்து வந்தனர். வேறு வீட்டுக்கு சென்றாலும் மூதாட்டி கருப்பாயி கவனிப்பதில் ஏற்படும் சிரமங்கள் இருப்பதால் அவரை கொலை செய்து விடலாம் என குடும்பத்தினர் முடிவு செய்தனர்.. இதன்படி மகள் பழனியம்மாள் பேரன் காளிதாஸ் பேத்தி காளீஸ்வரி மருமகன் வசந்தகுமார் ஆகியோர் தலையை அழுத்தி கொன்று பின் பெட்ரோல் ஊற்றி குண்டாற்றில் வைத்து பெட்ரோல் ஊத்தி எரித்தது தெரியவந்தது நேற்றிரவு பழனியம்மாள் காளீஸ்வரி காளிதாஸ் வசந்தகுமார்,,,, திருமங்கலம் நகர காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்
LatestNews
தமிழன்னை சிலைக்கு அமைச்சர் மரியாதை:

மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி மதுரை அதிமுக மாணவரணி சார்பில் தமுக்கம் அருகே உள்ள தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ. அருகில் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் எம் எஸ் பாண்டியன் மாவட்ட பொருளாளர் ராஜா மாணவரணி செயலாளர் குமார் உள்ளிட்ட திரளான மாணவர்கள் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
LatestNews
உதயநிதிக்கு நிர்வாகம் பற்றி தெரியாது…அம ைச்சர்
*உதயநிதி ஸ்டாலின்*
*நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்*
*அவருக்கு நிர்வாகம் குறித்து எதுவும் தெரியாது*
*மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி*.
மதுரை :
மதுரையில் மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் அ.தி.மு.க.வினர், மாலையணிவித்து மரியாதை செய்தனர்.
அதன் பின் அமைச்சர் செல்லூர் ராஜு, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உதயநிதி ஸ்டாலின் ஊழல் குறித்து பேசலாமா? உதயநிதி ஸ்டாலினின் தாத்தாவும்,தந்தையும் ஊழலில் திளைத்தவர்கள். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி. உதயநிதி ஸ்டாலினுக்கு நிர்வாகத்தை பற்றி ஒன்றும் தெரியாது.
கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது முதலமைச்சர் சேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
மக்கள் தான் எஜமானார்கள். மக்கள் ஒரு முடிவெடுத்துவிட்டால் கன்னியாகுமரி முதல் சென்னை வரைஒரே முடிவாகத்தான் இருக்கும்.
சென்னையிலேயே ஸ்டாலின் ஏன் சுற்றிக்கொண்டுள்ளார். மதுரைக்கும் வர சொல்லுங்கள்.
அதிமுக நிற்கும் இடங்களில் திமுக நிற்கும் என கூறியுள்ள நிலையில் ஸ்டாலினே நின்றாலும் மக்கள் அவரை தோற்கடிக்க தயாராகி விட்டனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முறைகேடு குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரித்து வருகிறது. விசாரணையின் முடிவினை வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கூட்டணி பேச்சுவார்த்தையை முன்கூட்டியே துவங்க வேண்டும் என்ற சகோதரி பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு முதல்வர், மற்றும்துணை முதல்வர் ஆகியோரின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு விரைவில் முடிவடுத்து நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
LatestNews
இரண்டு தலைகளுடன் அதிசிய ஆட்டுக்குட்டி…

அலங்காநல்லூர் அருகே இரண்டு தலைகளுடன் அதிசிய ஆட்டுக்குட்டி:
கிராம மக்கள் வியப்பு
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணகுமார் என்பவருக்கு சொந்தமான வெள்ளாடு நேற்று ஆட்டுகுட்டிபோட்டது அது இரண்டு தலைகளுடன் பிறந்துள்ளது