LatestNews
இயற்கை மருத்துவ முகாம்
நீதிமன்றத்தில் இயற்கை மருத்துவ முகாம்
நீதிமன்ற நிகழ்வில் கலந்து கொண்ட அனுபவம்
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இயற்கை மருத்துவ முகாம் நிகழ்வில் கலந்து கொண்டது மறக்கமுடியாத நிகழ்வாக அமைந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பாக தேவகோட்டை சார்பு நீதிமன்றத்தின் நீதிபதி முருகன் அவர்கள் இரண்டு நாட்களில் இயற்கை மருத்துவ முகாம் நடைபெறுகிறது. அதில் தாங்கள் கலந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்து இருந்தார். அந்த அடிப்படையில் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இயற்கை மருத்துவ முகாம் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தேன். தேவையான நேரத்தில் தேவையான மருத்துவ முகாம் என்பதுதான் உண்மை. அதை மிகச் சிறப்பாக யோசித்து அருமையாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்த நீதிபதி முருகன் அவர்களுக்கும், கோர்ட் அலுவலர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
திப்பிலி சூப்,இயற்கை சத்து பானங்கள் சாப்பிடுதல் :
அந்த நிகழ்வில் தேவகோட்டை மற்றும் கண்ணங்குடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் இயற்கை மருத்துவர்கள் பிரபு மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு தகவல்களை எடுத்துக் கூறினார்கள். இயற்கை மருத்துவம்,யோகா தொடர்பான தகவல்களை மிக இயல்பாக எடுத்துக் கூறினார்கள். நிகழ்வு ஆரம்பித்தவுடன் எங்களுக்கு அரசு மருத்துவமனையின் சார்பாக அதிமதுரம் கலந்த மூலிகை சாறு வழங்கப்பட்டது. மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து இயற்கை முறையிலான பயிர்வகைகள் வழங்கப்பட்டது. மீண்டும் அரை மணி நேரம் கழித்து திப்பிலி சூப்பு வழங்கப்பட்டது.
எளிய முறையில் யோகா கற்று கொடுத்த அரசு மருத்துவர்கள் :
முகாமில் யோகாவும் எங்களுக்கு மிக எளிய முறையில் பிரபு மற்றும் கார்த்திகேயன் ஆகியோரால் செய்து காண்பிக்கப்பட்டது. யோகா தொடர்பாக இன்று நான் பல்வேறு தகவல்களை கற்றுக்கொண்டேன். வாய் கொப்பளித்தல், மூச்சுப்பயிற்சி, கண் சுத்தப்படுத்துதல் போன்ற தகவல்களை நேரடியாக செய்து காண்பித்தனர் . நன்றாக மூக்குக் கழுவுதல் மூலமாக என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது, வீசிங் பிரச்சனைகள் எல்லாம் குறையும் என்கிற தகவலையும் எடுத்துக் கூறினார்கள். இந்த நிகழ்வில் கோர்ட்டில் இருந்து அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும்,வக்கீல்களும் அனைவரும் பங்கேற்றனர். முகாமில் கலந்துகொண்டரின் பல்வேறு சந்தேகங்களுக்கு அரசு மருத்துவர்கள் பதில் கூறினார்கள்.
உடல்நிலையை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் – நீதிபதி பேச்சு :
நீதிபதி முருகன் அவர்கள் நிகழ்வில் பேசியபோது , இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக திருமூலர் கூறிய தகவலைதான் இன்று நாம் இயற்கை மருத்துவ முறைகளாக பயன்படுத்துகின்றோம். தொடர்ந்து இதனை பயன்படுத்தினால் நல்ல உடல்நிலையை அடையலாம் என்று மிக எளிமையாக கூறினார்கள்.நீதிமன்றத்தில் தொடர்ந்து பணியாளர்கள் பணிக்கு வருவதால் அவர்களது பாதுகாப்பு கருதியும் ,உடல்நிலை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் தான் இயற்கை மருத்துவ முகாம் கோர்ட்டு வளாகத்தில் நடத்தப்பட்டதாக நீதிபதி அவர்கள் தெரிவித்தார். பணம்,பதவி எது இருந்தாலும் உடல்நிலை நன்றாக இருந்தால்தான் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று பேசினார்கள்.
புதிய தகவல்களை அறிந்துகொள்ள நல்ல வாய்ப்பு :
பணி அலுவலர்களின் நலன்கருதி, அவர்களின் குடும்ப நலன் கருதி மிகச்சிறப்பான முறையில் இயற்கை மருத்துவ முகாமை நீதிபதி அவர்கள் நடத்தியதற்கும் , எனக்கு இந்த நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பு அளித்ததற்கும் நீதிபதி முருகன் அவர்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இயற்கை மருத்துவ முகாமில் எங்களுக்கு பல்வேறு நாட்டு மருந்துகளையும் வழங்கினார்கள். அவை அனைத்தும் இயற்கை தொடர்பான மருந்துப் பொருள்கள். மருந்து போன்று ஒரு சொட்டு கையில் வழங்கி அதனை நன்றாக தேய்த்து மூக்கில் இழுத்தால் உள்ள சளி அனைத்தும் வெளியே வந்துவிடும் என்று தெரிவித்தார்கள். நாங்களும் அதனை வாங்கி அங்கிருந்த அனைவரும் செய்து பார்த்தோம். உண்மையிலேயே நல்ல மாற்றம் தெரிந்தது. இதுபோன்ற தகவல்கள் இன்று தான் எனக்கு தெரியும். இது போன்ற தகவல்களை நாம் நேரில் பார்த்து அதை தொட்டு உணர்ந்து கொள்ளும் போது நமக்குள் பல்வேறு நல்ல மாற்றங்களும், பல்வேறு புதிய தகவல்களும் தெரிந்து கொள்ள முடிகின்றது. இதனை நல்ல முறையில் சிந்தித்து மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த நீதிபதி முருகன் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
பாராட்டபட வேண்டிய அரசு இயற்கை மருத்துவர்கள் :
அரசு மருத்துவர்கள் பேசும்பொழுது, கொரோனா காலத்திலும் பல்வேறு இடங்களில் சென்று இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தி வருவதாகவும், கொரோனா பாதித்தவர்களுக்கு தாங்கள் சென்று யோகா பயிற்சிகள் அளித்து வருவதாகவும் தெரிவித்தார். மிகவும் போற்றப்பட வேண்டிய ஒரு நல்ல விஷயம் இது என்பது என்னுடைய கருத்து. இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
LatestNews
சலவைத்துறை அமைத்து தரக் கோரிக்கை

குடியிருக்க இடம், சலவைத் துறை கட்ட சலவைத் தொழிலாளர்கள் கோரிக்கை:
மதுரை
மதுரை வண்டியூர், சதாசிவ நகர், ராஜலட்சுமி காம்பவுண்டு ஆகிய பகுதிகளில் சலவைத் தொழில் செய்யும், தொழிலாளர்கள் டோபி கானா மற்றும் குடியிருக்க வீட்டு மனை வழங்கிடக் கோரி, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
LatestNews
படம்

மதுரை மாவட்டம். அலங்காநல்லூர் கேட்டு கடை பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று விடுதலையானதையொட்டி அ.மு.மு.க. ஒன்றிய செயலாளர் வக்கில் கோடிஸ்வரன் தலமையில் நகர செயலாளர் ராஜா பிபு. முன்னிலையில் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிடனர் இதில் அவை தலைவர் சக்கரை. ஏ.வி.ராகு/வேல்முருகன். கல்லணை சந்திரன், நீ தி அசோக். கோவிலூர் செந்தில். கொண்டயம்பட்டி பாலமுருகன்.பழனிகுமார் உள்பட பலர் கலந்துகொண்டு கொண்டாடினர்.
LatestNews
கிரைம் செய்திகள்
[26/01, 11:15 AM] Pari: மதுரையில் பைக் திருட்டு ஆசாமி
குண்டர் சட்டத்தில் கைது போலீஸ் கமிஷனர் உத்தரவு
மதுரை ஜன 26 தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
மதுரை ஆழ்வார்புரம் வைகை வடகரை சீனி நாயக்கர் தோப்பு வை சேர்ந்தவர் சிவ பாண்டி கிருஷ்ணன் மகன் பழனிவேல் பாண்டி 24 .இவர்தொடர்ந்து பைக்திருட்டு மற்றும்வழிப்பறியில் ஈடுபட்டு வந்தார்இவரது இந்ததிருட்டுசெயலை கட்டுப்படுத்தும் விதமாக போலீஸ் கமிஷனர் பிரேம்ஆனந்த்சின்காஉத்தரவின்பேரில் பவனிவேல்பாண்டியைபோலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
********
[26/01, 11:16 AM] Pari: நீச்சல் பயிற்சியின்போது சரவணப்பொய்கையில் டைவ்அடித் பயிற்சியாளர் தலையில்அடிபட்டு பலி மணி
மதுரை ஜன 26 நீச்சல் பயிற்சியின் போது டைவ்அடித்தபயிற்சியாளர் தலையில் அடிபட்டு பலியானார்.
திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் 70.இவர்திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் குழந்தைகளுக்கு தினந்தோறும் நீச்சல் பயிற்சி கொடுப்பது வழக்கமாக கொண்டிருந்தார் .இந்த நிலையில் நேற்று நீச்சல் பயிற்சி கொடுக்கும் போது சரவணப் பொய்கையில் மேல் பகுதியிலிருந்து தண்ணீருக்குள் டைவ் அடித்தார்.அப்போது குளத்தின் படிக்கட்டில்விழுந்ததால் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் பலியானார் .இந்த சம்பவம் தொடர்பாக மனைவி சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதாவுசெய்துகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
**********************
குடிப்பழக்கத்தை தந்தை கண்டித்ததால்
மகன் தூக்குப்போட்டு தற்கொலை
மதுரை ஜன 26 குளித்துவிட்டு வந்த மகனை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை நேதாஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் மகன் மணிவண்ணன் 32. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது .குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார் .இவரது பழக்கத்தை அப்பா கண்டித்ததால் மனமுடைந்த மணிவண்ணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இதுகுறித்து அப்பா பார்த்திபன் கொடுத்த புகாரின் பேரில் திடீர்நகர்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
*****************
திருப்பரங்குன்றம் கோவில் அருகே
நடந்து சென்ற பெண்ணை கத்தியால் தாக்கி செயின் பறிப்பு
மர்ம ஆசாமிக்கு வலை
மதுரை ஜன 26 திருப்பரங்குன்றம் கோயில் அருகே நடந்து சென்ற பெண்ணை கத்தியால் தாக்கி 3 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
தனக்கன்குளம் கலைஞர் நகர் ஆறாவது தெருவை சேர்ந்தவர் சுருளிவேல் மனைவி லலிதா 42. திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சென்றிருந்தார்.அவர்அங்கு உள்ள வெயில் காத்த அம்மன் கோவில் அருகே நடந்து சென்ற போது அவரை வழி மறித்த மர்ம ஆசாமி கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்து சென்று விட்டார் இந்த நகை பறிப்பு சம்பவம் குறித்து லலிதா திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
*******,**********
திருப்பரங்குன்றம் கண்மாயில்
நல்லிரவில்
மணல் திருடிய ஜேசிபி எந்திரம் லாரி பறிமுதல்
மதுரை ஜன 26 திருப்பரங்குன்றம் கண்மாயில் நல்லிரவில் மணல் திருடிய ஜேசிபி எந்திரம் ற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சுப்ரமணியபுரம் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்ஷேக்அபுபக்கர். இவர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது முனியாண்டிபுரத்தில் மாடக்குளம் கண்மாய் அருகே நள்ளிரவில் மணல் திருடிக்கொண்டிருந்தது தெரியவந்தது .அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்கு ஜெ.சி.பிஎந்திரத்தில் மணல்திருடிக்கொண்டிருந்த இரண்டு பேர் போலீஸ் வருவதை கண்டு தப்பி ஓடிவிட்டனர் .அங்கு சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணல் திருடர்கள் பயன்படுத்திய ஜேசிபி எந்திரம் மற்றும் லாரியை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஜே.சி.பி.மற்றும் லாரியைபறிமுதல்செய்தபோலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிஓடிய ஆசாமிகளை தேடிவருகின்றனர்.
**********************
மதுரை கே புதூரில்
வீட்டை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு
மதுரை ஜன 26 மதுரை கே.புதூரில்வீட்டை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கே புதூர், ராம லட்சுமி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ராஜ்மோகன் 22 .இவர்கள் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு திரும்பி வந்தனர் .அப்போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது .வீட்டில் வைத்திருந்த 300 கிராம் வெள்ளி பொருட்கள் தங்கமூக்குத்தி மற்றும் கடிகாரம் ஒன்றையும் மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இந்த திருட்டு தொடர்பாக ராஜ்மோகன் கொடுத்த புகாரின் பேரில் புதூர்போலீசார் வழக்கு பதிவு செய்து
திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
******************