LatestNews
கந்த சஷ்டி பாராயணம்

மதுரை (09.0820)
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற வேல் பூஜை கற்தசஷ்டி கவசம் பாடிய நிகழ்சியில் சமூக இடைவெளியின்றி 500 பேர் திண்டரை்.
மாநில நிர்வாகி சீனிவாசன் தற்போது கொரானா தொற்றிவிருந்து விடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
*தமிழ் கடவுள் முருகனின் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தை கண்டித்து திருப்பரங்குன்றம் கோவில் முன்பு பாஜக சார்பில் வேல் பூஜை நடத்தி , பெண்கள் கந்த சஷ்டி கவசம் பாடி விளக்கு ஏற்றி வழிபாடு செய்கின்றனர்*
கருப்பர் கூட்டம் என்றார் யூடியூப் சேனல் கந்த சஷ்டி கவசத்தினை இழிவு படுத்தி பேசியது கடந்த மாதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் கண்டனங்களையும் , போராட்டங்களும் நடத்தினர்.
இந்நிலையில் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தை கண்டித்து பாஜக சார்பாக இன்று தமிழகம் முழுவதும் வீடுதோறும் வேல் பூஜை நடத்தி வீட்டு வாசலில் திருவிளக்கேற்றி கந்த சஷ்டி கவசத்தை பாடி நூதன முறையில் போராட்டம் நடத்த பாஜக அழைப்பு விடுத்திருந்தது.
அந்த வகையில் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் முன்பு பாரதிய ஜனதா கட்சி சார்பாக பாஜகவினர் சமூக இடைவெளியின்றி கூட்டமாக திரண்டனர்.
கந்தசஷ்டி கவசம் வேல் பூஜை செய்து , பெண்கள் திருப்பரங்குன்றம் கோயில் முன்புள்ள சன்னதி தெரு மற்றும் ரத வீதிகளில் திருவிளக்கேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.
இதில் இருநூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அவர்களுடைய வீடுகள் முன்பு கடவுள் முருகன் திருவுருவ படத்திற்கு பூஜை செய்து விளக்கேற்றி பிரார்த்தனை செய்தனர். இதில் மாநில தலைவர் சீனிவாசன் , மாநகர் மாவட்ட தலைவர் சீனிவாசன் ஆகியோர் உள்பட 500 பேர் திரண்டனர், இதில் சமூக இடைவெளியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில தலைவர் சீனிவாசன் சமீபத்தில் கொரான தொற்றிலிருந்து சிகிட்சை பெற்று திரும்பினார் என்பது குறிப்பிடதக்கது.
அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் வகையில் திருப்பரங்குன்றம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..செய்தியாளர் வி .காளமேகம் மதுரை மாவட்டம்
LatestNews
கிராம மக்கள் முற்றுகை போராட்டம்..

ஆட்சியர் அலுவலக முன்பு முற்றுகை போராட்டம்:
மதுரை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட
கொம்பாரி கிராம ஊராட்சியில் உள்ள கீழக் கண்மாய் மற்றும் மேலக் கண்மாய்களுக்கு நிலையூர் – கம்பிகுடி கால்வாயிலிருந்து தொட்டியபட்டி பிரிவிலுள்ள நெடுமதுரை கடல் வழியாக மேற்சொன்ன கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க ஆவணம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தும் , தண்ணீர் திறந்து விடக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்த திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆசிக்கை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே அவரை மீண்டும் பணியிலமர்த்தக் கோரியும் கொம்பாரி
ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில்
கொம்பாரி ஊர் பொதுமக்கள் சுமார் 450 பேர் தங்களது குடும்ப அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக கூறி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுக்கை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.கி
LatestNews
திடீரென வீடு இடிந்து விழுந்தது…

மதுரை தெற்கு வாசல் மீனாட்சி டாக்கீஸ் அருகே வீடு ஒன்று திடீரென இடிந்தது.
தகவல் கிடைத்ததும், மதுரை தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.
LatestNews
ஜெயலலிதா கோயில் கும்பாபிஷேகம்..

ஜெ.கோயில் கும்பாபிசேகத்திற்கு கிராமம் கிராமாக அமைச்சர் உதயகுமார் அழைப்பு
திருமங்கலம் :
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில்ஜெ.பேரவை சார்பில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் அம்மா கோயில் என்ற பெயரில் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ.க்கு கோயில் கட்டப்படுகிறது. இதில் இருவருக்கும் 8 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், ஜன.30 ல் கும்பாபிசேகம் நடக்க உள்ளது.
இந்த கும்பாபிசேகத்திற்கு முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்காக திருமங்கலம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அமைச்சர் உதயகுமார் நேரில் சென்று கும்பாபிசேகத்தில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.